• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/03 –
இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/05 – »

இனிய தோழி சுனந்தாவிற்கு…! -1/04-

Jun 29th, 1993 by இரா. செல்வராசு

இனிய தோழி சுனந்தா,


‘எல்லாம் நன்மைக்கே’ என்பது எனது தாரக மந்திரம் சுனந்தா ! உனது அன்னை கூட உன்னிடம் அடிக்கடி அப்படிக் கூறுவதாய் எழுதி இருந்தாய். நாங்கள் இருவரும் ஒரே நாளில் (ஆக 19) பிறந்தவர்களல்லவா! அதனால் எங்கள் எண்ணங்கள் கூடப் பல சமயம் ஒத்துத் தான் இருக்கும். 🙂 :-). ஆகா, அவர்கள் கைச் சமையலில் செய்த உணவை உண்டு எத்தனை நாட்கள் ஆயிற்று !


சில தினங்களாய் உனக்கு உடல் நிலை சற்றுச் சரி இல்லை என்று நீ எழுதி இருந்தாய். தோழி, உடம்பை நன்கு கவனித்துக் கொள் என்று உனக்கு நான் கூற வேண்டியதில்லை. “சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்” என்று எனக்குப் போதித்தவளே நீ தான். அதனால் உனது உடல் முன்னேற்றத்தில் நீ சரியான அக்கறை செலுத்துவாய் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

வீணில் கவலைப் படாதே. மனசு தளர்ந்துவிடாதே. மனசு சந்தோஷமாய் இருந்தால் பாதி நோய் காணாமல் போய் விடும். எப்படியாவது உற்சாகமாய் இருக்க முயற்சி செய். படி. பாரதியைப் படி. கவிதை படை. நல்ல சங்கீதம் கேள். காலாறச் சற்று நடந்து தென்றலைத் தழுவி வா. மனசுக்குப் பிடித்தவர்களுக்குக் கடிதம் எழுது. ஏதாவது.

கவலைப் படாதே. உனக்கு விரைவில் குணமாகும். ஏற்கனவே சற்றுக் குணமாகி வருவதாய் எழுதி இருந்தாய். இந்தக் கடிதம் உன்னை வந்து சேர்வதற்குள் உனக்குப் பூரண குணம் ஆகி விட வேண்டும். உன்னை அறிந்த நல்லோர் பலரும் அப்படித் தான் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அந்த எண்ணங்களின் கூட்டுச் சக்தி நிச்சயம் உனக்கு உறுதுணையாய் இருக்கும்.

நீ வலியால் துடிப்பதைத் தன் கண்ணால் கண்ட பிறகும், ஒரு தாயின் உள்ளம், தனது வேதனையையும் மிஞ்சி, ‘இதுவும் கூட நன்மைக்காகத் தான் இருக்கும்’, என்று கூறுகிறது என்றால்… எனக்கு அந்த மந்திரத்தின் மீது இன்னும் நம்பிக்கை அதிகரிக்கிறது.

இயற்கை மாசு மறுவில்லாதது சுனந்தா. இயற்கையில், நீயும், நானும், நிலவும், மலரும், நீள்கடலும், வான் கதிரும், யாவும் ஒரு அங்கமே என்பதால், அவற்றிற்கு நடப்பது எல்லாம் கூட நன்மைக்குத் தானே இருக்க முடியும். எனினும், உனக்கு விரைவில் நலமாக வேண்டும் என்று நானும் இங்கு வேண்டுகிறேன்.

‘வேண்டுகிறேன்’ என்று எழுதும் போது, நாம் கடவுள் பற்றிப் பேசியதெல்லாம் கூட எனக்கு நினைவுக்கு வருகிறது சுனந்தா…

நாளை தொடர்வேன்,

அன்புடன்
செல்வராஜ்.

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in கடிதங்கள்

Comments are closed.

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook