இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 4

Entries Tagged as 'கொங்கு'

கொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு

March 31st, 2019 · Comments Off on கொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு

ஒருவாரம் பத்துநாளாய்ச் சளி இருமல் தொல்லை நம்மைப் பிடித்துக்கொண்டது.  ”கோழிக் கொழம்பு வச்சுக் குடிப்பா”, என்றார் அம்மா. “விடுங்கம்மா, நான் பாத்துக்கறேன்”, என்று அவர் கவலையைத் தவிர்த்துவிட்டு அந்த யோசனையைப் பிடித்துக் கொண்டேன். உண்மையிற் சொல்லப் போனால், சென்ற வாரமே இவ்யோசனை நமக்குத் தோன்றியிருக்கத் தான் செய்தது. செயற்படுத்தத்தான் நேரம் வாய்க்கவில்லை. அம்மாவின் கோழிக் குழம்பு அருஞ்சுவையாய் இருக்கும். மல்லித்தூள், மசாலா வகையறா சற்று, மிகச்சற்று, தூக்கலாய் இருக்கும். அக்குழம்பைச் சுடுசோற்றில் ஊற்றிப் பிசைந்து உண்டு எழுந்தால், […]

[Read more →]

Tags: கொங்கு · பொது

இந்தியா 2008 – சென்றதும் வந்ததும்

September 16th, 2008 · 16 Comments

‘வந்துருங்க’ன்னாங்க கொஞ்சம் பேரு. இன்னும் கொஞ்சப் பேரு ‘இனிமே எங்க வரப்போறீங்க’ன்னாங்க. ‘அந்தக் காலத்துல நாம கிராமத்துல இருந்து நகரத்துக்குப் பக்கமா வந்தோமில்ல. திரும்பிப் போனோமா? அப்புடித் தான். என்ன? இவுங்க இருக்கறது கொஞ்சம் தூரமா இருக்குது. அவ்வளவு தான்…’ அப்படீன்னாரு ஒருத்தரு. எப்பவும் போல எல்லாத்துக்கும் ‘பாக்கலாங்க’ன்னு பதில் சொல்லி வச்சேன். ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முன்னாடி பாத்த ஊரு பெருசா மாறி இருக்காதுன்னு நெனச்சா ஆச்சரியந் தான் மிஞ்சும் போங்க. எங்க போனாலும் சதுரடிக் […]

[Read more →]

Tags: கொங்கு · பயணங்கள் · வாழ்க்கை

ராசா வேசம் கலைஞ்சு போச்சு

February 20th, 2008 · 30 Comments

பட்டக்காரர் தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற முட்டக்கடையில ஒடஞ்ச முட்டையப் பாதி வெலைக்கு வாங்கிச் சாப்பிட்ட கதையப் போன மாசம் ஒருநா எம்பொண்ணுங்க கிட்டச் சொல்லிக்கிட்டிருந்தேன். ரொம்ப ஒடைஞ்ச முட்டைன்னா ஒரு தூக்குப் போசில ஒடச்சு ஊத்துவாங்க. அதுக்கு இன்னும் கொஞ்சம் வெல கம்மி. இந்த ஒடஞ்ச முட்டை வாங்குற சொகுசும் எப்பவாச்சியுந்தான் கெடைக்கும். நெனச்சப்பவெல்லாம் பிரிஜ்ஜத் தொறந்து ரெவ்வெண்டு முட்டை ஒடச்சு, சுட்டோ வறுத்தோ சாப்பிட முடியற இந்தக் காலத்துல எதுக்கு அந்தப் பழங்கதை எல்லாம் சொல்லோணும்னு […]

[Read more →]

Tags: கொங்கு · சமூகம் · பொருட்பால்

பூளப்பூவும் புதுவருசப் பொங்கலும்

January 13th, 2008 · 34 Comments

“ஆவாரையச் சாப்பிட்டாச் சாவாரையா” ன்னு யாரோ சொன்னாங்கன்னு அம்மா சொன்னாங்க. தொலைபேசியில பேசுறப்போ இந்த வாரம் பொங்கலு வருதுன்னு அதுபத்தி ரெண்டு பழம பேசிக்கிட்டோம். “ஆவாரம்பூ, தல, பொடியெல்லாம் ஒடம்புக்கு ரொம்ப நல்லதாம்”. மொதல்ல இந்த வருசம் பொங்கல் நாளான்னிக்கு (சனவரி 14) வருதுன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். எப்பவும் அப்படித்தானே வரும்? பேசறப்போ, என்னமோ ஒரு இதுல மறந்துபோயி அது நாளைக்குன்னு நெனச்சுக்கிட்டு (இந்தியாவுல இன்னிக்கு), “இன்னிக்கு உங்களுக்குப் பொங்கலு!?”ன்னு பாதிக் கேள்வியும் பாதிச் செய்தியுமாச் சொல்லி வச்சேன். […]

[Read more →]

Tags: கொங்கு · வாழ்க்கை

தமிழ்மணம் என்றொரு நொண்டிக் கழுதை

December 24th, 2007 · 14 Comments

ஒரு தகப்பனும் மகனும் பக்கத்து ஊர்ச் சந்தையில் கழுதை வாங்கிவிட்டு எப்போதுமே நிம்மதியாக ஊருக்கு வந்ததாகச் சரித்திரமே இல்லை. எங்கள் வீட்டுக் கழுதைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? பலகாலம் ஆனாலும் எங்கள் கழுதைக்கு இன்னும் கூட நிம்மதியில்லை. “நொண்டிக் கழுதைன்னு சொல்றாங்களேப்பா…” என்றார் அப்பா. “ஊர்ல வேலை இல்லாத வெட்டி ஆபீசர் ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்கு என்னப்பா பண்ண முடியும். நொண்டிக் கழுதைன்னாலும் ஊர்க்காரங்க பொதிய எல்லாம் சொமந்துட்டுத் தானே இருக்கு?” “இல்ல… என்னமோ இந்தக் கழுதை […]

[Read more →]

Tags: இணையம் · கொங்கு