இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 4

Entries Tagged as 'வாழ்க்கை'

அப்பாவின் கதை.

August 23rd, 2013 · 18 Comments

பூரண குணம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி, மருத்துவமனை நீங்கி வீடு வந்த பின்னொரு நாள், பின்னொரு பொழுதொன்றில் சொல்லுவார் அப்பா,  "பரவால்லப்பா! பெரிய கண்டத்துல இருந்து இந்தத் தடவ தப்பிச்சாச்சு. பெரிய ஆபத்தே நீங்கிடுச்சு போ!" நிம்மதி கலந்த பெருமூச்சொன்றோடு முன்னறைச் சோபா இருக்கையில் அமர்ந்திருப்பார். முகத்தில் ஒரு அமைதியான நிறைவு மலர்ந்திருக்கும். அவருக்கும், அருகே அமர்ந்திருக்கும் எனக்குமாகக் காப்பியோ தேநீரோ கொண்டு வந்து, மேலே சுழலும் மின்விசிறியின் காற்றில், ‘சித்த […]

[Read more →]

Tags: வாழ்க்கை

அனிடோரி-கிளாட்ரா

January 31st, 2013 · 2 Comments

அனிடோரி-கிளாட்ரா டாலியாண்ணா இசிலீ என்கின்ற அழகு இளவரசியைப் பற்றி எப்போதாவது நீங்கள் அறிந்திருந்தால் உங்களுக்கு நிச்சயமாய் முன்பதின்ம வயதில் பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதோடு, அவர்கள் படிக்கின்ற ஆங்கிலப் புனைவுகளை நீங்களும் படிக்க எத்தனித்திருக்கலாம் என்பதும் புலனாகும். பிறக்கும் போதே தம் நாவில் தமக்கான பெயர்களைத் தாங்கி வருகிற குதிரைகளும், அக்குதிரைகளோடு பேசத் தெரிந்த இளவரசியுமாக அப்புனைவுலகம் அழகான ஒன்று. அப்படியானதொரு புனைவுலகில் நுழைந்து பார்க்க எனக்கொரு வாய்ப்பினை என் மகள்கள் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்திக் […]

[Read more →]

Tags: கண்மணிகள் · வாழ்க்கை

அறியவொணாமை => அறியொணாமை

January 15th, 2013 · 4 Comments

அனைவருக்கு இனிய பொங்கல்/புத்தாண்டு வாழ்த்துகள். வெண் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் வடை பாயசமுமாகக் கொண்டாடியதில் நேற்றே வாழ்த்தினைச் சொல்ல ஒணாமல் (!) போய்விட்டது. வாழ்க என் மனைவியார்.  (வயிற்றுக்கு நல் உணவுண்டு என்றால் மரியாதை மட்டற்று வருகிறது!). எல்லா ஆண்டுகளும் இப்படியாக இருப்பதில்லை. இரண்டாண்டுகளுக்கு முந்தைய இதே பொங்கல் நாளில் பொங்கலை நான் வைக்கிறேன் என்று இறங்கி நானும் என் பெரிய மகளும் சர்க்கரைப் பொங்கலுக்கான செய்முறைக் குறிப்பைத் தேடி இணையத்தில் அலைந்தோம். பெரியவளுக்குத் தான் சர்க்கரைச் […]

[Read more →]

Tags: கண்மணிகள் · வாழ்க்கை

மனதில் உறுதி வேண்டும்

January 23rd, 2012 · 3 Comments

2012இன் தை முதல் வாரத்தின் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், அன்புடன் வரவேற்று, படித்து, பின்னூட்டமிட்டும், உரையாடலில் கலந்து கொண்டும், உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. இவ்வாரம் எழுத எண்ணிய இன்னும் பல இருக்கின்றன. அவற்றை வரும் நாட்களில் தொடர்வேன் என்னும் நம்பிக்கை உண்டு. அன்றாட வாழ்வின் இழுபறிகளுக்குள் ஆர்வப் பணிகளுக்கும் ஆர்வலப் பணிகளுக்கும் நேரச்சிக்கல்கள் எல்லோருக்கும் இருப்பது தான். ஒன்றைக் கவனிக்க மற்றொன்று கவனமற்றுப் போகும் என்றாலும் இயன்றவரை இவற்றில் ஈடுபட்டிருக்க முயலப் போகிறேன். வலைப்பதிவு […]

[Read more →]

Tags: இணையம் · கண்மணிகள் · சமூகம் · தமிழ் · வாழ்க்கை

குத்துப்புள்ளி

January 22nd, 2012 · 6 Comments

செய்யவேண்டிய செயல்கள் எனப் பட்டியல் போடும் பழக்கம் ஏதோ ஒரு வகையில் எனக்குப் பல காலமாக, பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அவ்வேலைகள் திறம்படச் செய்யப்படுகின்றனவா என்பது வேறு விசயம். மேலும் அது பற்றிப் பேசும் முன் ஒரு சிறு கிளைக்கதைக்குள் நுழைந்து வருவோம். ஈரோட்டில் முக்கியமான ஒரு சந்திப்பான பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து கச்சேரி வீதி வழியாகப் போனால், அருகில் காரை பெயர்ந்த சுற்றுச்சுவரோடு தாசில்தார்வட்டாட்சியர் அலுவலகம் வரும். அதன் எதிரே வரிசையாகச் சில நகலெடுக்கும் […]

[Read more →]

Tags: வாழ்க்கை