சென்றவாரம் சிங்கப்பூரில் இருந்தபோது, குழு விருந்து ஒன்றிற்குச் சென்றிருந்தேன். கட்டுறுத்தப் பொறிஞர் (control engineers) கூட்டத்தாரின் நற்செயல்களைப் பாராட்டி மேலாளர் கூட்டம் வழங்கிய மதிய உணவு. ஒரு கூட்டுவேலைக்காக வந்திருந்த என்னையும் அவர்களுடன் கூட்டிக்கொண்டார்கள். கிழக்காசிய உணவை அள்ளுகுச்சிகளின் (chopsticks) வழியே உண்ணும் கலை இன்னும் கைவரப்பெற்றிருக்கவில்லை என்பதால், நான் பெரும்பாலும் எளிதாக உண்ணக்கூடிய வறுசாதம் போன்றவற்றையே தெரிவு செய்வதுண்டு. நெளியுணவு முதலியவற்றை முட்கரண்டிவழி உண்பதும்கூடச் சிக்கலான ஒன்றே. ஆனாலும் வலியவிதி ‘இங்கே என்ன நல்லா இருக்கும்’ […]
Entries Tagged as 'பயணங்கள்'
அள்ளுகுச்சி
August 1st, 2016 · Comments Off on அள்ளுகுச்சி
Tags: பயணங்கள்
புதியன புகுதலும்
January 21st, 2012 · 9 Comments
புவியீர்ப்பு விசையின்றி மிதக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தன் விருப்பமொன்றை முன்பொரு நாள் வெளிப்படுத்தினாள் நிவேதிதா. "It will be so cool! " பள்ளியில் ஏதேனும் விண்வெளி வீரர் விண்கலத்தினுள் மிதக்கும் அசைபடங்கள் காட்டப் பட்டிருக்கலாம். இல்லை அவளாகவே எங்காவது படித்திருக்கலாம். அப்போலா-13 படத்தை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்த அன்று கூடக் குப்புறப் படுத்துத் தூங்கினார்களே இருவரும்? ஒருவேளை வான்வெளியில், விண்கலத்தினுள் ஆள்களும் பொருள்களும் மிதக்கும் அக்காட்சி வரும்போது விழித்துத் தான் இருந்தார்களோ? "அந்த […]
Tags: கண்மணிகள் · பயணங்கள் · வாழ்க்கை
ஊர் நிலை
June 29th, 2009 · 16 Comments
இரண்டு, இரண்டரை வாரப் பயணமாக ஊர் போய் வந்தவனைப் பார்த்து, “ஊரெல்லாம் எப்படியப்பா இருக்கிறது?” என்று நீங்கள் கேட்டிருந்தால், ஒருவேளை “அப்படியே தாங்க இருக்கு”, என்று நான் கூறியிருந்திருக்கலாம். இன்னும் சிலரிடமோ “சுத்தமா மாறிப் போச்சுங்க” என்று முற்றிலும் முரணாகக் கூறியிருப்பேன். இரண்டு நிமிடத்தில் என்ன சொல்லவென்று யோசித்து “ஒரே கூட்டமாக இருக்குங்க” என்றோ, “இந்த வருடம் அதிக மின்வெட்டு இல்லை” என்றோ கூடக் கூறியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஊருக்குள் மொத்தமாக இருந்த பத்து வீட்டில் பட்டணத்துப் […]
இந்தியா 2008 – சென்றதும் வந்ததும்
September 16th, 2008 · 16 Comments
‘வந்துருங்க’ன்னாங்க கொஞ்சம் பேரு. இன்னும் கொஞ்சப் பேரு ‘இனிமே எங்க வரப்போறீங்க’ன்னாங்க. ‘அந்தக் காலத்துல நாம கிராமத்துல இருந்து நகரத்துக்குப் பக்கமா வந்தோமில்ல. திரும்பிப் போனோமா? அப்புடித் தான். என்ன? இவுங்க இருக்கறது கொஞ்சம் தூரமா இருக்குது. அவ்வளவு தான்…’ அப்படீன்னாரு ஒருத்தரு. எப்பவும் போல எல்லாத்துக்கும் ‘பாக்கலாங்க’ன்னு பதில் சொல்லி வச்சேன். ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முன்னாடி பாத்த ஊரு பெருசா மாறி இருக்காதுன்னு நெனச்சா ஆச்சரியந் தான் மிஞ்சும் போங்க. எங்க போனாலும் சதுரடிக் […]
Tags: கொங்கு · பயணங்கள் · வாழ்க்கை
வாஷிங்டன் முருகனுக்கு அரோகரா
April 14th, 2007 · 14 Comments
வள்ளி தேவசேனா சமேதனாகிய ஸ்ரீ சுப்பிரமணியனுக்குப் பல மூலைகளில் இருந்தும் மணியடித்துக் கொண்டிருந்தார்கள். மின்கலம் பொருத்திய முரசொன்று மூலையில் டம்ட டம்ட டம் கொட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்கத் தலைநகரத் தமிழர் கூட்டம் சிறிதாகப் புத்தாண்டை வரவேற்கப் பட்டோடும் பிறவோடும் குழுமியிருந்தது. மணியொலியும் முரசொலியும் நாசிகளில் ஏறிய நறுமணமும் ஒருபுறம் புற அறிவைச் சீண்டிக்கொண்டிருக்க, அவற்றினூடாக ஒரு அமைதியை நாடி மனம் மிதந்து கொண்டிருந்தது. தங்க விசிறியும் சாமரமும் வீச, அலங்கரிக்கப்பட்ட முருகக் கடவுள் இன்று பிறமொழி மந்திரத்தோடு […]