• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/06 –
பத்தாயிரம் டாலர் பரிசு »

முதலுரை

Oct 25th, 2003 by இரா. செல்வராசு

நல்ல நடையில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களைப் படிக்க எனக்குப் பிடிக்கும். படிப்பதோடு இருந்து விடாமல் படைப்பவனாகவும் ஆக வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. இதுநாள் வரையில் பெரியதாய் எதுவும் எழுதிய அனுபவம் எனக்கு இல்லை என்றாலும், சிறிது சிறிது எழுதிய அனுபவங்களும், அதோடு முக்கியமாக, எழுத வேண்டும் என்கிற உந்துதலும் நிறையவே இருப்பதால், அவற்றை வைத்து என்னைச் செலுத்திக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில், இந்த வலைப் பக்கங்களில், என் எண்ணக் கிறுக்கல்களைப் பதிவு செய்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்களையும் விமரிசனங்களையும் தெரிவித்து ஆதரவளியுங்கள். நன்றி.



முதலில், எல்லோருக்கும் வணக்கம். எனது பயணம் தொடங்கிய கொங்கு நாட்டுக் கொஞ்சும் தமிழில் கூறினால், “வணக்கமுங்க” !

சுமார் 2, 3 ஆண்டுகளுக்கு முன் இந்த வலைப் பதிவு வடிவம் பிரபலமாகிக் கொண்டு இருந்த போது எனக்கும் தமிழ் வலைக்குறிப்பொன்று அமைக்க வேண்டும் என்று ஆசை. வழிமுறை சரியாகத் தெரியவில்லை. சில தளங்களில் வேற்று மொழியில் அமைக்க அனுமதியும் தரவில்லை. பிறகு இந்த ஆசையைக் கிடப்பில் போட்டுவிட்டேன் இத்தனை நாட்களாக. மிகச் சமீபத்தில் தான் தமிழ் வலைப் பதிவுகளே பரவலாக உருவாகி வருவதைக் காண முடிந்தது. இந்த 2, 3 மாதங்களாக நானும் உள்ளே குதித்து என் எண்ண அலைகளைப்(!) பரவ விட வேண்டும் என்று எண்ணியபடியே தான் இருந்தேன். ஆனால் செயல்படுத்தத் தாமதம் ஆகிக் கொண்டே போய்விட்டது.

பின்னணியில் இத்தனை நாட்களாக நிறைய வலைப் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். (என் ஓட்டு வலைப்பதிவு, வலைக்குறிப்பு இரண்டுக்கும் உண்டு. இன்னும் சிலரைப் போல, பூவில் எனக்கும் கொஞ்சம் தயக்கம். அவ்வளவாய் உடன்பாடு இல்லை). செயலிகள், எழுத்துருக்கள், தானிறங்கிகள், யூனிகோடு, தகுதரம் என்று பலவாரானவற்றைப் பற்றியும் பார்த்துக் கொண்டு இருந்தேன். சில சோதனைகளும் செய்து கற்றுக் கொள்ளலாம் என்றும் சில பின்னணி வேலைகள் செய்து கொண்டிருந்தேன். நாலைந்து நாள் கழித்துத் தான் வெளியுலகிற்குத் தெரியப் படுத்த வேண்டும் என்று எண்ணிச் சோதனை வடிவத்தில் வைத்திருக்க அதற்குள் சிலர் வந்து பார்த்துப் பின்னூட்டமும் அளித்து விட்டனர். அதனால், இனியும் தாமதிக்கலாகாது என்று இதோ முடிவான என் முதலுரை.

கிறுக்கல்கள் தொடரும்…

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in பொது

One Response to “முதலுரை”

  1. on 29 Dec 2004 at 9:12 pm1என் எண்ணக் கிறுக்கல்கள் - செல்வராஜ் » வலைப்பதிவா வலைக்குறிப்பா ?

    […] வித்து வந்திருக்கிறேன். என்னுடைய முதல் பதிவிலும் இது பற்றி எழுதி இருக்க […]

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook