• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« சிக்கு விழுந்த நூல்கண்டும் சிந்தனைகளும்
எழில்மிகு செய்தியோடை »

கதைகள் மட்டும் மிஞ்சும்

Dec 3rd, 2004 by இரா. செல்வராசு

மொடா அண்டாத் தண்ணி காச்சி
மொழங் கால்மேல குப்புறப் போட்டு
முதுகுல எண்ண வச்சுச்
சூடான தண்ணியூத்தி
நீவிக் குளிச்சுட்டப்போ
சலதாரையில்
வழுக்கி உழுந்து – நான்
வீல்வீல்னு கத்துனதச்
சொல்லிச் சொல்லிச் சிரிப்பீங்க.

மங்கிலியம் கோத்திருந்த
மஞ்சக்கயிறு
மக்கிப்போயி அந்தும்போக
புதுக்கயிறு கோத்துத்தான்னு
நீங்களே சொல்லீட்டு,
சலதாரையில் கிடந்த பையன்
தாலிகட்ட வந்துட்டான்னு
கிண்டல் வேற செஞ்சீங்க.
பொக்கைவாய்க் கன்னம்
குழி உழுகச் சிரிச்சுக்கிட்டு
என் வளர்ச்சிய வியந்தீங்க.


நீங்க
படுத்திருந்த இடத்துல
பாய் சுருட்டி வச்சாச்சு
நாலு செங்கல் வச்சுச்
சூடமும் வச்சுக்
கும்பிட்டு வருசமாச்சு

இந்தக்
கதைங்க மட்டும் நெஞ்சுக்குள்ள
அங்கொண்ணும் இங்கொண்ணுமா
அமுந்து கிடக்குதுங்க
ஆத்தா.

சக்கையை எறிஞ்சுட்டுச்
சாறு மட்டும் எடுத்த மாதிரி
ஆள் மறஞ்சாலும்
கதைகள் மட்டும் மிஞ்சும்
வாழ்க்கையின் இந்த
அதிசயத்த என்
பேரப் புள்ளைங்களுக்கும்
முடிஞ்சா அவங்க
பேரப் புள்ளைங்களுக்கும்
நான் சொல்லோணும்.

நெலத்து மேல
புளுவுக்குத்
தீனியா மாறும் முன்னே
நெனச்சுப் பாத்துச்
சிரிக்கறதுக்கு
நானும் தினம்
நாலு கதை பண்ணோணும்.

* * * *
பிற்சேர்க்கை:
1. தொடர்புடைய எனது சென்ற வருடத்துப் பதிவு ஆத்தாவும் தொலைபேசியும்
2. இரா.முருகன் மொழிபெயர்த்த அருண் கொலட்கரின் கவிதை – பெரியாத்தா

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email this to a friend (Opens in new window)

Posted in கவிதைகள், வாழ்க்கை

13 Responses to “கதைகள் மட்டும் மிஞ்சும்”

  1. on 03 Dec 2004 at 7:12 am1meena

    செல்வராஜ், கவிதையும் எழுதுவீர்களா?!
    ஆத்தாவின் கதை சொல்லி நெகிழ வைத்து விட்டீர்கள்
    தொடருங்கள்

    அன்புடன்
    மீனா.

    (மரத்தடியில் பார்த்து வந்தேன்)

  2. on 03 Dec 2004 at 8:12 am2iraamaki

    மனம் நிறைய ஆட்கொண்டது; இயல்பான சொல்லோடை; இசை கொஞ்சம் கூட்டி யிருக்கலாம். நாட்டுப்புறத்தில் எல்லாமே இசை தானே? நாட்டுப் பாடல்களைக் கொஞ்சம் சொல்லிப் பழகுங்கள்.

    அன்புடன்,
    இராம.கி

  3. on 03 Dec 2004 at 11:12 am3dyno

    மிகவும் ரசித்துப் படித்தேன். இத்துனை ஆழமான உணர்ச்சிகளை சில வார்த்தைகளில் சிறைபிடித்து வீட்டீர்கள். பாராட்டுக்கள்.

    -டைனோ

  4. on 03 Dec 2004 at 11:12 am4Pari

    அழகா, இயல்பா எழுதி என்னன்னவோ ஞாபகப்படுத்திட்டீங்க…

  5. on 03 Dec 2004 at 11:12 am5பாலமுருகன்

    செல்வராஜ்,

    ஆழ்ந்த விஷயத்தை சாதாரணமாக சொல்லிட்டீங்க.
    யோசித்துப் பார்த்தால் எளிய வாழ்க்கையை
    நாம் அதிக சிக்கலாக மாற்றுகிறோமோ என்று தோன்றுகிறது.

  6. on 03 Dec 2004 at 11:12 am6karthikramas

    super pari!!

  7. on 03 Dec 2004 at 12:12 pm7PK Sivakumar

    My comments about this kavithai is at http://pksivakumar.blogspot.com/2004/12/blog-post.html

  8. on 03 Dec 2004 at 1:12 pm8செல்வராஜ்

    அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி.

    பிற்சேர்க்கை:யாக இரு சுட்டிகளைச் சேர்த்திருக்கிறேன்.
    1. தொடர்புடைய எனது சென்ற வருடத்துப் பதிவு ஆத்தாவும் தொலைபேசியும்
    2. இரா.முருகன் மொழிபெயர்த்த அருண் கொலட்கரின் கவிதை – பெரியாத்தா

    மீனா, உங்களுக்காக ஒன்று: இங்கே ஆத்தா என்பது அம்மாவைக் குறிப்பதல்ல. குறிப்பாக இங்கே எனது அம்மா(யி)யாத்தா. சுட்டியிருக்கும் பழைய பதிவைப் பார்த்தால் தெரியும்.

    இராம.கி ஐயா. உங்கள் கருத்து சரியே. இன்னும் கொஞ்சம் ஓசை நயம் கூடும்படி எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மீண்டும் படிக்கும் போது இன்னும் சில சொற்களை மாற்றிப் போட்டிருக்கலாம் என்று தோன்றியது.

    இதுவே, நீண்ட நாட்கள் கழித்துக் கவிதைப் பக்கம் வந்திருக்கிறேன். இனிமேல் மெருகூட்டிக் கொள்ள முயல்வேன்.

    டைனோ, பரி, பாலமுருகன், கார்த்திக் ராமாஸ், பிகேஎஸ் உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்களுக்கும் நன்றி. மகிழ்ச்சி.

  9. on 03 Dec 2004 at 1:12 pm9காசி

    பெரியவங்க எல்லாம் வந்துட்டுபோகட்டும் அப்புறமா வரலாம்னு இருந்துட்டேன்.
    செல்வா, ஆத்தாவைப்ப்த்தி அன்னிக்கே எழுதிக் கலங்கவெச்சீங்க, இன்னிக்கு கலங்க மட்டுமில்லாமல் கவியும் எழுதிட்டீங்க. அருமை.

    இராம.கி. அவர்கள் சொன்னமாதிரி கொஞ்சம் இசைகூட்டுங்க. வலைப்ப்திவில் ஒரு குறையே இதுதான் கொஞ்சம் அவரப்பட்டுவிடுகிறோம். சில சமயம் எழுதிப் பதிப்பித்த பின்னர் , ‘அடடா, இதை இப்படி செய்திருக்கலாமே’ என்று யோசனை எனக்கும் வந்திருக்குது. இப்பவும் ஒண்ணும் கெடுப்போகலையே இன்னொரு பதிப்பு விடுங்களேன்.
    அப்படி செய்வதானால் என்கிட்ட இன்னும் கொஞ்சம் ஆலோசனை இருக்கு, காதோடு சொல்றேன்…

    அன்புடன்,
    -காசி

  10. on 03 Dec 2004 at 2:12 pm10Balaji-paari

    Nalla irukku kavithai…
    Annaikku aaththaavai pathi padichittu innaikku intha kavithaiya patikaiyila romba niraivaa irunthuchchu. thanks.

  11. on 04 Dec 2004 at 12:12 am11செல்வராஜ்

    காசி, மறுபதிப்பு பற்றித் தெரியல்லே. ஆனால் உங்க ஆலோசனை என்னன்னு சொல்லுங்க. அடுத்த முறை பயன்படும். இதுவே இரண்டு முறை அடித்துத் திருத்தி எழுதி மூன்றாம் முறை தான் உள்ளிட்டேன். (காலையில் நாலு மணிக்கு எழுதியது காரணமாகக் கூட இருக்கலாம்). கொஞ்சம் அசை, சீர், தளைன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டா நல்லாத் தான் இருக்கும்னு யோசிக்கிறேன்.

    பாரி-பாலாஜி, உங்க கருத்துக்கும் நன்றி.

  12. on 04 Dec 2004 at 8:12 am12Jsri

    செல்வராஜ்,
    http://groups.yahoo.com/group/Maraththadi/message/22205
    http://groups.yahoo.com/group/Maraththadi/message/22209
    நீங்க என் கட்சியா, ஆசிப் கட்சியான்னு எனக்கு இப்பவே
    தெரிஞ்சாகணும். X-(

  13. on 05 Dec 2004 at 5:12 pm13"Anamikaa" Meyyappan

    arputham.

  • About

    Profile
    இரா. செல்வராசு
    விரிவெளித் தடங்கள்
    There are 292 Posts and 2,400 Comments so far.

  • Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • அ.பசுபதி on வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • இலக்குமணன் on குந்தவை
    • ராஜகோபால் அ on குந்தவை
    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries RSS
    • Comments RSS
    • WordPress.org

இரா. செல்வராசு © 2022 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook


loading Cancel
Post was not sent - check your email addresses!
Email check failed, please try again
Sorry, your blog cannot share posts by email.