<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இரா. செல்வராசு</title>
	<atom:link href="http://blog.selvaraj.us/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://blog.selvaraj.us</link>
	<description>விரிவெளித் தடங்கள்</description>
	<lastBuildDate>Fri, 01 Feb 2013 03:49:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.5.1</generator>
		<item>
		<title>அனிடோரி-கிளாட்ரா</title>
		<link>http://blog.selvaraj.us/archives/412</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/412#comments</comments>
		<pubDate>Fri, 01 Feb 2013 03:49:02 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
				<category><![CDATA[கண்மணிகள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[குழந்தைகள்]]></category>
		<category><![CDATA[புனைவுலகு]]></category>
		<category><![CDATA[வாசிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/?p=412</guid>
		<description><![CDATA[அனிடோரி-கிளாட்ரா டாலியாண்ணா இசிலீ என்கின்ற அழகு இளவரசியைப் பற்றி எப்போதாவது நீங்கள் அறிந்திருந்தால் உங்களுக்கு நிச்சயமாய் முன்பதின்ம வயதில் பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதோடு, அவர்கள் படிக்கின்ற ஆங்கிலப் புனைவுகளை நீங்களும் படிக்க எத்தனித்திருக்கலாம் என்பதும் புலனாகும். பிறக்கும் போதே தம் நாவில் தமக்கான பெயர்களைத் தாங்கி வருகிற குதிரைகளும், அக்குதிரைகளோடு பேசத் தெரிந்த இளவரசியுமாக அப்புனைவுலகம் அழகான ஒன்று. அப்படியானதொரு புனைவுலகில் நுழைந்து பார்க்க எனக்கொரு வாய்ப்பினை என் மகள்கள் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்திக் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>அனிடோரி-கிளாட்ரா டாலியாண்ணா இசிலீ என்கின்ற அழகு இளவரசியைப் பற்றி எப்போதாவது நீங்கள் அறிந்திருந்தால் உங்களுக்கு நிச்சயமாய் முன்பதின்ம வயதில் பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதோடு, அவர்கள் படிக்கின்ற ஆங்கிலப் புனைவுகளை நீங்களும் படிக்க எத்தனித்திருக்கலாம் என்பதும் புலனாகும். பிறக்கும் போதே தம் நாவில் தமக்கான பெயர்களைத் தாங்கி வருகிற குதிரைகளும், அக்குதிரைகளோடு பேசத் தெரிந்த இளவரசியுமாக அப்புனைவுலகம் அழகான ஒன்று. </p>
<p><a href="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2013/01/clip_image001.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; margin: 6px 12px 0px 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: left; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="clip_image001" border="0" alt="clip_image001" align="left" src="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2013/01/clip_image001_thumb.jpg?resize=161%2C254" data-recalc-dims="1" /></a>அப்படியானதொரு புனைவுலகில் நுழைந்து பார்க்க எனக்கொரு வாய்ப்பினை என் மகள்கள் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.</p>
<p>அதிலே, மூஞ்சூறு வீரர்களும், அவை போர் தொடுத்து வெல்லும் வில்லத்தனம் நிறைந்த எலிகளும், உலகம் பிரகாசமானது என்று எப்போதும் பேசித்திரிந்து எல்லோருக்கும் உதவும் நாய் ஒன்றும், உலகப் பயணம் கிளம்பிச் செல்லும் தேவதைகளும், இளவரசிகளும், மாய மந்திரங்களும் ஒரு புறம். சாதாரணர்களால் புரிந்து கொள்ள இயலாத தனிச்சிறப்பும் அறிவுமுடைய சிறுவர்கள், ஏழ்மை, தனிமை, உறவின்மையை விடுத்து வாழ்வில் பெறும் வெற்றிகள் என்று இன்னொரு உலகம் மறுபுறம். கிரேக்கக் கடவுள்களின் அரசியலும், சேக்சுப்பியர் காலத்து இரகசியங்களும், அவற்றோடு மல்லுக்கட்டும் இக்காலப் பள்ளிச் சிறார்களுமாய் இன்னொரு உலகம். புதிது புதிதான உலகங்களுக்குள் சென்று அவற்றினின்று மீண்டு நிகழ்வாழ்விற்கு வரப் பிடிக்காத என் பெண்களை அனுதினமும் இரவு படிப்பதை நிறுத்தச் சொல்லி நித்திரைக்கு அனுப்பி வைப்பதும் ஒரு தனிக் கதை தான். </p>
<p>சுமார் இரண்டு வயது இருக்கையில் அஞ்சல் செலவு மட்டும் பெற்றுக் கொண்டு வால்ட்-டிசுனிக்காரர்கள் அனுப்பி வைத்த எட்டுப் புத்தகங்களையே படி படியென்று படித்துக் கிழித்த போது நிவேதிதாவும் நந்திதாவும் எங்களின் கைகளைப் பிடித்துக் கொண்டே தான் அவர்களின் புனைவுலகினுள் தடம் பயின்றனர்.</p>
<p><span id="more-412"></span>
<p><a href="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2013/01/clip_image002.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; margin: 6px 0px 0px 12px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: right; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="clip_image002" border="0" alt="clip_image002" align="right" src="http://i1.wp.com/blog.selvaraj.us/images/2013/01/clip_image002_thumb.jpg?resize=178%2C274" data-recalc-dims="1" /></a><a href="http://www.goodreads.com/book/show/275351.Who_Are_You_Sue_Snue_" target="_blank">&#8216;ஹேப்பி பர்த்டே சூ சுனூ&#8217;</a> என்னும் டாக்டர் சூய்சு எழுதிய புத்தகத்தை இன்று அவர்கள் மறந்திருந்தாலும் கூட நாங்கள் இன்னும் மறக்கவில்லை. </p>
<p>இருபது பக்கங்கள் தான் இருக்கும் என்றாலும், படித்து முடித்த இருநொடி நேரத்தில் &#8216;மீண்டும் படி மீண்டும் படி&#8217; என்று பெரியவள் படுத்தி எடுத்து விடுவாள். சிலசமயம், ஏமாந்த சமயத்தில் புத்தகத்தை ஒளித்து வைத்துவிட்டுக் &#8216;காக்கா&#8230; தூக்கீட்டுப் போயிருச்சு&#8217; என்று இரண்டு வயதுக் குழந்தையிடம் கையை விரித்து ஏமாற்றிய எங்களைப் பற்றிய உங்கள் மதிப்பீடுகளைக் காதுகொடுத்துக் கேட்க நான் தயாராய் இல்லை! <img src='http://i1.wp.com/blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' data-recalc-dims="1" /> </p>
<p>ஒன்றினைப் போல் மற்றொன்று எப்போதும் இருப்பதில்லை என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கவென்றே எங்களுக்கு அனுப்பப் பட்டவள் இரண்டாமவள். பெரியவளுக்குப் புத்தகங்களுள் உண்டாக்கிய ஆர்வத்தைப் போன்றே சின்னவளுக்கும் படித்துக் காட்டிப் புனைவுலகை அறிமுகப் படுத்தலாம் என்று புத்தகத்தை எடுத்தால், &#8216;எல்லாம் எனக்கே தெரியும். மூடி வை&#8217; என்றாற் போல எங்களைப் படிக்கவே விடாது தானே புத்தகத்தின் பக்கங்களைத் தலைகீழானாலும் திருப்பிக் கொண்டிருப்பாள் நந்திதா. ஏதோ ஏமாந்த சமயத்தில் ஒன்றிரண்டு பக்கங்கள் படிக்க விட்டிருப்பாள். இன்றும் கூட அவளுக்கு ஏதேனும் சொல்லிக் கொடுக்க இறங்கினால், &#8216;எல்லாம் எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்&#8217; என்று குதிக்கும் இவளை வேறு உளவியல் அடிப்படையில் தான் அணுக வேண்டியிருக்கிறது. பல சமயங்களில் அது முடிவதில்லை என்பது தான் உண்மை.</p>
<p>சிறுவயதில் அவர்கள் படிக்கிற புத்தகங்களைக் கண்ணுற்றும், படித்தும், கூடவே துணையாய் வந்த எங்களுக்கு வளர்பருவத்தில் அவர்களுடைய வேகத்தோடு ஈடு கொடுக்க முடியவில்லை. மிகவும் வசதியானவையும் பயனுள்ளவையுமாக இருக்கின்ற அமெரிக்கப் பொது நூலகங்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் கிலோக் கணக்கில் தான் புத்தகங்கள் எடுத்து வந்து படிக்கிறார்கள். இந்த ஆட்டத்திற்கு நாம் ஈடுகொடுப்பது எங்ஙனம்?</p>
<p>மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களுடனான உலகில் நாமும் சற்றுப் பங்கெடுத்துக் கொள்வோமெனச் சுயமாய் ஓர் சவாலை மேற்கொண்டேன். அவர்கள் ஆண்டு முழுவதும் படித்த புத்தகங்களில் இருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை ஆண்டிறுதியில் கிறித்துமசு விடுப்பில் நான் படிக்க முயல்கிறேன் என்று சொல்லி வைத்தேன்.</p>
<p>&#8216;ஹேரி பாட்டர்&#8217; தொடர் புத்தகங்களை முதலில் படிக்கப் பணித்தார்கள். அதனை மெல்ல மெல்லப் படித்து முடிக்க ஆறு மாதங்கள் ஆனது எனக்கு. அந்த மாதங்களில் எனக்கு ஊக்கம் அளித்தும் கிண்டல் செய்தும் தொடர்ந்து என்னைப் படிக்கச் செய்து கொண்டிருந்தார்கள். அதோடு, அந்தப் புத்தகங்களில் வரும் நிகழ்வுகள் எங்களது உரையாடலிலும் சேர்ந்து கொண்டன. </p>
<p>மாயமந்திரப் பள்ளி முதல்வர் டம்புள்டோரைப் போல நானும் அவர்களுக்கு அவ்வப்போது &#8216;நிவேதிதாவுக்கு ஐம்பது புள்ளிகள்&#8217;, &#8216;நந்திதாவுக்கு நூறு&#8217; என்று வாரி வழங்கிக் கொண்டிருந்தேன். அவர்களோ எனக்குப் புள்ளிகளைக் குறைத்தவண்ணம் நொசிவுத் திசையில் விளையாட்டாய்ச் சென்று கொண்டிருப்பர். </p>
<p>&quot;Minus 100 points for the appaa!&quot;</p>
<p>அடுத்த ஆண்டுகளில் படித்த (அல்லது, படிக்க வைக்கப்பட்ட <img src='http://i1.wp.com/blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' data-recalc-dims="1" /> ) புத்தகங்களில் மக்குத் தந்தைகளாய் அரசர்களும், வீரமகள்களாய் இளவரசிகளும் கதாபாத்திரங்களாக அமைந்திருந்தது தற்செயலான ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை!</p>
<p>படித்து முடித்தவுடன் எனக்குப் பிடித்திருந்ததா, என்ன நினைக்கிறேன் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் எட்டிப்பார்க்கும். அவர்களது இரசனை என்ன, அது என்னுடையதோடு எப்படித் தொடர்புற்றிருக்கிறது என்பது பற்றி ஓரிரு நிமிடங்கள் பேச்சு வளரும். அவ்வளவு தான். </p>
<p>&quot;போதும்ப்பா… தொந்தரவு பண்ணாதீங்க. எங்களுக்கு வேறு வேலை இருக்கு. இந்தாங்க, அடுத்த புத்தகம். இதப் படிங்க&quot;, என்று நகர்ந்து விடுவார்கள்.</p>
<p>அவர்களுடனான உலகில் தான் மெர்லின் கதைகளும், மன்னர் ஆர்த்தரின் கதைகளும் எனக்குப் பரிச்சயமாயின. சிலசமயம் ஆர்வ மிகுதியில் இக்கதைகளையும் கதைமாந்தர்களையும் பற்றியும் இணையத்திலும் விக்கியிலும் தேடித் திரிந்திருக்கிறேன். வார இறுதியின் ஓர் நாள் இரவுணவுக்கு மீனோடு மெர்லின் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதும் ஒரு குடும்ப வழக்கமாகவே ஆகிவிட்டது. </p>
<p><a href="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2013/01/clip_image003.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; margin: 6px 12px 0px 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: left; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="clip_image003" border="0" alt="clip_image003" align="left" src="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2013/01/clip_image003_thumb.jpg?resize=170%2C259" data-recalc-dims="1" /></a>&quot;அப்பா… Mysterious Benedict Society படிங்கப்பா. உங்களுக்குப் பிடிக்கும்&quot;</p>
<p>&quot;ஏம்மா? ஏன் எனக்கு அது பிடிக்கும்?&quot;</p>
<p>&quot;அதுல ஒரு தமிழ் Character வருது. அதுனால தான்&quot;, என்று பூரிப்போடு பார்ப்பார்கள். &quot;மிஸ் பெருமாள்னு ஒரு ட்யூட்டர். ஒருத்தனுக்குத் தமிழ் சொல்லித் தருவாங்க&quot;</p>
<p>எல்லாம் இருக்கட்டும்… ஏன் தான் இந்நூல் ஆசிரியர்கள் நானூறு ஐநூறு பக்கம் என்று எழுதித் தள்ளுகிறார்களோ? எனக்குப் புரியவில்லை. ஒரு புத்தகம் படிக்க ஒரு மாதத்துக்கும் மேலே ஆகிவிடும் சோகக் கதை எனக்கல்லவா தெரியும்! இவர்கள் என்னவென்றால் அதே புத்தகத்தை ஓரிரு நாட்களில் படித்து முடித்துவிட்டு, &#8216;ம்ம்… அடுத்தது எங்கே?&#8217; என்று தேடித் திரிகிறார்கள். </p>
<p>சில சமயம் என்னைப் படித்துமுடிக்க வைக்கப் படாதபாடு படும் இவர்களையும், விடாது படிக்கும் என்னையும் பார்த்து மனைவி கிண்டலடிப்பதும் வழக்கமாகி இருந்தது. </p>
<p>&quot;என்னவோ பரிச்சைக்குப் போற மாதிரி இதை நீங்க ஏன் படிக்கிறீங்கன்னும் புரியல்லே. அதில இவங்களுக்கு என்ன பலன் கிடைக்குதுன்னும் தெரியல்லே&quot;</p>
<p>&quot;சும்மா இருங்கம்மா…&quot;</p>
<p>&quot;கிறுக்குப் பசங்கடா மூணு பேரும்!&quot;</p>
<p>கிறுக்குத்தனம் நமக்கொன்றும் புதிதல்லவே. ஆனால், இக்கிறுக்குத்தனங்களின் பின்னே ஒரு காரணம் இருப்பதாகவே நினைத்துக் கொள்ள எனக்கு ஆசை. கடந்தேகும் ஆண்டுகளின் பின்னணியில் இவை அவர்களுடனான ஒரு தொடர்புப் பாலத்தை உறுதிப்படுத்தி வைக்கும் ஒரு முயற்சியாகவும் அமையும் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் தேக்கி வைத்துக் கொண்டு பின்னொரு நாள் அசைபோட நிறைத்துக் கொள்ளும் நினைவுத் துண்டுகள் இவை. </p>
<p>சென்ற ஆண்டின் புத்தகத் தெரிவை என்னால் படித்து முடிக்க இயலவில்லை. அடிக்கடி வெளியூர்ப் பயணமும் அலுப்புச் சேர்த்த பணியழுத்தமும் இதற்கான நேரத்தை ஒதுக்க முடியாமல் செய்துவிட்டன.</p>
<p><a href="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2013/01/clip_image004.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; margin: 6px 0px 0px 12px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: right; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="clip_image004" border="0" alt="clip_image004" align="right" src="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2013/01/clip_image004_thumb.jpg?resize=159%2C271" data-recalc-dims="1" /></a>&quot;Westing Game-அ முதல்ல படிங்கப்பா. சின்னப் புத்தகம் தான்&quot;, என்று பணித்திருந்தாலும், அதையும் பல மாதங்கள் இழுத்தடித்தேன். தவிர ஒருத்திக்குப் பிடித்ததாகவும் ஒருத்திக்கு அவ்வளவு ஈர்ப்பு இல்லாததாகவும் இருந்த கதை அது. பட்டியலில் ஆளுக்குப் பாதி என்று பிடித்து வைத்திருப்பார்கள். கொஞ்சம் பழைய புத்தகமானாலும் படித்து முடித்தபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. &#8216;ஆகா, ஏன் நம்மால் எல்லாம் இது போல எழுத முடிவதில்லை&#8217;, என்று யோசிக்க வைக்கும் எழுத்து. பொதுவாகத் தமிழுலகில் குழந்தைகளுக்கான சிறப்பான புத்தகங்கள் இதுபோல் அமைவதில்லை தான். </p>
<p>என்னுடைய இழுத்தடிப்பின் காரணமாய் ஆர்வம் குறைந்தவளாய், &quot;உங்களுக்குப் படிக்க வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள் அப்பா&quot;, என்று பெரியவள் சொன்னபோது எனக்குச் சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது. வளர்ந்து வருகிறவள் விவேகமாகத் தான் சொன்னாள். </p>
<p>&quot;இல்ல இல்ல. நான் இன்னும் படிக்கறேன். இப்போ படிக்க முடியாதத அடுத்த வருசம் பட்டியல்ல சேர்த்துடுங்க. ஆனா, பத்துப் பதினஞ்சு புத்தகம்னு எடுக்காமக் கொஞ்சம் கம்மியாக் குடுங்க&quot;</p>
<p>&quot;ஓ! நீங்க படிக்கறதுன்னாச் சொல்லுங்க. அடுத்த மூணு புத்தகம் உங்களுக்காக நூலகத்துல இருந்து எடுத்து… இதோ, இங்க தான் வச்சிருக்கோம்&quot;</p>
<p>அவர்கள் முகத்திலும் மலர்ச்சி. இதைக் கேட்டு என் உள்ளத்திலும் குளிர்ச்சி. சில வேலைகள் சுமை போல் தோன்றினாலும் அயராது செய்வதில் இருக்கிறது சுகம். </p>
<p>&quot;சரி… ஒரு புத்தகத்துல குதிரைங்க பிறக்கும் போதே நாக்குல அவங்க பேரோட பிறக்குமே. அந்தப் புத்தகத்துப் பேர் என்ன?&quot;</p>
<p>&quot;Goosegirl! ஏம்ப்பா? எதுக்குக் கேக்குறீங்க?&quot;</p>
<p>‘கிறுக்கு அப்பா. எதையாவது Blogஇல் எழுதிக்கிட்டிருப்பார்’ என்று நினைத்துக் கொண்டே தத்தம் புனைவுலகில் தம்மைப் புதைத்துக் கொண்டனர் எனது இளவரசிகள்.</p>
<p>ooOoo</p>
<p><em>பி.கு.: வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ‘தென்றல் முல்லை’ இதழில் 2013 பொங்கல் மலரில் வெளிவந்த கட்டுரை. </em></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/412/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>அறியவொணாமை =&gt; அறியொணாமை</title>
		<link>http://blog.selvaraj.us/archives/399</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/399#comments</comments>
		<pubDate>Wed, 16 Jan 2013 03:18:03 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
				<category><![CDATA[கண்மணிகள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[Agnosticism]]></category>
		<category><![CDATA[ஆத்திகம்]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[உமாமகேசுவரத்தாண்டவம்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/?p=399</guid>
		<description><![CDATA[அனைவருக்கு இனிய பொங்கல்/புத்தாண்டு வாழ்த்துகள். வெண் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் வடை பாயசமுமாகக் கொண்டாடியதில் நேற்றே வாழ்த்தினைச் சொல்ல ஒணாமல் (!) போய்விட்டது. வாழ்க என் மனைவியார்.&#160; (வயிற்றுக்கு நல் உணவுண்டு என்றால் மரியாதை மட்டற்று வருகிறது!). எல்லா ஆண்டுகளும் இப்படியாக இருப்பதில்லை. இரண்டாண்டுகளுக்கு முந்தைய இதே பொங்கல் நாளில் பொங்கலை நான் வைக்கிறேன் என்று இறங்கி நானும் என் பெரிய மகளும் சர்க்கரைப் பொங்கலுக்கான செய்முறைக் குறிப்பைத் தேடி இணையத்தில் அலைந்தோம். பெரியவளுக்குத் தான் சர்க்கரைச் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2013/01/IMG_1213.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: right; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="IMG_1213" border="0" alt="IMG_1213" align="right" src="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2013/01/IMG_1213_thumb.jpg?resize=244%2C205" data-recalc-dims="1" /></a>அனைவருக்கு இனிய பொங்கல்/புத்தாண்டு வாழ்த்துகள். வெண் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் வடை பாயசமுமாகக் கொண்டாடியதில் <img style="border-bottom-style: none; border-left-style: none; border-top-style: none; border-right-style: none" class="wlEmoticon wlEmoticon-smile" alt="Smile" src="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2013/01/wlEmoticon-smile2.png" data-recalc-dims="1" /> நேற்றே வாழ்த்தினைச் சொல்ல ஒணாமல் (!) போய்விட்டது. வாழ்க என் மனைவியார்.&#160; (வயிற்றுக்கு நல் உணவுண்டு என்றால் மரியாதை மட்டற்று வருகிறது!). </p>
<p>எல்லா ஆண்டுகளும் இப்படியாக இருப்பதில்லை. இரண்டாண்டுகளுக்கு முந்தைய இதே பொங்கல் நாளில் பொங்கலை நான் வைக்கிறேன் என்று இறங்கி நானும் என் பெரிய மகளும் சர்க்கரைப் பொங்கலுக்கான செய்முறைக் குறிப்பைத் தேடி இணையத்தில் அலைந்தோம். பெரியவளுக்குத் தான் சர்க்கரைச் சங்கதிகள் அதிகம் பிடிக்கும் என்பதால் சின்னவள் அங்கிருக்கவில்லை. </p>
<p><a href="http://www.nandyala.org/mahanandi/archives/2006/01/16/sweet-pongal-the-sankranthi-sweet/" target="_blank">மகாநந்தியின் இனிப்புப் பொங்கலுக்கான</a> செய்முறைக் குறிப்புகளைச் சார்ந்து செய்ய முடிவு செய்தோம். குறிப்பினில் படிப்படியாகக் கொடுத்திருந்த முறைகளைக் கடந்து வருகையில், ‘பொங்கல் ஆனதும் முதலில் இறைவனுக்குப் படைத்துவிட்டுப் பிறகு பரிமாறவும்’ என்னும் குறிப்பைக் கண்டு விளையாட்டாய் நான், “நமக்குச் சாப்பாடு கெடச்சாப் போதும்; சாமியெல்லாம் தேவையில்லை” என்றேன். </p>
<p>இதைக் கேட்டுக் கலகலவென்று முத்துதிரச் சிரித்த பன்னிரண்டு அகவையாள் அந்நாளை என் நினைவகத்தில் ஏற்றி வைத்தாள். பள்ளி நிகழ்வொன்று நினைவுக்கு வந்தவளாய் என்னைப் பார்த்து, </p>
<p>“அப்பா! இப்போதெல்லாம் நீ என்ன மதம் என்று யாரேனும் என்னைக் கேட்டால், நான் பாதி இந்து, பாதி நாத்திகர் என்றே சொல்கிறேன்”, என்றாள். </p>
<p><span id="more-399"></span>
<p>இன்னும் நான் வெளியூர்ப் பயணம் போகிறேன் என்று தொலைபேசியில் சொன்னாலும், “பாத்துப்பா… பத்திரமாப் போய்ட்டு வா… எப்பவும் நம்ம சாமிய நெனச்சுக்கோ… <a href="http://blog.selvaraj.us/archives/88" target="_blank">இராசாவையன</a> எப்பவும் மனசுல வச்சுக்கோ” என்று தொலைபேசியிலேயே இறைவனை என்னோடு அனுப்பி வைக்கும் என் அம்மா, இவளின் ஆத்தாள், இதனைக் கேட்டால் என்ன நினைத்துக் கொள்வார்களோ தெரியவில்லை! ஆனாலும் இவளுடைய ஆன்மிகப் பாதை சரியாகத் தான் இருக்கிறது என நான் நினைக்கிறேன். </p>
<p><a href="http://ta.wikipedia.org/s/887" target="_blank"><strike>அறியவொணாமைக்</strike> அறியொணாமைக் கொள்கை</a> (<a href="http://en.wikipedia.org/wiki/Agnosticism" target="_blank">Agnosticism</a>) பற்றிச் சொல்லுங்கள் என்று நண்பர் வாசன் துவிட்டரில் கீச்சிட்டார். </p>
<blockquote><p>Agnosticism is the view that humanity does not currently possess the requisite knowledge and/or reason to provide sufficient rational grounds to justify the belief that deities either do or do not exist.</p>
</blockquote>
<p>அது பற்றிச் சொன்னபோது, நிவேதிதா கணக்கைச் சரியாகப் பிரித்தாள். </p>
<p>“சரி அப்பா… இனி அதையும் சேர்த்து மூன்றிலும் ஒவ்வொரு பங்கு என வைத்துக் கொள்கிறேன்”</p>
<p><strike>அறியவொணாமைக்</strike> அறியொணாமைக் கொள்கையின் பால் என்னுடைய நாட்டம் சிறு வயது முதலே இருந்திருக்க வேண்டும். அதனால் தான் <a href="http://blog.selvaraj.us/archives/293" target="_blank">கோயிலுக்கும் சென்று கொண்டே இறைமறுப்புக் கருத்துக்களையும்</a> கருத முடிகிறது. அல்லது வடிவம் ஏதாயின் என்ன, இயற்கையே தெய்வம் என்று நினைக்க வைக்கிறது.</p>
<p>முன்பெல்லாம் <a href="http://blog.selvaraj.us/archives/227" target="_blank">முருகனே</a> ஒரே இறைவன் என்று சில சமயம் வைத்துக் கொள்வதுண்டு. ஒரு பத்தாண்டுகளுக்கு முன் அவரை விட்டுவிட்டுத் தந்தையப்பன் ஈசனை வேண்டியதுண்டு. அப்போது தான் இரண்டு அருமைப் பெண்களுக்குத் தகப்பன் ஆகியிருந்தது காரணமாய் இருக்கலாம். </p>
<p><a href="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2013/01/2013-01-15-20.26.48.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="2013-01-15 20.26.48" border="0" alt="2013-01-15 20.26.48" src="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2013/01/2013-01-15-20.26.48_thumb.jpg?resize=485%2C404" data-recalc-dims="1" /></a></p>
<p>நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் என்று ஐம்பூதங்களைத் தெய்வமாகக் கொண்டிருந்த முன்னோர் இயற்கையே தெய்வம் என்று தான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. </p>
<blockquote><p>…Pantheisஅக் கொள்கைகளைக் கொண்டிருக்கும் எனக்கு இறைவன் ஒரு வடிவமே. அதனால் மனது சார்கின்ற வடிவமே பிரிய தெய்வம் என்று கொள்ளப் போகிறேன்…</p>
</blockquote>
<p>அகண்டு வேகமாக விரிகின்ற அண்டத்தை ஆக்கவும் காக்கவும் ஒரு இறைவன் தேவையில்லை என்று எண்ணும்போதே இவ்வண்டமும், துகள்களும், நானும், என் சிந்தையும் ஏன் எப்படி எதற்கு என்னும் இருத்தலியற் கேள்விகளுக்கு அறிவியலும் பதிலிறுக்க ஆற்றலின்றி இருக்க, <strike>அறியவொணாமை</strike> அறியொணாமை ஒன்றே மிஞ்சுகிறது. </p>
<p>இந்தப் பக்கமாக வந்த மகளைப் பார்த்து, “உன்னைப் பற்றித் தான் எழுதுகிறேன்” என்றேன். </p>
<p>Agnosticism என்றிருப்பதைப் பார்த்தவள், “என்னைப் பற்றிய பொய் எல்லாம் இணையத்தில் எழுதாதீர்கள். நான் ஒன்றும் agnostic அல்லள். வாழ்க்கையில் என்னுடைய பாதையைக் கண்டுகொள்ள இன்னும் நான் முயன்று கொண்டிருக்கிறேன்”, என்கிறாள்! மகமாயி!</p>
<p>ஈசனுக்கு இணையாகத் தாண்டவமாடும் இந்த உமா மகேசுவரியைக் காணின் இனி என் இறையை மாற்றித் தேவி பதம் சரணடையலாம் எனத் தோன்றுகிறது. </p>
<div style="padding-bottom: 0px; margin: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: none; padding-top: 0px" id="scid:5737277B-5D6D-4f48-ABFC-DD9C333F4C5D:884aa9b8-81b7-4160-9772-afaec3f999ca" class="wlWriterEditableSmartContent">
<div><object width="472" height="265"><param name="movie" value="http://www.youtube.com/v/YdHwVgq89xg?hl=en&amp;hd=1"/><embed src="http://www.youtube.com/v/YdHwVgq89xg?hl=en&amp;hd=1" type="application/x-shockwave-flash" width="472" height="265"/></object></div>
<div style="width:472px;clear:both;font-size:.8em">உமா மகேசுவரத் தாண்டவம்</div>
</div>
<p>* * * *</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/399/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>நடுவுல கொஞ்சம் &#8216;கள்&#8217;ளக் காணோம்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/392</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/392#comments</comments>
		<pubDate>Tue, 08 Jan 2013 05:10:32 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
				<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[#தமிழ்]]></category>
		<category><![CDATA[இலக்கணம்]]></category>
		<category><![CDATA[பால்பகா அஃறிணைப் பெயர்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/?p=392</guid>
		<description><![CDATA[இது கொஞ்சம் சிக்கலான தலைப்பு என்பதால் முதலிலேயே கொஞ்சம் ‘தெளிவு’ படுத்தி விடுவது நல்லதெனப் படுகிறது.&#160; முதலில், இந்த இடுகைக்கும் பனைமரத்தில் இருந்து இறக்கும் சரக்குக்கும் தொடர்பு கிடையாது.&#160;&#160; சில நாட்களுக்கு முன்னர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ என்னும் தமிழ்ப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அண்மையில் வந்த ‘பீட்சா’ படம் போன்றே இந்தப் படமும் எங்கள் மகள்களுக்கும் பிடித்திருந்தது. இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் தமிழ்ப் படங்களில் வருவது ஆறுதலான ஒன்றாக இருக்கிறது. என்றாலும், இந்த [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>இது கொஞ்சம் சிக்கலான தலைப்பு என்பதால் முதலிலேயே கொஞ்சம் ‘தெளிவு’ படுத்தி விடுவது நல்லதெனப் படுகிறது.&#160; முதலில், இந்த இடுகைக்கும் <a href="http://ta.wikipedia.org/s/qjg" target="_blank">பனைமரத்தில் இருந்து இறக்கும் சரக்குக்கும்</a> தொடர்பு கிடையாது.&#160;&#160; <img style="border-bottom-style: none; border-left-style: none; border-top-style: none; border-right-style: none" class="wlEmoticon wlEmoticon-smile" alt="Smile" src="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2013/01/wlEmoticon-smile1.png" data-recalc-dims="1" /></p>
<p><img title="naduvula-konjam-pakkatha-kaanom" alt="நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் விமர்சனம், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் திரை விமர்சனம், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் சினிமா விமர்சனம், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் திரைவிமர்சனம், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் பாடல், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் பாடல் வரிகள், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் reviews, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் thirai vimarsanam, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் vimarsanam, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் movie, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் online, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் movie online, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் mp3 songs, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் torrent download, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் full movie free dowload, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் movie stills" src="http://i2.wp.com/tamildigitalcinema.com/wp-content/uploads/2012/12/naduvula-konjam-pakkatha-kaanom.jpg?resize=483%2C253" data-recalc-dims="1" /></p>
<p>சில நாட்களுக்கு முன்னர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ என்னும் தமிழ்ப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அண்மையில் வந்த ‘பீட்சா’ படம் போன்றே இந்தப் படமும் எங்கள் மகள்களுக்கும் பிடித்திருந்தது. இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் தமிழ்ப் படங்களில் வருவது ஆறுதலான ஒன்றாக இருக்கிறது. என்றாலும், இந்த இடுகை இந்தப் படம் குறித்த விமர்சனப் பதிவும் கிடையாது! </p>
<p>‘கொஞ்சம்’ என்று பன்மைக்கான முன்னொட்டைக் கொண்டு வரும் பெயரில் ‘கள்’ என்னும் பன்மை விகுதியைக் காணோமே என்னும் தமிழ் இலக்கணச் சிந்தனை தொடங்கி வைத்த ஒரு எண்ண ஓட்டம்.&#160; இருந்தாலும், இது போன்ற பாவனையில் தவறொன்றுமில்லை என்று அண்மையில் எங்கோ படித்த நினைவு வரவே அதனைத் தள்ளிப் போய்விட்டேன். இங்கே இருக்கும் வார இறுதித் தமிழ்ப் பள்ளியில் நிலை-4ன் தமிழ் ஆசிரியனாக இருப்பதில் இந்த இரண்டு ஆண்டுகளாக ஏராளமாகத் தமிழ் இலக்கணக் குறிப்புகளைப் பார்த்து வருகிறேன். அதில் எங்கேயாவது பார்த்திருக்கலாம். </p>
<p>இதே கேள்வியையும் ஐயப்பாட்டையும் துவிட்டர்ச் சந்தில் (ஏன் சந்து எனப் பெயர் வந்தது எனத் தெரியவில்லை; அதுவும் ஒருவகையில் நன்றாகவே இருக்கிறது!) <a href="https://twitter.com/vivaji/status/286111193754648576" target="_blank">இளாவும் பலராமனும்</a> எழுப்பவே, இது சரியான பயன்பாடே என்னும் குறிப்பிற்கான உசாத்துணையைப் பிடிக்க இறங்கினேன். </p>
<p><span id="more-392"></span>
<p>பேச்சுத் தமிழில் மட்டுமன்று. உரைநடையிலும் சில இடங்களில் இவ்வாறு பன்மைப் பெயர்களை ஒருமை போன்றே பாவிப்பது தமிழ் மரபில் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்றே.&#160; குறிப்பாக அஃறிணைப் பெயர்களில் பன்மையைக் குறிப்பிடும் (பலவின்பால்) இடங்களில் இவ்வாறு ஒருமைக்கான பெயரைக் குறிப்பிடுவதைப் <a href="http://ta.wikipedia.org/s/2jey" target="_blank">பால்பகா அஃறிணைப் பெயர்</a> என்று <a href="http://www.tamilvu.org/courses/degree/a021/a0211/html/a02114l1.htm" target="_blank">தமிழ் இலக்கணம் வழங்குகிறது.</a> </p>
<p>நம்முடைய அன்றாட வாழ்வில் இந்தப் பயன்பாடு மிகவும் இயல்பாகவும் எல்லா இடங்களில் நிறைந்தும் இருப்பதைச் சற்றே உன்னிப்பாகக் கவனித்தால் உணர்ந்து கொள்ளலாம். </p>
<p>“ஏம்மா… கீரை நல்லா இருக்குதே… <font color="#0000ff">மூணு கத்தை</font> குடுங்க”</p>
<p>“நேத்து இராத்திரி கோயில்ல நல்ல கூட்டம்ப்பா. சும்மா <font color="#0000ff">முப்பது கெடா</font> வெட்டிருப்பாங்க”</p>
<p>“பூசைக்கு <font color="#0000ff">நாலு தேங்கா</font> வாங்கிக்குங்க. ஒரு <font color="#0000ff">பத்துச் சூடம்</font>, <font color="#0000ff">ரெண்டு மொழம் பூவு</font>, வெத்தல பாக்கு <font color="#0000ff">ரெண்டு கவுளி</font>, எல்லாம் வாங்கிக்குங்க”</p>
<p>“<font color="#0000ff">மூணு பாடத்தில</font> ஊத்திக்குச்சு மச்சி. அடுத்த வருசம் மறுபடியும் தேர்வு எழுதணும்”</p>
<p>“அவனுக்கென்னப்பா, கோயமுத்தூர்ல <font color="#0000ff">பத்து வீடு</font> கட்டி வாடகைக்கு உட்ருக்கான்”</p>
<p>“இந்தா… ஒரு ரூபா. போயி <font color="#0000ff">ரெண்டு பழம்</font> வாங்கிட்டு வா!”, என்று அண்ணன் கவுண்டமணி சொன்னது எப்படித் தவறாகப் போய்விடும்? <iframe height="360" src="http://www.youtube.com/embed/hkkmKk9LcQk?rel=0" frameborder="0" width="480" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>ஆக, ‘பக்கங்கள’ என்று எழுத வேண்டியதில்லை. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த(க்) காணோம்’ என்பது சரியான பயன்பாடே. (இரண்டாம் வேற்றுமை உருபை ஒட்டிய ககர ஒற்றைக் காணோம் என்பது வேறு குறை; வேறொரு நாள்). </p>
<p>சென்ற ஆண்டு அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பாடநூல்களில் பிழைத்திருத்தம் செய்தபோது இப்படியான மிகைத் திருத்தங்களையும் செய்ததை உணர்ந்து வெட்குகிறேன்.&#160; <img style="border-bottom-style: none; border-left-style: none; border-top-style: none; border-right-style: none" class="wlEmoticon wlEmoticon-sadsmile" alt="Sad smile" src="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2013/01/wlEmoticon-sadsmile.png" data-recalc-dims="1" /></p>
<p>‘கீழ்க்கண்ட வினாக்களுக்குச் சரியான விடையை எழுதுக’ என்றாற்போன்ற சொற்றொடர்களில், ‘கீழ்க்கண்ட வினாக்களுக்குச் சரியான <font color="#333333"><em>விடைகளை</em></font> எழுதுக’ என்று நான் செய்த திருத்தங்கள் (திருத்தம்) தவறல்லவென்றாலும் அவசியமற்ற மிகைத் திருத்தங்கள். </p>
<p>பால்பகா அஃறிணைப் பெயர்களைப் பற்றி அறிந்து கொண்டதில் இனி <font color="#0000ff">இவ்வாறான பாவனை</font>க்குச் சிறிதும் அஞ்சவேண்டியதில்லை.&#160; <font color="#0000ff">இரண்டாயிரம் ஆண்டு</font>க்கும் மேலாக உயிர்ப்புடன் இருக்கும் ஒரு செம்மொழி, இது போன்று நெகிழ்தன்மையும் இயல்பு வழக்கும் கொண்டிருப்பதில் தான் வியப்பு என்ன!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/392/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்தாண்டும் படைப்பூக்கமும்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/387</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/387#comments</comments>
		<pubDate>Fri, 04 Jan 2013 05:34:40 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[குமுகவலை]]></category>
		<category><![CDATA[படைப்பூக்கம்]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/?p=387</guid>
		<description><![CDATA[&#160; அனைவருக்கும் சனவரிப் புத்தாண்டு வாழ்த்துகள்.&#160; சனவரி ஒன்றின் இப்புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு என்று நானும் முன்பு சொன்னதுண்டு. ஆனால் முகப்புத்தகத்தில் முகநூலில் பேரா. செல்வா இது ஆங்கில உலகம் மட்டும் கொண்டாடும் புத்தாண்டு அன்று என்றும் உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுவது என்பதால் வேண்டுமானால் கிரிகோரியன் புத்தாண்டு என்று சொல்லலாம் என்றும் கருத்துச் சொல்லியிருக்கவே பொதுவாய்ச் சனவரிப் புத்தாண்டு என்று குறித்து வைப்போமே என்று தான் அப்படிக் குறிப்பிட்டுவிட்டேன். ஃபேஸ்புக் (பேசுபுக்கு) தளத்தை ஒரு வணிகப் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2013/01/black-marble-earth.jpg"><img style="display: inline" title="black marble earth" alt="black marble earth" src="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2013/01/black-marble-earth_thumb.jpg?resize=227%2C226" data-recalc-dims="1" /></a>&#160;</p>
<p>அனைவருக்கும் சனவரிப் புத்தாண்டு வாழ்த்துகள்.&#160; சனவரி ஒன்றின் இப்புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு என்று நானும் முன்பு சொன்னதுண்டு. ஆனால் <a href="https://www.facebook.com/c.r.selvakumar/posts/10151221661590966" target="_blank"><strike>முகப்புத்தகத்தில் </strike>முகநூலில் பேரா. செல்வா</a> இது ஆங்கில உலகம் மட்டும் கொண்டாடும் புத்தாண்டு அன்று என்றும் உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுவது என்பதால் வேண்டுமானால் கிரிகோரியன் புத்தாண்டு என்று சொல்லலாம் என்றும் கருத்துச் சொல்லியிருக்கவே பொதுவாய்ச் சனவரிப் புத்தாண்டு என்று குறித்து வைப்போமே என்று தான் அப்படிக் குறிப்பிட்டுவிட்டேன். </p>
<p>ஃபேஸ்புக் (பேசுபுக்கு) தளத்தை ஒரு வணிகப் பெயர் என்று அப்படியே பயன்படுத்தாமல் ஏன் <strike>முகப்புத்தகம்</strike> முகநூல் எனப் பெயர்க்க வேண்டும் என்றும் முன்பு நான் எண்ணியதுண்டு. ஆனால், சிலவற்றை இப்படிப் பெயர்ப்பதில் தவறில்லை என்பதோடு அதுவே அழகாகவும் இருப்பதால் ஏற்றுக் கொள்ளலாம். தவிர, வலியது நிலைக்கும் என்னும் டார்வின் கோட்பாட்டின்படி இன்று பலரும் <strike>முகப்புத்தகம்</strike> முகநூல் என்று சொல்லி அது நிலைத்துவிட்டதையும் உணரலாம். </p>
<p><span id="more-387"></span>
<p>நிற்க. முகநூல்/முகப்புத்தகமானாலும் சரி, லின்க்டு-இன், கூகுள்+, டுவிட்டர் போன்ற இன்ன பிற குமுகவலைத் தளங்களானாலும் சரி, ஒரு வகையில் அச்சத்தையே உண்டாக்குகின்றன. 66ஏ-விலோ வேறு ஏதேனும் காரணமாக உள்ளே பிடித்துப் போட்டு விடுவார்களோ என்னும் அச்சம் (மட்டும்) இல்லை. சும்மா உள்நுழைந்த உடனே உங்களுக்கு இவரைத் தெரியலாம் என்று கொண்டு வரும் பட்டியல் பெரும்பாலும் பொருத்தமாக இருப்பது தான். எப்படி…? எப்படி இத்தளத்திற்கு எங்களுக்குள் ஏதோ மூலையில் இருக்கும் ஒரு தொடர்பு தெரிந்தது என்று ஒரு பக்கம் வியப்பாகவும், மறு பக்கம் மலைப்பாகவும் அச்சமாகவும் இருக்கிறது. அதோடு உங்களின் இந்த நண்பர் அல்லது நண்பரின் நண்பர் இந்தச் செய்தியைப் படித்தார், இந்தத் தளத்தைக் கண்டார் என்று சம்பந்தம் இல்லாமல் என்னிடம் வந்து சொல்லும் இவை, என்னைப் பற்றி யாரிடம் என்னவென்று சொல்லுமோ தெரியவில்லை!</p>
<p>இது பரிந்துரைப்பதை நான் கேட்பதா என்று பலசமயம் வீம்புக்காகவே அது சொல்லும் தொடர்புகளோடு இணைத்துக் கொள்வதும் இல்லை. அதையும் மீறிப் பரவலாகி வரும் குமுகவலைத்தளங்களைத் தள்ளவும் முடியாமல், தயங்காது சேரவும் முடியாமல் இடைப்பட்ட நிலையில் பட்டும் படாத நிலையில், விட்டும் விடாதும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். </p>
<p>இவற்றில் இன்னுமொரு சிக்கலாக நான் உணர்வது இத்தளங்கள் நுகர்வுத் தன்மையை அதிகரிப்பதாகவும் படைப்புத் தன்மையைக் குறைப்பதாகவும் இருக்கின்றன என்பது தான்.&#160; இதனை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கலாம். தொடர்பை, உறவைப் பேணுதலும், சிறு நேர அளவளாவலும், இரசனைகளைப் பகிர்தலும், அவசரக் கேள்விகளுக்குப் பதிலும், உதவிகளும் கிடைப்பதும், பல சமூகக் காரணிகளுக்காகப் படைதிரட்டலும் எனப் பல்வேறு நன்மைகள் பயப்பவையாக இருப்பதை நானும் ஏற்றுக் கொள்வேன்.&#160; இருப்பினும் எனக்காக நான் செலவிட முடிகிற நேரத்திற்கு இவை போட்டியாகத் தான் இருக்கின்றன என்பதையும் கூடவே உணர்கிறேன். </p>
<p>முன்பெல்லாம் அவ்வப்போது நாட்குறிப்பு எழுதுவதுண்டு.&#160; அன்றைய நாளின் ஆயாசங்கள் அலுப்புகள் வெற்றிகள் மகிழ்ச்சிகள் என எதையேனும் கிறுக்கி வைத்துக் கொண்டிருந்ததிலும் ஒரு நிறைவு கிடைக்கத் தான் செய்தது. ஒரு வகைச் சுய ஆய்வுக்கும் சுய உந்துதலுக்கும் வழியாக இருந்த அந்தப் பழக்கமும் கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது. </p>
<p>வலைப்பதிவும் கூட அப்படித் தான். அப்பழக்கமும் சிதைந்து விடாதிருக்க வேண்டுமாயின் நுகர்வுத் தன்மையை மட்டுமன்றிப் படைப்புத் திறனையும் பெருக்கிக் கொள்ள உழைக்க வேண்டும். சென்ற ஆண்டும் இதே சிந்தனை இருந்த போதும் அதனைச் செயலாக்குவதில் பெரு வெற்றி பெறவில்லை. எழுத நினைத்துப் போட்டு வைத்த பட்டியல் கூட அப்படியே இன்னும் இருக்கிறது. இருந்தாலும் என்ன? இனி வருங்காலத்தில் சிறப்பாக இயங்கலாம். சென்ற காலத்துத் துவளல்கள் வருங்காலத்துக் கனவுகளைச் சிதைக்க நான் என்றும் விடுவதில்லை. </p>
<p>வோர்டுபிரசு (சொல்லச்சு <img style="border-bottom-style: none; border-left-style: none; border-top-style: none; border-right-style: none" class="wlEmoticon wlEmoticon-smile" alt="Smile" src="http://i1.wp.com/blog.selvaraj.us/images/2013/01/wlEmoticon-smile.png" data-recalc-dims="1" />) செயலியை 2.3யில் இருந்து 3.5க்கு இற்றைப்படுத்திப் புத்தாண்டைத் தொடங்குகிறேன்.&#160; ‘இதற்கு இத்தனைக் காலம் ஆச்சுதா’ என மலைக்காமல் வாழ்த்திச் செல்க!</p>
<p>வாழ்க வையகம்!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/387/feed</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>கற்ற தமிழும் கையளவும்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/382</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/382#comments</comments>
		<pubDate>Wed, 09 May 2012 05:18:22 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
				<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[கற்றது கையளவு]]></category>
		<category><![CDATA[களவும் கற்று மற]]></category>
		<category><![CDATA[கவரிமா]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/382</guid>
		<description><![CDATA[கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தும் முன்தோன்றிய தொன்மை வாய்ந்த ஒரு மொழியும், அம்மொழியின் ஒலிகளும் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் தொடர்ந்து வருவதே தனிச்சிறப்பான ஒன்று தான்.&#160; தன் இலக்கணக் கட்டமைப்போடும் இலக்கியச் செல்வங்களோடும் தமிழ் செம்மொழி என்று போற்றத் தக்கது தான். அப்பேர்ப்பட்ட ஒரு மொழிக்குச் சொந்தக்காரராய் இருந்து கொண்டு இன்னும் அச்சொத்துக்களில் ஏராளம் அறியாமல் இருக்கின்றோமே என்னும் ஒரு உள்ளக்கிடக்கை அண்மையில் மிகுதியாக உண்டாக ஆரம்பித்திருக்கிறது. அதோடு, தமிழின் மேன்மை தொன்மையில் மட்டுமன்று; அதன் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தும் முன்தோன்றிய தொன்மை வாய்ந்த ஒரு மொழியும், அம்மொழியின் ஒலிகளும் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் தொடர்ந்து வருவதே தனிச்சிறப்பான ஒன்று தான்.&#160; </p>
<p>தன் இலக்கணக் கட்டமைப்போடும் இலக்கியச் செல்வங்களோடும் தமிழ் செம்மொழி என்று போற்றத் தக்கது தான். அப்பேர்ப்பட்ட ஒரு மொழிக்குச் சொந்தக்காரராய் இருந்து கொண்டு இன்னும் அச்சொத்துக்களில் ஏராளம் அறியாமல் இருக்கின்றோமே என்னும் ஒரு உள்ளக்கிடக்கை அண்மையில் மிகுதியாக உண்டாக ஆரம்பித்திருக்கிறது. </p>
<p>அதோடு, தமிழின் மேன்மை தொன்மையில் மட்டுமன்று; அதன் தொடர்ச்சியிலும் அடங்கி இருக்கிறது என்னும் வழக்கிற்கேற்ப நமக்குப் பின்னான புலம்பெயர் சந்ததியினருக்கும் நம் மொழியையும் அடையாளத்தையும் கொண்டு செல்ல வேண்டுமே என்னும் கருக்கடையும் ஏற்படுகிறது. </p>
<p>இவ்விரு எண்ணங்களுக்கும் தூபம் போடுவதாகவும் அதே நேரத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த உதவுவதாகவும் <a href="https://www.valluvantamil.org/">வார இறுதித் தமிழ்ப்பள்ளிகள்</a> அமைந்திருக்கின்றன. </p>
<p>நாடெங்கும் தன்னார்வலர்கள் தமிழ்ச் சங்கங்களும், பள்ளிகளும், விழாக்களும் அமைத்து முயன்று வருவதைப் போன்றே எங்கள் பகுதியிலும் இப்போது ஒன்றிற்கு இரண்டாகப் பலபத்து மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் உருவாகி இருக்கின்றன. </p>
<p>இவையிருக்க, எங்கள் வீட்டிலும் சில வாதங்கள். எந்த மாற்றத்திற்கும் ஆரம்பநிலை எதிர்ப்புகள் இருப்பது இயல்பு தானே. எங்கள் மக்களும், இவ்வருடம் தமிழ்ப்பள்ளிக்குச் செல்வோம் என்று சொன்ன போது, “எதுக்குப் போகணும்”, “வீட்டிலேயே கத்துக்கலாம்”, “எதுக்காகக் கத்துக்கணும்”, என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர். </p>
<p><span id="more-382"></span></p>
<p>இவற்றுக்குப் பதில் சொல்லவும் நம் தமிழைத் தான் அழைத்து வரவேண்டியிருக்கிறது.&#160; அதற்கு இவ்விடத்தில் வலு இருக்கிறதோ இல்லையோ நமக்குத் தெரிந்தது அவ்வளவு தானே! புதிய விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் கருத்துக்கு ஆதரவு தேடிக் “ ‘களவும் கற்று மற’ என்று வள்ளுவரே சொல்லி இருக்கார் தெரியுமா?”, என்றேன். </p>
<p>“என்னது? வள்ளுவரா? அவரெங்கே அப்படிச் சொன்னார். அது ஒரு பழமொழிங்க”, என்று மொழிந்தார் மனைவி. பிள்ளைகளை வலியுறுத்தும் பேச்சு மறந்து போய்க் களவைப் பற்றி வள்ளுவர் சொன்னாரா என்னும் வாதத்தில் இறங்கிவிட்டோம்.</p>
<p>எங்கள் பள்ளியிலும் சென்று பிற ஆசிரியர்களிடம் இம்மாபெரும் ஐயத்தைச் சொல்லித் தீர்வு கேட்க, அங்கும் பாதிப்பேர் வள்ளுவர் கூற்றென்றும் மீதிப் பேர் இல்லையென மறுத்தும் இரு கட்சியாக நின்றனர். இணையத் தேடலில் பார்த்துக் கொள்வோம் எனச் சில நேரம் முயன்றும் அறுதியாய் இது வள்ளுவர் எழுதியது தான் என்பதற்குச் சான்றே கிட்டவில்லை. பிறகு தான் மூலத்திற்கே சென்று பார்க்கலாமே என்று வள்ளுவத்தை வைத்திருக்கும் சில தளங்களில் சென்று தேட, ‘களவு’ என்னும் சொல்லை வள்ளுவர் ஒரே ஒரு குறளில் தான் பாவித்திருக்கிறார். அது நிச்சயமாகக் கற்று மறத்தல் பற்றி அன்று.&#160; நல்ல வேளை நான் பந்தயம் ஏதும் கட்டவில்லை!</p>
<p>ஆக, தமிழ்ப்பள்ளியானது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் நிறையக் கற்றுத் தருகிறது. இப்படித் தான் இன்னுமொரு நாள் நிலை-1ன் ஆசிரியை ஒருவர் ‘படங்காட்டிப் பெயர் சொல்லல்’ என்று சுவையாகப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது Yak விலங்கின் படத்தைக் காட்டினால் என்ன சொல்வது என்று குழம்பியிருக்கிறார். (A for Apple,… என்னும் வரிசையில் இருக்கும் படங்களைக் கொண்டு வந்ததில் Y for Yakம் வந்துவிட்டது!). பிற ஆசிரியர்களிடமும் இது பற்றி&#160; வினவினார். ஒருவருக்கும் சரியாகத் தெரியவில்லை. </p>
<p><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="yak" border="0" alt="Fair Use from http://i0.wp.com/gearjunkie.com/images/5330.jpg" src="http://i0.wp.com/gearjunkie.com/images/5330.jpg" data-recalc-dims="1" /></p>
<p>“பாக்கறதுக்கு எருமை மாதிரி தானேங்க இருக்கு. சும்மா காட்டெருமைன்னு சொல்லுங்க”, என்றேன். </p>
<p>தமிழ்ச்சூழலில் காணக்கிடைக்காத அவ்விலங்கைக் காட்டெருமை என்று அதன் தோற்றத்தை வைத்துச் சொல்லலாமே என்று நினைத்தாலும் அது ஒரு குறையான அனுமானம் தான். </p>
<p>“அது எப்படிங்க? அப்போ Wild Buffaloவிற்கு என்னன்னு சொல்லுவீங்க? அது தானே காட்டெருமை?”, என்று அவர் எதிர்கேள்வி கேட்கவே, சரி அது ஒத்துவராது என்று விட்டுவிட்டோம். இப்போதெல்லாம் நாட்டிலே நிறையக் கேள்விகள் கேட்கின்றனர்!&#160; <img style="border-bottom-style: none; border-left-style: none; border-top-style: none; border-right-style: none" class="wlEmoticon wlEmoticon-smile" alt="Smile" src="http://i1.wp.com/blog.selvaraj.us/images/2012/05/wlemoticon-smile.png" data-recalc-dims="1" /></p>
<p>இதை விட்டுவிடுவதா என்று பல அகரமுதலிகளிலும், இணையத்திலும், விக்சனரி, விக்கிப்பீடியா என்றும் தேடிப் பார்த்தும் Yak-ற்குச் சரியான சொல் சிக்கவில்லை. ஒரு வகையான திபெத்திய மாட்டுவகை என்றோ, கவரிமா என்றோ தான் இருந்தது. </p>
<p>எருமை மாதிரி இருக்கும் ஒன்றை மான் என்று எப்படிச் சொல்வது எனக் கேள்வி எழுந்தாலும் மானும் கொஞ்சம் எருமை மாதிரி தான் இருக்கும் என்பதைச் சில ஆண்டுகள் முன் நெடுஞ்சாலையில் எங்கள் வாகனத்தில் வந்து இடித்துக் கதவை உடைத்த ஒரு மானை வைத்து நான் உணர்ந்திருந்தேன்.&#160; இருப்பினும் ‘மயிர் நீப்பின் உயிர் நீக்கும்’ தன்மை வாய்ந்த ஒன்றை எருமைக்கு நிகரான Yak என்று எப்படிச் சொல்வது? எப்படியோ தவறாகக் கவரிமான் என அகரமுதலிகளில் இடம்பெற்று விட்டது போலும் என நினைத்தேன். </p>
<p>ஆனால் மேலும் தேடியதில் சிக்கியது ஒன்று:    <br /><i>&quot;கவரிமா என்றொரு மானே கிடையாது. இமயத்தில் வாழும் காட்டுமாடு, சடை போன்ற முடி உடையது. கவரி என்றால் மயிர், மா என்றால் விலங்கு. இதுவே கவரிமா. இமயமலையில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே வாழும் இந்த மாடு உடலிலுள்ள மயிரை இழந்துவிட்டால் உயிர் துறந்துவிடும். இதையே வள்ளுவர் உவமையாக &#8216;மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமா&#8217; என்று குறிப்பிட்டார். பின்னால் வந்தவர்கள் தங்கள் வசதிக்கேற்ப &#8216;நாங்களெல்லாம் கவரிமான் பரம்பரை&#8217; என்று கூறி இல்லாத ஒரு மான் இனத்தை உருவாக்கிவிட்டனர். &quot;</i></p>
<p><b><a href="http://www.poovulagu.org/nature3_one.htm">உசாத்துணை:&#160; ச.முகமது அலி எழுதிய ‘இயற்கை : செய்திகள், சிந்தனைகள்&#8217; என்னும் நூல் பற்றிய விமர்சனக் குறிப்பு.</a></b></p>
<p>ஆக, <strong><em>யாக்கு என்பது கவரிமா </em></strong>என அறிவோம். </p>
<p>மேலும், “பி.எல். சாமி அவர்கள் சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் என்னும் நூலிலும், செந்தமிழ்ச்செல்வி என்னும் மாதிகையிலும் இது பற்றிக் குறித்துள்ளார்”, என்று <a href="http://ta.wikipedia.org/wiki/பேச்சு:கூழைக்கடா">தமிழ் விக்கியின் உரையாடல் ஒன்றில் கனடா பேராசிரியர் செல்வா</a> குறிப்பிட்டுள்ளார். </p>
<p>“<em>Yak என்னும் விலங்கைத் தமிழர்கள் கவரி மான் என்று அழைதார்கள் என்பதை பி. எல். சாமி ஐயத்திற்கு இடமின்றி எடுத்துக்காட்டியுள்ளார். எப்படி நரந்தம் புல் உண்டு, குளிரான இமயமலைப் பகுதியில் வாழ்கின்றது என்னும் செய்திகளைத் தொகுத்து எழுதியுள்ளார். திருவள்ளுவரின் குறளிலே,      <br />மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்       <br />உயிர்நீப்பர் மானம் வரின்.</em></p>
<p><em>என்னும் குறளில் வரும் கவரிமா இந்த Yak தான். எப்படி மயிரை நீக்கிவிட்டால், குளிர் தாங்கமாட்டாமல், கவரிமா இறந்து படுமோ, அதுபோல், மானம் இழந்தால் தம் உயிரைநீப்பர் மானமுடையவர் என்கிறார். இதனை அறியாமல் பலரும் ஒரு முடி விழுந்தாலும் உயிர் நீங்கும் மான் இனம் (கற்பனை) என்று பலர் பொருள் கூறியுள்ளனர் (தவறுதலாக). சங்க இலக்கியத்திலே பல இடங்களில் கவரி மா வாழும் இமயமலைப் பகுதியையும், அது உண்ணும் நரந்தம் புல்லையும் பற்றித் தெளிவான குறிப்புகள் உள்ளன. “</em></p>
<p>இப்படியாகப் பல இடங்களிலும் தொன்மை திரிந்த வழக்கை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையை மீட்டெடுக்க வேண்டும். </p>
<p>தமிழ்ப்பள்ளியின் சில மாதங்களிலே கற்றுக் கொண்டவற்றிற்கு இவை சில சான்றுகள் தாம். இன்னும் இலக்கணக் குறிப்புகள், இருபெயரொட்டுப் பண்புத்தொகை, குறிப்பு வினைமுற்று, அகரயீற்றுப் பெயரெச்சம் என அறிந்து கொண்டவை பலபல.&#160; </p>
<p>தமிழின் தொன்மை தொடர்வது அடுத்த தலைமுறையினருக்கு மொழியினை பயிற்றுவிப்பதில் மட்டுமன்று; நமது மொழியறிவின் குறைகளைக் களைந்து கொள்வதிலும், தொடர்பான பிற செய்திகளை அறிந்துகொள்வதிலும் கூட உள்ளது என்று எனக்கு மேலும் ஆர்வம் பிறக்கிறது. அதிகம் அறிய அறிய அறியாதது தான் அதிகரிப்பதாகவும் படுகிறது. அதனால் தானே நம் தமிழில் அன்றே சொல்லி வைத்தாள் ஔவைப் பாட்டி:&#160; ‘கற்றது கையளவு; கல்லாதது உலகளவு’.</p>
<p><a href="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/05/avvaiyar.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; margin: 0px 12px 0px 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: left; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="avvaiyar" border="0" alt="http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7a/Statue_of_Avvaiyar.jpg" align="left" src="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2012/05/avvaiyar-thumb.jpg?resize=216%2C240" data-recalc-dims="1" /></a></p>
<p>“என்னது? நிச்சயமா ஔவையார் தான் அதைச் சொன்னாங்களான்னு கேக்கறீங்களா? இருங்க, இணையத்துல கொஞ்சம் வேலை இருக்கு. அப்புறமா வந்து அதுக்குப் பதிலச் சொல்றேன்!”</p>
<p>கூகுளைத் தேடி ஓடினேன். </p>
<p>“<a href="http://ta.wikipedia.org/wiki/ஔவையார்">எந்த ஔவையார் பத்திக் கேக்குறீங்க?</a> குறைஞ்சது மூணு பேராவது இருந்திருக்காங்க”, என்று கூகுளும் என்னை மறுகேள்வி கேட்கிறது!</p>
<p>&#160;</p>
<p>பி.கு.: வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ‘தென்றல்-முல்லை’ சித்திரைச் சிறப்பிதழில் (2012 ஏப்ரல்) வெளிவந்த கட்டுரை. </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/382/feed</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆழ்கடலில் வெடித்த பாறைநெய்க் கிணறு</title>
		<link>http://blog.selvaraj.us/archives/378</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/378#comments</comments>
		<pubDate>Sat, 21 Apr 2012 02:58:52 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
				<category><![CDATA[வேதிப்பொறியியல்]]></category>
		<category><![CDATA[BP]]></category>
		<category><![CDATA[Deepwater Horizon]]></category>
		<category><![CDATA[Gulf Oil Spill]]></category>
		<category><![CDATA[ஆழ்கடல் எண்ணெய்க் கிணறு]]></category>
		<category><![CDATA[பாறைநெய்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/378</guid>
		<description><![CDATA[முன்குறிப்பு: 2010 ஏப்ரல்-இல் பிரிட்டிசு பெட்ரோலியம் நிறுவனத்தின் மெக்சிக்கோ வளைகுடா விபத்தும் எண்ணெய்க் கசிவும் ஏற்பட்டு இன்றோடு சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன.&#160; அச்சமயத்தில், இது பற்றிய விரிவான ஒரு கட்டுரையைப் புதிய இணைய இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதன் காரணமாக&#160; எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால், அவ்விதழ் வெளிவரவே இல்லை என்பதால் இவ்விடுகை இத்தனை மாதங்களாய் வெளியுலகம் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தது. அதனைச் சற்று இற்றைப் படுத்தி இங்கே இடுகிறேன். * * * * [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><u>முன்குறிப்பு:</u> 2010 ஏப்ரல்-இல் பிரிட்டிசு பெட்ரோலியம் நிறுவனத்தின் மெக்சிக்கோ வளைகுடா விபத்தும் எண்ணெய்க் கசிவும் ஏற்பட்டு இன்றோடு சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன.&#160; அச்சமயத்தில், இது பற்றிய விரிவான ஒரு கட்டுரையைப் புதிய இணைய இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதன் காரணமாக&#160; எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால், அவ்விதழ் வெளிவரவே இல்லை என்பதால் இவ்விடுகை இத்தனை மாதங்களாய் வெளியுலகம் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தது. அதனைச் சற்று இற்றைப் படுத்தி இங்கே இடுகிறேன்.</p>
<p>* * * * </p>
<p>அமெரிக்க மெக்சிக்கோ வளைகுடாவின் ஆழ்கடலில் 2010ல் ஏப்ரல் மாதம் பிரிட்டிசுப் பெட்ரோலியம் (பீ.பி) நிறுவனத்தின் பாறைநெய்க் கிணறு ஒன்று வெடித்துத் தொடர்ந்து ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குக் கச்சா எண்ணெய்யைக் (கரட்டு நெய்யைக்)&#160; கடலில் கலக்க விட்டுக் கொண்டிருந்தது. கசிந்த கரிய பாறைநெய்யின் அணுமானித்த அளவு நாளுக்கு நாள் மாறி, உயர்ந்து ஆரம்பத்தில் நாளொன்றுக்கு ஆயிரம் பீப்பாய் அளவு (1000 BPD) என்று சொல்லப்பட்டதில் இருந்து அதிகபட்சம் அறுபத்தைந்து ஆயிரம் பீப்பாய் (65000 BPD) அளவுக்கு இருக்கலாமெனச் சொல்லப்பட்டது.&#160; (ஒரு பீப்பாய் என்பது சுமார் 160 லிட்டர்). அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாக இது கருதப் படுகிறது. </p>
<p><a href="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/04/image.png"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="image" border="0" alt="image" src="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/04/image-thumb.png?resize=240%2C204" data-recalc-dims="1" /></a></p>
<p><span id="more-378"></span></p>
<p>பாறைநெய்க் கசிவு கடல்பரப்பில் இருந்து கீழே ஒரு மைல் ஆழத்தில் இருந்தாலும், அதன் தாக்கம் அமெரிக்கக் கரைகளையும் கூட வந்தடைந்தது.&#160;&#160; வெண்மணல் கடற்கரைகளில் தார் உருண்டைகள் காணப்பட்டன.&#160; கடல்வாழ் உயிரினங்கள், கடற்பறவைகள் மீது எண்ணெய்ப் பூச்சுக்கள்; தாவரம் மற்றும் புதல்களின் அழிவு; எனப் பாதிப்புகள் ஏராளம்.&#160; எண்ணெய்யில் முங்கி்ய பறவைகள் பறக்க முடியாமலும், தமது உடல்வெப்பத்தைச் சூழலோடு இயைத்திருக்க முடியாமலும் இறந்து பட்டன. பாட்டில்மூக்கு டால்பின்கள், திமிங்கலம், கடலாமைகள் போன்ற உலகில் அருகிவரும் சில கடல்வாழ் பாலூட்டி இனங்களும் தாக்கத்திற்கு ஆளாயின. </p>
<p>பாறைநெய்யின் சில கூறுகள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாய் இருக்குமென்பதால் அவற்றோடு நேரடித் தொடர்பில் வரும் உயிர்கள் பலவும் பாதிப்புக்குள்ளாகும். </p>
<p><img alt="" src="http://i1.wp.com/www.bp.com/liveassets/bp_internet/globalbp/globalbp_uk_english/incident_response/STAGING/local_assets/images/Baby_Brown_Pelicans1_375xvar.jpg" data-recalc-dims="1" /> <img alt="" src="http://i1.wp.com/media.scpr.org/images/news/2010/06/05/bird-pano.jpg?resize=300%2C220" data-recalc-dims="1" /></p>
<p>படம்: எண்ணெய்ப் பூச்சுக் கொண்ட பெலிக்கன் பறவைகள் (c) BP plc.</p>
<p>இவற்றோடு மீன்பிடி தொழிலையும் அது சார்ந்த வாழ்க்கையையும் கொண்டிருக்கும் இக்கடலோரப் பகுதி மக்களின் வாழ்வு முறைகளும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கும் கடலோரச் சிற்றூர்களும் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. லூசியானா மாநிலம் இறால் மற்றும் பிற கடல் உணவுகளுக்குப் பெயர் பெற்ற ஒன்று.&#160; வெடித்த கிணறு லூசியானாக் கரைகளில் இருந்து நாற்பது மைல் தொலைவில் இருந்த ஒன்று என்பதால் முதலில் பாதிப்படைந்தது இந்த மாநிலம் தான். அதோடு, அருகே இருக்கிற மிசிசிப்பி, அலபாமா, புளோரிடா மாநிலங்களிலும் கசிவின் தாக்கம் இருந்தது.<img alt="" src="http://i1.wp.com/i.huffpost.com/gadgets/slideshows/6519/slide_6519_101477_large.jpg?resize=400%2C300" data-recalc-dims="1" /></p>
<p>படம்: கடல் நீரில் கலந்த எண்ணெய்</p>
<p>* * * *</p>
<p>பீ.பி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது பெயரை பியாண்ட் பெட்ரோலியும் (Beyond Petroleum) என்று, பெட்ரோலியத்துக்கு அப்பால் என்னும் பொருள்படத் தனது பெயரை வெறும் (BP) பீ.பி என்று சுருக்கிக் கொண்டது.&#160; பாறைநெய் தவிர, சோளத்தில் இருந்து எடுக்கும் எத்தனால், சூரிய ஒளி ஆற்றல் என்று மாற்று எரிபொருள்களை நோக்கிச் செல்கிறது என்று காட்டவும் இப்பெயர் மாற்றம்.&#160; பெயர் மாறினாலும், இன்னும் பிரிட்டிசுப் பெட்ரோலியம் என்றே பலராலும் நினைக்கப் படும் பீ.பி உலகின் மிகப் பெரிய தனியார் எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்று.&#160; எக்சான் மோபில் (அமெரிக்கா), ஷெல் (டச்சு), டொட்டால் (பிரெஞ்சு), கனாக்கோ (அமெரிக்கா), செவ்ரான் (அமெரிக்கா) ஆகியவற்றோடு சேர்ந்து மாபெரும் (தனியார்) எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.&#160; மத்தியக் கிழக்கில் முதலில் பாறைநெய்யைக் கண்டுபிடித்த நிகழ்வோடு நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட நிறுவனம் இது. </p>
<p><a href="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2012/04/image1.png"><img style="display: inline" title="image" alt="image" src="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/04/image-thumb1.png?resize=198%2C240" data-recalc-dims="1" /></a></p>
<p>பொதுவாகவே உலகின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மக்கள் மத்தியில் ஒரு நொசிவான தோற்றத்தைப் பெற்றிருந்தாலும், அவை இன்றைய ஆற்றல் தேவைகளை ஈடு செய்யப் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன.&#160; உலக ஆற்றல் தேவை தற்போது நாளொன்றுக்கு ஏறத்தாழ 85 மில்லியன் பீப்பாய் அளவாக இருக்கிறது. அதில் 25 விழுக்காடு ஆற்றலை அமெரிக்கா மட்டுமே பயன்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தேவையும் அது இன்னும் அதிகரித்தவண்ணமே இருப்பதையும் ஈடுகட்டத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் நிலத்தடி மற்றும் கடலடியில் கிணறு துளைத்துப் பாறைநெய்யை உற்பத்தி செய்து வருகின்றன.</p>
<p>ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கிணறுகளின் வளம் குறைய ஆரம்பிப்பதாலும், இன்னும் தேவை அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், புதிய எண்ணெய் வளங்களைக் கண்டுபிடிக்கவும், துளைத்து எடுக்கவும், பாறைநெய் நிறுவனங்கள் தமது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே இருக்கின்றன.&#160; சுலபமான வழிகளிலே எண்ணெய் கிடைத்த காலம் போய், இன்று வெகு தொலைவு சென்றும், புதிய நுட்பங்கள் மூலமும் உற்பத்தியைப் பெருக்க வேண்டியிருக்கிறது.&#160; ஆழ்கடலில் கிணறு துளைத்து அங்கிருந்தும் இந்தக் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் முயற்சியும் இதனோடு சேர்ந்ததே.</p>
<p>அமெரிக்காவின் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியிலும் பல கிணறுகள் ஏற்கனவே துளைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உற்பத்தியாகும் பாறைநெய் அமெரிக்க உற்பத்தியில் 25 விழுக்காடு அளவிற்கு இருக்கும்.&#160; உலகம் முழுதும் உள்ள ஆழ்கடல் கிணறுகளின் உற்பத்தியைச் சேர்த்தால், அவை சவுதி அரேபியாவின் மொத்த உற்பத்தி அளவை எட்டிவிடும். கரையருகே கிணறு துளைத்தல் பல காலமாக நடந்து வந்தாலும், ஆழ்கடலில் எண்ணெய் தேடிச் சென்றது அண்மைய நிகழ்வு தான். கடல் பரப்பில் இருந்து 500 அடி ஆழத்திற்கும் மேல் செல்ல வேண்டியிருப்பின் அதனை ஆழ்கடல் கிணறு என்று சொல்வர்.</p>
<p>அமெரிக்க அரசு இந்தக் கடல் பகுதியைப் பல பகுதிகளாகப் பிரித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு தொகைக்குக் குத்தகைக்கு விடும். அதன் பிறகு துளைத்தல் வெற்றி பெற்று எண்ணெய் கண்டுபிடிக்கப் பட்டால், அதன் வருவாயில் ஒரு பங்கைக் கசராகவும் அரசு பெற்றுக் கொள்ளும். இந்தப் பணியினைச் செய்வதும், மேற்பார்வை பார்ப்பதும் மெட்டீரியல்சு மேனேஜ்மெண்ட் சர்வீசு (MMS) என்னும் அரசுத்துறை. இத்துறையில் இருந்த ஊழலும், அதிகாரத்தில் இருப்போர் இந்நிறுவனங்கள் அளிக்கும் &#8216;அன்பளிப்பிலும்&#8217;, கவனிப்பிலும், தாம் செய்யவேண்டிய பணியைச் செய்யாமலும், பாரபட்சம் காட்டி ஒப்புதல் அளிக்கத் தகுதியில்லாதவற்றிற்குக் கூட ஒப்புதல் அளித்ததும், பாதுகாப்பான செயல்பாட்டிற்கு உலை வைத்து விட்டது என்னும் குற்றச்சாட்டும் உண்டு. இந்த விபத்தின் பிறகு இத்துறையின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார்.</p>
<p>லூசியானா கரையை ஒட்டி 40 மைல் தொலைவில் மிசிசிப்பிக் கேன்யன் பிளாக் 252 என்னும் பகுதியில் பீ.பிக்காக ஒரு சோதனைக் கிணறு துளைக்க, டீப்வாட்டர் ஒரைசான் (Deepwater Horizon) என்னும் துளைகப்பல் ஈடுபட்டது.&#160;&#160; இந்தக் கப்பல் டிரான்சோசன் (Transocean) என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமானது. ஒப்பந்த முறையில் பிற நிறுவனங்களுக்காகக் கிணறு துளைத்தலில் ஈடுபட்டிருப்பது இவர்களின் முக்கியப் பணி. அதனோடு, ஏலிபர்ட்டன்(Halliburton) என்னும் நிறுவனமும் சில பணிகளைச் செய்யச் சேர்ந்து கொண்டிருந்தது.&#160; வெடிப்பின் பின் இம்மூன்று நிறுவனங்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டன. இருப்பினும் பெரும்பாலான பொறுப்பு பீ.பி நிறுவனத்தையே சேரும்.&#160; பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவர செய்யாமல் பீ.பியில் 2005இல் டெக்சசு சிட்டி தூய்விப்பாலையில் (Refinery) நடந்த விபத்தில் 15 பேர் மாண்டதும், 2006ல் அலாசுக்கா புழம்புவரிசையில் (Pipeline) கசிவு ஏற்பட்டதும் அவர்களின் மீது இன்னும் இருக்கும் கரும்புள்ளிகள்.</p>
<p>கிணறு துளைக்க வேண்டிய இடத்தில் கடல் ஐந்தாயிரமடி ஆழம் கொண்டது. சாதாரணமாக, நூறு அடிக்குக் கீழே மனிதர்கள் செல்வதில்லை. 350 அடிக்குக் கீழே சூரிய ஒளி கூட எட்டுவதில்லை. தொலை இயக்கி வண்டிகளையும் இயந்திரன்களையும் கொண்டு இங்கே 5000 அடிக்குக் கீழே உள்ள கடல் படுகையில் கிணறு துளைக்க ஆரம்பித்து, அதன் கீழே இன்னும் 18000 அடி வரை எண்ணெய் வளம் தேடித் துளைக்கின்றனர். கடலின் பரப்பில் இருந்து கீழே செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாகும். கடல் படுகையை ஒட்டிய அழுத்தம் பரப்பிலே இருக்கும் சூழ் அழுத்தத்தை விட 150~200 மடங்கு அதிகம் இருக்கும். அதோடு, துளைக்கிணற்றில் கீழே செல்லச் செல்லக் கடும்பாறைகளின் கீழே அழுத்தம் இன்னும் அதிகம் ஆகும். காட்டாக, சூழிய அழுத்தம் சுமார் 15 பவுண்டு (14.7 பவுண்டு/சதுர அங்குலம்) என்றால், கடல் படுகையில் 2200 பவுண்டு அழுத்தமும், கிணற்றினுள் 12000 பவுண்டு அழுத்தம் வரையிலும் இருக்கும். கிணற்றினுள் இதை விடவும் அதிகரித்த அழுத்தம் இருந்திருக்கலாம் என்றும் சில கருத்துக்கள் உண்டு.</p>
<p><img alt="" src="http://i2.wp.com/graphics8.nytimes.com/packages/images/newsgraphics/2010/0528-oil-spill-efforts/0604-web-RELIEF.png?resize=460%2C520" data-recalc-dims="1" /></p>
<p>படம்: எண்ணெய்க் கிணறும் கசிவும் மாற்றுத் துளைகளும்</p>
<p>சூரிய ஒளி பரவாத மையிருட்டில் கடலடியில் உள்ள நிலையும் காட்சியும் பற்றி மனிதனுக்கு இன்னும் அதிகம் தெரியாதவை. வானவெளியின் நிலவைப் பற்றித் தெரிந்த அளவிற்குக் கூடக் கடல் ஆழங்கள் பற்றித் தெரியாது. இருப்பினும் இவ்வாழங்களில் சென்று இத்தகைய கிணறு துளைத்தல், பொறியியல் விந்தை தான். அபாயங்களும் தீவாய்ப்பும் நிறைந்த செயல் என்பதால் இங்கே கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியம் பெறுகின்றன.&#160; இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரிவர மேற்கொள்ளவில்லை என்பது தான் இந்நிறுவனங்களின் மீது வைக்கப் படும் குற்றச்சாட்டு.</p>
<p>எதிர்பார்த்ததை விட அதிக காலம் எடுத்துக் கொண்டாலும், பீ.பி.யின் சோதனைக் கிணறு துளைத்தல் வெற்றியே பெற்றது. 13000 அடி தொலைவில் எண்ணெய் மற்றும் எரிவளி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இக்கிணற்றுப் பரப்பில் 50 முதல் 100 மில்லியன் பீப்பாய் அளவிற்குப் பாறைநெய் இருக்கும் என்று கணிக்கப் பட்டது. அதன் பிறகு இத்துளைகப்பலின் வேலை, கவனமாகக் கிணற்றை மூடிவிட்டுச் செல்வதே.&#160; பிறகு வேறொரு சமயம் உற்பத்தியைத் தொடங்க வேறு கிணறுகள் துளைக்கப் படும்.</p>
<p><img alt="" src="http://i1.wp.com/graphics8.nytimes.com/packages/images/newsgraphics/2010/0528-oil-spill-efforts/fire.png?resize=400%2C280" data-recalc-dims="1" />&#160;</p>
<p>படம்:&#160; வெடிப்பின் பிறகு பற்றி எரியும் துளைக்கப்பல் டீப்வாட்டர் ஒரைசான். </p>
<p>இது போன்ற கடினச் சூழலில் செய்யும் வேலைக்கு ஒவ்வொரு நாளுக்கும் செலவு அதிகரித்தபடியே இருக்கும். நாளொன்றுக்குப் பல நூறாயிரம் (இலட்சம்) டாலர்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் விரைவில் பணியை முடிக்க அழுத்தம் இருக்கும். ஏற்கனவே எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதால் விரைவில் கிணற்றை மூடிவிட்டுச் செல்ல பீ.பியின் மீதும் அதிகம் அழுத்தம் இருந்ததாகச் சொல்லப் படுகிறது.</p>
<p>கிணற்றை மூடச் சிமெண்ட் ஊற்றிக் காய வைக்க வேண்டும். அதற்குத் தேவையான நேரத்திற்குப் பிறகு, அழுத்தச் சோதனைகள் செய்து கிணறு சரியாக மூடப்பட்டதா என்று சோதனை செய்யவேண்டும். செலவைக் குறைக்கும் நோக்கத்திலும், என்ன நடந்து விடப் போகிறது என்னும் அலட்சியத்திலும், இச்செயல்களைச் சரியாகச் செய்யாமல் விட்டுவிட்டனர். அதோடு, இதன் செயல்பாட்டிலும், பீ.பியும், டிரான்சோசனும் கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் கொண்டிருந்தனர் எனவும் சொல்லப் படுகிறது. சிமெண்ட் வேலை செய்யும் ஏலிபர்ட்டன் மீதும் சிமெண்ட் சரியாக அமையவில்லை என்னும் குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது. முன்னர் இந்நிறுவனம் முன்னாள் துணையதிபர் டிக் சேனியின் தலைமையிலும் இருந்த ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>ஒவ்வொரு துளைக்கிணற்றிலும் படுகை மீது வெடிப்புத் தடுப்பி (Blow Out Preventer) என்னும் சாதனம் இருக்கும். அதிக அழுத்தத்தில் இருக்கும் துளைக்கிணறுகளில் விபத்துக்கள் மற்றும் வெடிப்புக்கள் ஏற்படுவது புதிதல்ல. அது போன்ற சமயங்களில் இந்த வெடிப்புத் தடுப்பியில் இருக்கும் தடுக்குகள் (Valves) உடனே மூடிக் கிணற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும். துளைசேறு (Drilling Mud) என்னும் ஒரு கலவையும் துளையினுள் கிணற்று அழுத்தத்திற்கும் மேல் அதிகமாக இருந்து ஒரு தடுப்பைக் கொடுக்கும். சிமெண்ட் ஊற்றிக் காய்ந்த பிறகு இந்தத் துளைசேற்றை எடுத்துவிட்டுக் கடல் நீரை விட்டுத் துளையை நிரப்பி விடுவர்.</p>
<p>இங்கே, சிமெண்ட் சரியாகக் காயாமல், கிணற்றை உறுதியாக மூடவிடாமலே அடுத்த நடவடிக்கைகளில் இறங்கி விட்டனர் என்றும், அதிக அழுத்தம் கொண்ட துளைசேறை முன்னதாகவே வெளியே எடுத்துவிட்டதால், பாறைநெய் அழுத்தம் காரணமாகக் கிணறு வெடித்துக் கொண்டு கிளம்பிவிட்டது என்றும் ஒரு தேற்றம் உண்டு. அதோடு, அசாதாரணச் சூழல்களில் தன் வேலையைச் செய்து காக்க வேண்டிய</p>
<p>வெடிப்புத் தடுப்பியும் சரியாக வேலை செய்யாததால், கிணறு மூட முடியாமல் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.&#160; இது சரியாக வேலை செய்யவில்லை என்றும் முன்னதாகவே சோதனைகளில் தெரியவந்தும் அலட்சியமாகக் கவனிக்காமல் விட்டுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.</p>
<p>பாறைநெய்யோடு எரிவளியும் (மெத்தேன்) அதிக அழுத்தத்தில் இருக்கும் என்பதால், கிணறு கட்டுப்பாடின்றிப் போன போது, இவ்வெரிவளி பீறிட்டுக் கொண்டு வெளிவந்து, அவ்வாறு வரும்போது ஏற்படும் அழுத்தக் குறைவால் வேகம் பெற்றுக் கப்பல் வரைக்கும் வந்து சீறியது. அங்கே இருந்த இயந்திரங்களின் பொறி பட்டுத் தீப்பிடித்துக் கப்பலையே வெடிக்க வைத்து விட்டது. இரண்டு நாட்கள் எரிந்த தீ கப்பல் முழுவதையும் எரிந்து மூழ்கச் செய்தது. பணி புரிந்தோரில் 11 பேர் இருந்த இடம் தெரியாமல் இறந்தனர். மேலும் 17 பேர் காயமுற்றனர்.&#160; நூற்றுக்கணக்கில் பிறர் தப்பிப் பிழைத்தனர்.</p>
<p>மூழ்கும் கப்பலில் இருந்து ஒரு நீண்ட குழாய் கிணற்றை இணைத்திருக்கும் என்பதால், கப்பல் மூழ்கிய போது அக்குழாயும் மூழ்கியது. ஒரு மைல் நீண்ட குழாய் மூழ்கும்போது மடங்கியதில் இரண்டு இடங்களில் உடையவும் செய்தது. இவ்வுடைப்புக்களில் இருந்தும், குழாயின் எல்லையிலும் எண்ணெய் கசிய ஆரம்பித்திருப்பது பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.</p>
<p>எல்லா விசயங்களையும் போலவே இப்பிரச்சினையிலும் அரசியல் தலையீடும் தாக்கமும் அமெரிக்காவிலும் உண்டு. பொதுவாகக் குடியரசுக் கட்சியினர் (Republicans) எண்ணெய் நிறுவனங்களின் சார்பானவர்கள் என்ற கருத்து நிலவினாலும், குடியரசு, மக்களாட்சி (Democrats) இரண்டு கட்சியினருமே தங்கள் தேர்தல் நிதிக்காக இவ்வெண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவது வழக்கமே. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் இந்தக் கசிவுப் பிரச்சினையால் உண்டான அழுத்தம் அதிகம். ஒரு நுட்பப் பிரச்சினைக்கு அரசியல் என்ன தீர்வைச் சொல்லிவிட முடியும் என்றாலும், அவர் மீது வைக்கப் பட்ட விமர்சனங்கள் அதிகம்.</p>
<p>இதற்கு முந்தைய ஆண்டுகளில் இதே பகுதியைத் தாக்கிய அரிக்கேன் கட்ரீனாவின் போது சரியான நிவாரணப் பணிகளைச் செய்ய இயலாத புஷ் உடன் இதனை இணைத்து இது ஒபாமாவின் கட்ரீனா என்று விமர்சனங்கள் எழுந்தன. </p>
<p>கட்ரீனாவிற்குப் பிறகு புஷ் தனது செல்வாக்கை இழந்தது போன்றே ஒபாமாவிற்கும் இந்த எண்ணெய்க் கசிவு அமையும் என்று கருதப்பட்டது. இந்த அழுத்தங்களினாலும், ஏற்கனவே சரிந்து வரும் தனது செல்வாக்கு மேலும் சரியாமல் தக்க வைத்துக் கொள்ளவும், இது குறித்துத் தான் மிகவும் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டியும் இது தனது கட்டுக்குள் தான் இருக்கிறது என்று அறுதியிட்டுக் கூறவேண்டியும் ஒபாமா பாதிப்படைந்த பகுதிகளுக்குச் சில முறைகள் பயணம் சென்று நேரடியாகப் பார்வையிட்டது மட்டுமின்றி, இதனால் பாதிப்படைந்த மக்களுக்கு பீ.பி நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், எத்தனை காலம் ஆனாலும் இப்பிரச்சினையை எதிர்த்துப் போராடுவோம் என்றும் கூறுகிறார்.</p>
<p>பீ.பி நிறுவனத்தைக் குறை கூறுவதா, அவர்கள் மீதே முழுப் பழியும் சுமத்துவதா, அல்லது அவர்களோடு இணைந்து இச்சிக்கலைச் சரி செய்ய முயல்வதா என்னும் ஆரம்பக் குழப்பங்களைத் தாண்டி, அவர்களிடம் இருபது பில்லியன் டாலர்களுக்கான ஒரு வைப்பு நிதியை ஒதுக்கும்படி செய்திருக்கிறார். இதனால் பாதிப்படைந்த மக்கள் சிறிது மகிழ்ச்சியுற்றாலும், தொழில் நிறுவனங்கள் இத்தகைய சூழ்நிலையில் தங்கள் முதலீட்டைப் பணயம் வைக்கத் தயங்குவர் என்றும் சிலரால் கருதப்படுகிறது. ஏற்கனவே வீழ்ச்சியுற்றிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இது நல்லதில்லை எனவும் சிலர் எண்ணுகின்றனர்.</p>
<p>கிழக்குக் கரையோரம் மேலும் பல எண்ணெய்க் கிணறுகளுக்கு ஒப்புதல் அளிக்கலாமா என்று இருந்த விவாதங்கள் இப்போது கிடப்பில் போடப் பட்டுள்ளன. ஆழ்கடல் கிணறுகள் துளைத்தலுக்கு சில காலம் இடைக்காலத் தடை விதிக்கப் பட்டிருந்து இப்போது அண்மையில் தான் அது நீக்கப்ப்பட்டது. கலிபோர்னியா, புளோரிடா மாநில ஆளுனர்களும் தத்தம் மாநிலங்களின் கரைகளை ஒட்டி ஆழ்கடல் துளைத்தக்குத் தாம் தெரிவித்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகு இக்கும் தீவாய்ப்பும் (risk) கொண்ட ஒரு செயலில் ஏன் இறங்கவேண்டும் என்று தமது முடிவை மாற்றிக் கொண்டதாகக் கலிபோர்னிய ஆளுனரான ஆர்னால்டு சுவாசநகர் கூறுகிறார். (இவர் பல ஆங்கிலப் படங்களில் நடித்துப் பெயர் பெற்ற அதே ஆர்னால்டு தான்).</p>
<p><img alt="" src="http://i1.wp.com/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/Obama-hayward.jpg/800px-Obama-hayward.jpg?resize=400%2C266" data-recalc-dims="1" /></p>
<p>படம்: பீ.பி நிறுவனத்தாருடன் பேச்சு வார்த்தையில் ஒபாமாவும் பிற அரசு அதிகாரிகளும்.</p>
<p>கசிந்து கொண்டிருக்கும் எண்ணெய்யை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதையும், ஏற்கனவே கசிந்து கடலில் கலந்துவிட்டதை எப்படிச் சரிசெய்வது என்பது பற்றியும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இதற்கு முன்னர் இது போன்ற சூழல்களில் இது போன்ற நடவடிக்கைகளில் அனுபவம் இல்லாத மனித இனத்திற்கு இது பெரும் சவாலான ஒன்றாகவே அமைந்தது. தற்காலிக முறைகள் எதிலும் முழுமையாகக் கசிவை நிறுத்த முடியாததால், மாற்றுத் துளைகள் இரண்டும் துளைக்கப்பட்டன. அவை வெற்றிகரமாக முதல் துளையினை அடைந்தால், அவற்றுள் சிமெண்ட் ஊற்றிக் கிணற்றை அடைத்து விடலாம் என்பது எண்ணம்.</p>
<p>இதற்கிடையிலே மேற்பரப்பில் ஏற்கனவே கசிந்த எண்ணெய்யைச் சுத்தம் செய்வதிலும், பாதிக்கப்பட்ட உயிரினங்களைக் காக்க முயல்வதுமாகச் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட இக்கால கட்டத்தில் இக்கசிவினால் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன என்று பார்த்து வருகின்றனர். பீ.பியும், டிரான்சோசனும், ஏலிபர்ட்டனும் தங்களுக்குள் வழக்கு பழி என்று மாற்றிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடலுக்குள் கசிந்த எண்ணெய் பயந்தபடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் மாயமாகிப் போனதற்கு எண்ணெய் உண்ணும் நுண்ணுயிரிகள் காரணமா என்றும் ஆய்ந்து வருகின்றனர். </p>
<p>காரியம் கெட்ட பிறகு சரிசெய்வதை விடச் சரியான செய்கைகளின் மூலம் இவ்விபத்தைத் தவிர்த்திருப்பதே சிறப்பானதாக இருக்கும். ஒட்டுமொத்தமாகத் துளைத்தலையே தடைசெய்வது ஒருவகையில் தீர்வாக இருந்தாலும், அதை உடனடியாகச் செய்வது வேறு சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தரும். இயலாத ஒன்று என்றே கூறலாம். பாறைநெய்யும் இயற்கை எரிவளியும் இன்னும் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான மூலங்கள்.&#160; வேறு மாற்று எரிபொருட்கள் குறைந்த செலவில் கண்டுபிடிக்கும் வரை இவை இன்னும் தேவையாகவே இருக்கும். இங்கு ஒரு கிணற்றில் விபத்து என்றாலும், உலகம் முழுதும் 14000 ஆழ்கடல் கிணறுகள் இருப்பதும், செயலாற்றுவதும் மனிதப் பொறியியல் திறமைகளுக்கு ஒரு சான்று என்பதை மறுக்க முடியாது.</p>
<p>எப்படி இருந்தாலும், உலகமும், மக்களும் தங்கள் ஆற்றல் தேவைகளைக் குறைத்துக் கொள்வது இன்றியமையாத ஒன்று. அதிக தேவை இருப்பதாலேயே இது போன்ற தீவாய்ப்புக்கள் நிறைந்த செயலில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட வேண்டியிருக்கின்றன என்பதால், தேவையைக் குறைப்பது முக்கியமானது. இந்த நிறுவனங்களும் தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து குறைந்த கால ஆதாயத்திற்காகப் பெரும் சேதாரத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். பீ.பி போன்ற நிறுவனங்கள் பொறுப்பான செயல்கள் மூலம் இத்தகைய விபத்துக்கள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.</p>
<p>அரசும், அதன் துறைகளும் கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது போல் இல்லாமல், இந்நிறுவனங்கள் போதுமான பாதுகாப்புச் செய்கைகளை வைத்திருக்கின்றனவா, என்பதைக் கண்காணித்து வர வேண்டும்.&#160; தமது செயல்பாட்டையும் சட்ட திட்டங்களையும் நீண்ட கால நன்மை கருதி வகுக்க வேண்டும்.</p>
<p>* * * *</p>
<p><u>உசாத்துணை:</u></p>
<p>1. <a href="http://www.economist.com/node/16160853?story_id=16160853">http://www.economist.com/node/16160853?story_id=16160853</a></p>
<p>2. <a href="http://www.slate.com/id/2256920?wpisrc=xs_wp_0001">http://www.slate.com/id/2256920?wpisrc=xs_wp_0001</a></p>
<p>3. Ultra-deep&#8230;Shell <a href="http://www.shell.com/home/content/media/news_and_library/press_releases/2009/parque_das_conchas_09122009.html">http://www.shell.com/home/content/media/news_and_library/press_releases/2009/parque_das_conchas_09122009.html</a></p>
<p>4. Deepwater conditions&#160; <a href="http://www.shell.com/home/content/innovation/news/shell_world_stories/2007/deepwater/">http://www.shell.com/home/content/innovation/news/shell_world_stories/2007/deepwater/</a></p>
<p>5. <a href="http://www.nytimes.com/2010/12/26/us/26spill.html?_r=1&amp;nl=todaysheadlines&amp;emc=a2">http://www.nytimes.com/2010/12/26/us/26spill.html?_r=1&amp;nl=todaysheadlines&amp;emc=a2</a></p>
<p> <a name="comments"></a>
<p><strong><font face="Georgia">&#160;</font></strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/378/feed</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
		</item>
		<item>
		<title>மனதில் உறுதி வேண்டும்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/373</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/373#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 04:21:46 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
				<category><![CDATA[இணையம்]]></category>
		<category><![CDATA[கண்மணிகள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[தமிழ்மணம்]]></category>
		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>
		<category><![CDATA[நன்றி]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/373</guid>
		<description><![CDATA[2012இன் தை முதல் வாரத்தின் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், அன்புடன் வரவேற்று, படித்து, பின்னூட்டமிட்டும், உரையாடலில் கலந்து கொண்டும், உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. இவ்வாரம் எழுத எண்ணிய இன்னும் பல இருக்கின்றன. அவற்றை வரும் நாட்களில் தொடர்வேன் என்னும் நம்பிக்கை உண்டு. அன்றாட வாழ்வின் இழுபறிகளுக்குள் ஆர்வப் பணிகளுக்கும் ஆர்வலப் பணிகளுக்கும் நேரச்சிக்கல்கள் எல்லோருக்கும் இருப்பது தான். ஒன்றைக் கவனிக்க மற்றொன்று கவனமற்றுப் போகும் என்றாலும் இயன்றவரை இவற்றில் ஈடுபட்டிருக்க முயலப் போகிறேன். வலைப்பதிவு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>2012இன் தை முதல் வாரத்தின் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், அன்புடன் வரவேற்று, படித்து, பின்னூட்டமிட்டும், உரையாடலில் கலந்து கொண்டும், உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. இவ்வாரம் எழுத எண்ணிய இன்னும் பல இருக்கின்றன. அவற்றை வரும் நாட்களில் தொடர்வேன் என்னும் நம்பிக்கை உண்டு. </p>
<p>அன்றாட வாழ்வின் இழுபறிகளுக்குள் ஆர்வப் பணிகளுக்கும் ஆர்வலப் பணிகளுக்கும் நேரச்சிக்கல்கள் எல்லோருக்கும் இருப்பது தான். ஒன்றைக் கவனிக்க மற்றொன்று கவனமற்றுப் போகும் என்றாலும் இயன்றவரை இவற்றில் ஈடுபட்டிருக்க முயலப் போகிறேன். </p>
<p>வலைப்பதிவு மற்றும் இதர இணையத் தளங்களுக்கும் இவனைத் தொலைத்து விடுவோமோ என்னும் கவலைக்கும், நன்றாகவும் நிறையவும் எழுத ஊக்குவிக்க வேண்டுமென்னும் ஆர்வத்திற்கும் இடையில் ஊசலாடும் மனைவியின் நிலை பற்றியும் அறிவேன். வளர்ந்து வரும் மக்களின் நல்வாழ்விற்கும் இனிய அனுபவங்களுக்கும் அவர்களோடு கழியும் நேரங்களும் தவிர்க்கக் கூடாதவை. </p>
<p>நாம் வாழ்ந்த காலத்தின் நினைவுகளும் எண்ணங்களும் கூட நமது காலத்திலேயே வெறும் புகையாய்க் கலைந்து போகும் முன்னே அவற்றுள் சிலவற்றையேனும் எழுத்தில் ஆவணப் படுத்தி வைக்க முடியுமா என்னும் ஆதங்கமும் ஒருபுறம். என்னுடைய துறைசார் விவரங்களை எளிமையாகவும் சுவையாகவும் (அல்லது இவ்விரண்டும் இல்லாவிட்டாலும் சரி) கொஞ்சம் எழுத முயலலாம் என்றும் எண்ணம்.</p>
<p>இவற்றினிடையே தமிழ்மணம், தமிழ் விக்கிப்பீடியா, வள்ளுவன் தமிழ் மையம், போன்ற தன்னார்வப் பணிகளுக்கு என்னுடைய நேரத்தில் சிறு பங்கை அளித்து வருகிறேன். அவற்றையும் திறனோடு தொடர விருப்பம் உண்டு. (இதில் அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகமும் சேர்ந்து கொள்ள வாய்ப்புண்டு). தமிழா கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவிலும் பணியாற்ற விருப்புடன் சேர்ந்து இன்னும் மறைவாய் இருக்கிறேன் <img src='http://i1.wp.com/blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' data-recalc-dims="1" /> .&#160; இவையன்றி மேலும் வரும் சில வேண்டுகோள்களை மறுத்து வருகிறேன். </p>
<p>இவை அனைத்தும் ஒரு சமன்பட்ட ஈடுபாட்டில் இயன்றவரை செய்ய முடியுமா என்று இவ்வாண்டும் தொடர்ந்து முயல்வேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பொங்கல் வாழ்த்துகளும் புதிய ஆரம்பங்களுக்கான வாழ்த்துகளும். </p>
<p>புதிய ஆரம்பங்கள் புத்தாண்டின் போது மட்டும் தான் ஆரம்பிக்க வேண்டுமென்பதில்லை. </p>
<p>&#160;</p>
<blockquote><p>நினைவு நல்லது வேண்டும்</p>
<p>நெருங்கின பொருள் கைப்படவேண்டும். </p>
<p>ஓம் ஓம் ஓம்!</p>
</blockquote>
<p> <iframe height="274" src="http://www.youtube.com/embed/8LZWb23utMg?rel=0" frameborder="0" width="480" allowfullscreen="allowfullscreen"></iframe>
<p>குறிப்பு: <a href="http://www.valluvantamil.org/">வள்ளுவன் தமிழ் மையம்</a> தமிழ்ப்பள்ளியின் சார்பாகச் சென்ற வாரம்&#160; நடந்த தமிழர் திருநாள் விழாவில், <a href="http://salangaiarts.com/">சலங்கை ஆர்ட்சு</a> அகிலா சுப்ரமணியம் அவர்களின் வழிப்படுத்தலில் என் மகள்கள் இருவரும் பங்கு கொண்ட குழு நடனம். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/373/feed</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>குத்துப்புள்ளி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/372</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/372#comments</comments>
		<pubDate>Sun, 22 Jan 2012 18:11:05 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
				<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[Bullet]]></category>
		<category><![CDATA[List]]></category>
		<category><![CDATA[ToDo]]></category>
		<category><![CDATA[தமிழ்மணம்]]></category>
		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/372</guid>
		<description><![CDATA[செய்யவேண்டிய செயல்கள் எனப் பட்டியல் போடும் பழக்கம் ஏதோ ஒரு வகையில் எனக்குப் பல காலமாக, பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அவ்வேலைகள் திறம்படச் செய்யப்படுகின்றனவா என்பது வேறு விசயம். மேலும் அது பற்றிப் பேசும் முன் ஒரு சிறு கிளைக்கதைக்குள் நுழைந்து வருவோம். ஈரோட்டில் முக்கியமான ஒரு சந்திப்பான பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து கச்சேரி வீதி வழியாகப் போனால், அருகில் காரை பெயர்ந்த சுற்றுச்சுவரோடு தாசில்தார்வட்டாட்சியர் அலுவலகம் வரும். அதன் எதிரே வரிசையாகச் சில நகலெடுக்கும் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>செய்யவேண்டிய செயல்கள் எனப் பட்டியல் போடும் பழக்கம் ஏதோ ஒரு வகையில் எனக்குப் பல காலமாக, பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அவ்வேலைகள் திறம்படச் செய்யப்படுகின்றனவா என்பது வேறு விசயம். மேலும் அது பற்றிப் பேசும் முன் ஒரு சிறு கிளைக்கதைக்குள் நுழைந்து வருவோம். </p>
<p>ஈரோட்டில் முக்கியமான ஒரு சந்திப்பான பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து கச்சேரி வீதி வழியாகப் போனால், அருகில் காரை பெயர்ந்த சுற்றுச்சுவரோடு <del datetime="2012-01-23T01:24:51+00:00">தாசில்தார்</del>வட்டாட்சியர் அலுவலகம் வரும். அதன் எதிரே வரிசையாகச் சில நகலெடுக்கும் கடைகள் (xerox) இருக்கும். நகலாக்கும் கடைகள் என்றாலும் அவை இன்னும் பல சேவைகளை அளித்து வரும். அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டிய படிவங்கள் விற்பனைக்குக் கிடைக்கும். மற்றும் ஆவணங்கள், கடன்பத்திரங்கள், அவற்றிற்கு ஒட்டவேண்டிய வருவாய்த்தலைகள் (revenue stamps) முதலியனவும் கிடைக்கும். அவற்றை எழுதிக் கொடுப்போர், ஆலோசனைகள் சொல்வோர் என்று பலரும் அங்கு இருப்பர். வரிசையாகப் பல தட்டச்சும் தாவணிப் பெண்கள் அக்காலத் தட்டச்சிகளில் தட்டச்சிக் கொண்டு சில வினாடிகளுக்கு ஒருமுறை அதன் நெம்புகோலை (lever) ஒரு முனையில் இருந்து மறு முனைக்குத் தள்ளிக் கொண்டிருப்பர். </p>
<p>அக்கடைகளில் தட்டச்சவும் பிற ஆவணங்கள் எழுதவும் தேவையான தாள்களை மொத்தமாகப் பெரிய அளவில் வாங்கி, சரியான அளவில் (A4 முதலியன) தேவைப்படும் அளவில் வெட்டி வைத்துக் கொள்வர். வெட்டியது போக எஞ்சி இருக்கும் துண்டுத் தாள்கள் நிறையக் கிடைக்கும். சுமார் இரண்டு அல்லது மூன்று அங்குல அகலமும், எட்டு/ஒன்பது அங்குல நீளமும் உள்ள அத்துண்டுகளைக் குத்துப்புள்ளித் தாள்கள் என்பர். ஒரு குடும்ப நண்பர் வைத்திருந்த கடையில் சொல்லி வைத்திருந்தால் அந்தத் துண்டுத் தாள்களை எறிந்துவிடாமல் எடுத்து வைத்துத் தருவார்கள். அதை எனது வீட்டிலும், தாத்தா/மாமாவின் கடையிலும், ஏதேனும் பட்டியல் போட, குறிப்புகள் எழுத, சிறு கணக்குகள் எழுத என்று பயன்படுத்துவார்கள். </p>
<p>&quot;நடராசு, அப்புறமா நீங்க இங்க வர்றப்பக் கொஞ்சம் குத்துப் புள்ளித் தாள் இருந்தா எடுத்துட்டு வாங்க&quot;</p>
<p>&quot;சரிங்கையா&quot;</p>
<p><span id="more-372"></span></p>
<p>பல காலத்துக்கு அதை ஏன் &#8216;குத்துப் புள்ளித் தாள்&#8217; என்று சொன்னார்கள் எனத் தெரியவே இல்லை. இது போன்ற ஒரு பாவனையை நான் வேறெங்கும் கவனித்தது கிடையாது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தான், நானாக அதன் பொருளை ஒருவாறு விளங்கிக் கொண்டேன். அதில் இருந்து ஒரு அழகான தமிழ்ச்சொல்லும் கிடைக்கும். </p>
<p>ஆங்கிலத்தில் &#8216;To Do&#8217; எனப்படும் செய்யவேண்டியன பட்டியல் போடும்போதோ, அல்லது ஒரு ஆவணக்கோப்பில் ஏதேனும் பட்டியல் போட வேண்டுமென்றாலுமோ, பொதுவாக இரண்டு முறைகள் உண்டு. </p>
<ol>
<li>எண்களோ எழுத்துக்களோ முன்னிட்டு ஒழுங்கு முறையில் எழுதுவது. </li>
<li>எண்களேதும் இடாமல் Bulleted List என்று எழுதுவது.
<ul>
<li>அந்த &#8216;புல்லட்&#8217;களுக்குப் பல வடிவம் இருக்கலாம் </li>
<li>வட்டக்குறி, அம்புக்குறி, சதுரக்குறி, சிரிப்பான் எனப் பல. </li>
</ul>
</li>
</ol>
<p>கணினியிலன்றிக் கையில் வெற்றுத் தாள்களில் எழுதும்போது இயல்பாக வட்டக்குறி இட்டே பட்டியல் இடுவது வழக்கம். இந்த வட்டக்குறிக்கே குத்துப்புள்ளி எனப் பெயர் என்பது எனது முடிபு.&#160; இங்கே புல்லட் என்பதைக் குண்டு, ரவை, தோட்டா என்றா சொல்ல முடியும்? <img src='http://i1.wp.com/blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' data-recalc-dims="1" />  ஆக, புல்லட் என்பதற்குக் குத்துப்புள்ளி என்று அனைவரும் பயன்படுத்தலாம் என்று இதனால் அறிவிக்கிறேன்!</p>
<p>கூகுளில் கூடத் தேடிப் பார்த்தேன். மெய்யெழுத்துக்கு வைக்கும் புள்ளியைத் தான் சிலர் குத்துப்புள்ளி என்று வழங்கி வந்துள்ளனர். ஆனால், அதனை வெறும் புள்ளி அல்லது மெய்ப்புள்ளி என்று சொல்வதே போதுமானதும் ஏற்கனவே வழங்கி வருவதுமாகும். அதனால், <strong>குத்துப்புள்ளி என்றால் bullet (in a list) என்பதே</strong>. இந்தப் பயன்பாட்டை, பாவனையை வேறு யாரும் அறிந்திருந்தால் அது பற்றி அறியத் தந்து வலுச்சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். (எத்தனை பொற்காசுகள் இக்கண்டுபிடிப்புக்குக் கிடைத்தாலும் சமமாகப் பங்கு போட்டுக் கொள்ளலாம் <img src='http://i1.wp.com/blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' data-recalc-dims="1" />  ). தவறெனிலும் சுட்டிக் காட்டுக. (ஆனால், அதற்குப் பரிசு ஒன்றும் கிடையாது). </p>
<p>குத்துப்புள்ளியிட்டுச் செய்ய வேண்டிய உருப்படிகளை (items) எழுதி வைத்தால் மட்டும் ஆயிற்றா? அதனைச் செய்ய வேண்டுமே. இல்லையெனில் பட்டியல் வளர்ந்து பெற்ற பிள்ளைகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது மட்டும் தான் மிஞ்சும். </p>
<p>நிற்க. நான் அப்படி ஒன்றும் மோசமானவனில்லை என்று சுயக்காப்பு வாதத்தையும் இங்கே வைக்க வேண்டும். அவ்வாறான ஒரு தோற்றப்பிழைக்கான காரண காரியத்தையும் அடுக்க வேண்டும். (மூச்! இங்கே நீங்கள் எதுவும் சொல்ல அனுமதியில்லை:-) ). </p>
<p>முதலில், செய்ய வேண்டியன பட்டியலில், மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய வேலைகள் இருப்பின் அதை மீண்டும் மீண்டும் தாளில் எழுதி அடிக்க வேண்டும். ஒரு தாளில் பாதி அடித்தும் பாதி இன்னும் உயிரோடும் இருக்கும் போது ஒரு ஒழுங்கு நேர்த்தி கருதி, வேறோர் தாளெடுத்து இன்னும் மிச்சம் இருப்பதை மட்டும் எழுதி வைக்க வேண்டும். அல்லது சட்டைப் பையில் வைத்திருந்த காகிதம் வெய்யல், மழை, வியர்வை, போன்று வேறு பல காரணிகளால் பாழ்பட்டுப் போகும் போது, மீண்டும் புதிய தாள், இற்றைப்படுத்திய பட்டியல் என்று மாற்ற வேண்டும். </p>
<p>இந்தக் காரணங்களால், தாளில் போடப்படும் பட்டியலுக்குச் சில குறைபாடுகள் இருக்கின்றன. கணினிகளும், கையடக்கக் கருவிகளும் வந்துவிட்ட இக்காலத்தில், மின்பட்டியல்கள் இவ்வேலையை மிகவும் எளிதாக்குகின்றன. ஒரு முறை செய்யவேண்டிய வேலை, காலத்தில் மீண்டும் மீண்டும் செய்யவேண்டியது என்று அமைத்து விடலாம். புதிய இடுகையை, இவ்வேலை முடித்தவுடன் உண்டாக்கு என்றோ, குறிப்பிட்ட தேதியில் மீண்டும் உண்டாக்கு என்றோ தொடக்கத்திலேயே அமைத்துவிடலாம். </p>
<p><a href="http://i1.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image0011.png"><img style="display: inline" title="clip_image001" alt="clip_image001" align="left" src="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image001-thumb1.png?resize=232%2C240" data-recalc-dims="1" /></a>&#160; இப்படி ஒரு பட்டியல் போடவேண்டும் என்றே கேசியோவின் கைக்கருவி ஒன்றை தொண்ணூறுகளில் வாங்கி வைத்திருந்தேன். ஓரிரண்டு வருடம் நல்ல உழைப்பைத் தந்த அக்கருவி, பொட்டுபொசுக்கென்று ஒரு நாள் உயிரை விட்டது. ஊழ்வினையின் காரணமாய் அதில் இருந்த தரவுகள் வேறு எங்கும் சேமிக்கப்படவில்லை. கணினிக்கு இணைக்கும் வழிவகைகள் அன்று அதற்குக் கிடையாது. </p>
<p>ஏதோ, இக்கருவிக்கும் முன்னரான தாள்களில் அமைந்த திட்டத் தரவுகள், முகவரிகள் போன்றவற்றை இன்னும் வைத்திருந்ததால் (நாம் தான் <a href="http://blog.selvaraj.us/archives/338">பழையதை அவ்வளவு எளிதில் தூக்கி வீசிவிட</a> மாட்டோமே <img src='http://i1.wp.com/blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' data-recalc-dims="1" />  ), மீண்டும் பொறுமையாக என்னால் அவற்றை மீட்டெடுக்க முடிந்தது. </p>
<p><a href="http://i1.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image002.png"><img style="display: inline" title="clip_image002" alt="clip_image002" src="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image002-thumb.png?resize=169%2C240" data-recalc-dims="1" /></a>&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160;&#160; <a href="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image003.png"><img style="display: inline" title="clip_image003" alt="clip_image003" src="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image003-thumb.png?resize=175%2C240" data-recalc-dims="1" /></a></p>
<p>அதன் பிறகு, 1995/96 காலகட்டத்தில், பால்ம் பைலட் என்னும் செங்கல் எடையில் ஒரு கருவி சந்தைக்கு வந்தது. கணினிக்கு இணைப்புக் கொடுத்துத் தரவுகளைக் கைக்கருவியிலோ கணினியிலோ ஏற்றிக் கொள்ளலாம்; ஆக, ஒரு பிரதி சேமிப்பில் இருக்கும் போன்ற நற்காரணங்களால், அதிலும் ஒன்றை வாங்கி வைத்தேன். அதுவும் ஓரிரண்டு வருடங்கள் உழைத்துப் பின் உடைந்து போக, பால்ம்-2 (அ) 3, பிறகு பால்ம் Z22 என்று பலவும் வாங்கினேன். முகவரிகளைச் சேர்த்து வைத்துக் கொள்ள உதவிய அளவிற்குச் செய்யவேண்டியன பட்டியலுக்கு இவை பெரிதாய் உதவவில்லை. இதற்கான காரணம் கருவியன்று, கருத்தா தானே என்பது தெளிவாய் இருந்திருக்க வேண்டும். </p>
<p>கையிலே ஒரு தாளிலே குத்துப்புள்ளியிட்டு எழுதி, அதனைச் செய்து முடித்தபின் பேனாவைக் கொண்டு அழுத்தம் திருத்தமாக அதனைக் கோடிட்டு அடித்து நீக்குவதில் இருக்கும் அந்த நிறைவு, மின்கருவிகளில் தெரியும் பொட்டியில் ஒரு &#8216;டிக்&#8217; பொட்டு வைத்து அது தானாக அவ்விடுகையை நீக்குவதிலோ, அடித்துக் காண்பிப்பதிலோ இருக்கவில்லை. அதனால் மீண்டும் தாள்/பேனா/கை முறைக்கே மாறிக்கொள்ளலாம் என்று எண்ணிய காலகட்டத்தில் <a href="https://www.stephencovey.com/">பிராங்க்ளின் கவி</a> என்னும் மொட்டைதலையர் ஒரு புதிய முறையைக் கொண்டு வந்து புகழ் பெற்றும் வணிகம் செய்தும் பரப்புரை செய்து கொண்டிருந்தார். </p>
<p>சரி, அதையும் செய்து பார்ப்போமே என்று ஓரிரண்டு வருடங்கள் இறங்கிப் பார்த்தேன். சுருக்கமாகச் சொன்னால், அவரது முறையில் வாழ்க்கையில் முக்கியமானது என்ன என்று நம்மைக் கேட்டுக் கொன்டு அதனை ஒரு முதன்மைப் பட்டியலில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு, அதில் இருந்து இந்த மாதம் என்ன செய்து முடிக்கலாம் என்று மாதப்பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு வாரம் ஒரு முறை அதனைப் பரிசீலித்து, அதிலிருந்து செய்யவேண்டியவை பற்றிய பட்டியல் எடுத்து எவற்றை என்று செய்வது என்று அந்த வாரம் முழுவதுக்கும் அந்தந்த நாளுக்குரிய நாட்காட்டிப் பக்கத்தில் எழுதிக் கொள்ள வேண்டும். அவற்றையும் முக்கியமானது, செய்தால் நல்லது, செய்யாவிட்டாலும் பரவாயில்லை (:-) ) போன்ற வகைப்படுத்திக் குறிப்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் செய்ய முடியவில்லை என்றால், அவற்றை எடுத்து மறுபடி வேறு எப்போது செய்யவேண்டும் என்று எண்ணி அந்த நாளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். </p>
<p>ஒரு எளிமையான சிறு பட்டியலையே வைத்துக் கொண்டு கட்டி அழ முடியாதவன், இத்தனை வேலை செய்திருப்பேன் என்றா நினைக்கிறீர்கள்? நானும் எழுதிய ஒன்றையே திரும்பத் திரும்ப அடுத்தடுத்த நாட்களில் எழுதியது தான் மிஞ்சியது. இதை எப்படி இரண்டு வருடங்கள் செய்தாய் என்று கேட்காதீர்கள். நாம் தான் எதையும் எளிதாய் விட்டுவிடும் ஆள் அல்லவே. </p>
<p>இணையம் பரவலான காலத்தில் இணைய தளங்களிலேயே இப்படிப் பட்டியலிட்டுக் கொள்ளும் வசதி வந்து குவியத் தொடங்கிவிட்டது. நானும், அதில் ஒவ்வொன்றையும் போய்ப் பார்த்து முயன்று கொண்டிருக்கத் தொடங்கினேன். அவர்களும் வேண்டிய வேண்டாத வசதிகளை எல்லாம் தொடர்ந்து தரவே முயன்று கொண்டிருந்தார்கள். அதில் கடந்த சில ஆண்டுகளில் பரிசோதித்த சில:</p>
<ul>
<li><a href="http://www.rememberthemilk.com/">RememberTheMilk.com</a> </li>
<li><a href="http://gubb.net/">Gubb.net</a> </li>
<li><a href="http://mail.google.com/mail/help/tasks/">Google Tasks</a> </li>
</ul>
<p><a href="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image004.png"><img style="display: inline" title="clip_image004" alt="clip_image004" src="http://i1.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image004-thumb.png?resize=136%2C240" data-recalc-dims="1" /></a></p>
<p>இதற்குள் ஆப்பிள் வெளியிட்ட ஐபோனைக் கண்டு மயங்கி பால்ம்-ஐ விட்டு அதற்குத் தாவினேன். முகவரிகளைச் சேர்த்து வைக்கவும், காலண்டர் எனப்படும் நாட்காட்டி/நினைவுபடுத்தியினைப் பயன்படுத்தவும், செய்யவேண்டிய பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளவும் வேண்டும் என்பதெல்லாம் அதனை வாங்க நியாயப்படுத்திய காரணங்கள். <a href="http://toodledo.com">ToodleDo.com</a> என்னும் வலைத்தளத்தினையும் அதன் இணையான ஐபோன் செயலியையும் வைத்திருக்கிறேன் (இங்கே பயன்படுத்துகிறேன் என்று சொல்லாமல் வைத்திருக்கிறேன் என்று சொல்வது மிக நுட்பமான ஒன்று என்பதைக் கவனிக்க வேண்டும் <img src='http://i1.wp.com/blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' data-recalc-dims="1" />  ). </p>
<p><a href="http://i1.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image005.png"><img style="display: inline" title="clip_image005" alt="clip_image005" src="http://i1.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image005-thumb.png?resize=167%2C240" data-recalc-dims="1" /></a></p>
<p>அண்மையில் டேவிட் ஆலன் என்பார் ஒருவர் &#8216;செய்வன செய்து முடித்தல்&#8217; (Getting Things Done) என்று அவரும் ஒரு திட்டத்தையும் அதற்கான புத்தகங்கள், அறிவுரைக் கூட்டங்கள் என்று தானொரு வணிகம் செய்து வருகிறார். எனது அலுவலகத்தில் ஒரு குழுவில் அதுபற்றிக் கேட்கப் போக, அங்கு அவர் எழுதிய புத்தகம் கொடுத்தார்கள். அவர் கூறும் முறை கேட்க நன்றாகத் தான் இருந்தாலும், அதனைச் செயல்படுத்த இறங்கலாமா என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. எளிமையாக இல்லாத எதுவும் நிலைக்காது. அதனால், அவர் கூறுவதில் இருக்கும் சில நல்லவற்றை, பிடித்தவற்றை எடுத்து நமது சொந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று மட்டும் பார்த்து வருகிறேன். ஒரு வகையில், செய்கிறோமோ இல்லையோ, திட்டங்களைப் பட்டியலில் போட்டு வைத்துக் கொண்டாலே, அவற்றை நினைவு வைத்திருக்கிறோமா, மறந்துவிட்டோமா என்பன போன்ற மன அழுத்தங்களைக் குறைத்துக் கொள்ளவேனும் குறைந்தபட்சப் பயனை இப்பட்டியல்கள் தருகின்றன என்பேன். </p>
<p><a href="http://i1.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image006.png"><img style="display: inline" title="clip_image006" alt="clip_image006" src="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image006-thumb.png?resize=160%2C237" data-recalc-dims="1" /></a>&#160;&#160;&#160;&#160;&#160; <a href="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image007.png"><img style="display: inline" title="clip_image007" alt="clip_image007" src="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image007-thumb.png?resize=200%2C240" data-recalc-dims="1" /></a></p>
<p>இப்போது குத்துப்புள்ளித்தாள், ஐபோன், டூடுள்டூ போன்ற பலவற்றையும் கலந்து கட்டி ஆடிவருகிறேன். இவையெல்லாம் சொந்த வேலைகளுக்கு. அலுவலக வேலைகளுக்குத் தனியாக மைக்ரோசாவ்ட் அவுட்லுக், சேர்ப்பாயிண்ட்டு, எக்சல் பட்டியல் என்று அதன் கதை தனியாக நீளும். </p>
<p>இவ்வாறாகப் பட்டியல் போடும் முறைகளையே ஒரு பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளும் அளவிற்குத் திறம்படச் செய்து வரும்போது, என்னையும் என் பட்டியல்களையும் பார்த்துக் கிண்டல் செய்வது நியாயமா என்று நீங்கள் தான் கூறவேண்டும். <img src='http://i1.wp.com/blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' data-recalc-dims="1" /> </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/372/feed</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>புதியன புகுதலும்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/357</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/357#comments</comments>
		<pubDate>Sat, 21 Jan 2012 16:47:47 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
				<category><![CDATA[கண்மணிகள்]]></category>
		<category><![CDATA[பயணங்கள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[SkyVenture]]></category>
		<category><![CDATA[தமிழ்மணம்]]></category>
		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/357</guid>
		<description><![CDATA[புவியீர்ப்பு விசையின்றி மிதக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தன் விருப்பமொன்றை முன்பொரு நாள் வெளிப்படுத்தினாள் நிவேதிதா. &#34;It will be so cool! &#34; பள்ளியில் ஏதேனும் விண்வெளி வீரர் விண்கலத்தினுள் மிதக்கும் அசைபடங்கள் காட்டப் பட்டிருக்கலாம். இல்லை அவளாகவே எங்காவது படித்திருக்கலாம். அப்போலா-13 படத்தை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்த அன்று கூடக் குப்புறப் படுத்துத் தூங்கினார்களே இருவரும்? ஒருவேளை வான்வெளியில், விண்கலத்தினுள் ஆள்களும் பொருள்களும் மிதக்கும் அக்காட்சி வரும்போது விழித்துத் தான் இருந்தார்களோ? &#34;அந்த [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>புவியீர்ப்பு விசையின்றி மிதக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தன் விருப்பமொன்றை முன்பொரு நாள் வெளிப்படுத்தினாள் நிவேதிதா. &quot;It will be so cool! &quot;</p>
<p>பள்ளியில் ஏதேனும் விண்வெளி வீரர் விண்கலத்தினுள் மிதக்கும் அசைபடங்கள் காட்டப் பட்டிருக்கலாம். இல்லை அவளாகவே எங்காவது படித்திருக்கலாம். அப்போலா-13 படத்தை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்த அன்று கூடக் குப்புறப் படுத்துத் தூங்கினார்களே இருவரும்? ஒருவேளை வான்வெளியில், விண்கலத்தினுள் ஆள்களும் பொருள்களும் மிதக்கும் அக்காட்சி வரும்போது விழித்துத் தான் இருந்தார்களோ?</p>
<p><a href="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image001.png"><img style="background-image: none; border-right-width: 0px; margin: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="clip_image001" border="0" alt="clip_image001" src="http://i1.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image001-thumb.png?resize=229%2C126" data-recalc-dims="1" /></a></p>
<p>&quot;அந்த மாதிரி எடம் அமெரிக்கால எங்கயோ இருக்குடா. போய்க் கொஞ்சம் நேரம் அப்படி ஈர்ப்புச்சக்தி இல்லாம மெதக்க முடியும்னு நினைக்கறேன்&quot;</p>
<p> <span id="more-357"></span> </p>
<p>எப்போதோ ஒரு முறை இயூஸ்டன் நாசாவிற்குச் (NASA, Houston, Texas) சுற்றுப் பயணம் போயிருந்தபோது அது போன்ற இடத்தைப் பார்த்ததாய் மங்கலாய் நினைவு. அப்போது அவள் பிறந்திருக்கவில்லை.</p>
<p>ஈர்ப்பின்றி ஓரிடம் புவியில் எப்படி இருக்க முடியும்? ஈர்ப்பற்ற தன்மைக்கு நெருக்கமாகச் சமன்படுத்திக் கொடுக்கும் சமலாக்கி (simulator) இருந்திருக்கலாம். சரியாக நினைவில்லை. என் சிந்தையைக் கலைத்துச் சத்தம் வந்தது.</p>
<p>&quot;அப்படி ஒரு இடம் இருந்தா அங்க போலாம்ப்பா… எங்களக் கூட்டிட்டுப் போங்க!&quot; </p>
<p>&quot;சரி, சரி. தேடிப் பாக்கறேன். இல்லாட்டி இயூஸ்டன் பக்கத்துல இருக்கற நண்பர்கள் கிட்டக் கேட்டுப் பாக்கறன்&quot;. </p>
<p>இப்படித் தான் பல விசயங்கள் செய்கிறேன், பார்க்கிறேன், என்றும், பிறகு என்றும் தள்ளிப் போட்டுத் தள்ளிப் போட்டு, இதெல்லாம் இப்போது இவர்களுக்கு ஒரே கிண்டலாகப் போய்விட்டது. அவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டியது இருந்தால், சிலசமயம், &quot;மறந்துட்டீங்களா அப்பா?&quot; என்றால், &quot;இல்லடா, என் பட்டியல்ல போட்டு வச்சுருக்கேன்&quot; என்று சொன்னால், &quot;ஓ! போச்சு! அந்தப் பட்டியலுக்குப் போச்சுன்னா அப்புறம் அவ்வளவு தான். மறந்துரலாம்&quot; என்று நக்கல் பேச்சால் என்னை அடிப்பார்கள்! புதியதாகச் செய்ய வேண்டியது ஒன்றைப் பற்றிய பேச்சென்றால், &quot;ஓ! வேண்டாம்ப்பா. தயவு செஞ்சு அந்தப் பட்டியல்ல மட்டும் போட்டறாதீங்க&quot;, என்பர். </p>
<p>இதனாலேயே மறவாமல் அது பற்றித் தேடிப் பார்த்தாலும், நாசாவிலோ வேறெங்குமோ அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒருமுறை அலுவல் காரணமாகக் கனடா சென்று திரும்புகையில் தற்செயலாகக் குளோபு &amp; மெயில் (<a href="http://www.theglobeandmail.com/">The Globe and Mail</a>) என்னும் அந்நாட்டுச் செய்தித்தாளில் காற்றுத் தூம்பு (Wind Tube/Tunnel) பற்றி ஒரு கட்டுரையைப் பார்த்தேன். <a href="http://www.skyventuremontreal.com/en">ஸ்கை-வென்ச்சர்</a> என்று ஓரிடம் கியூபக் மாநிலத்தின் மொன்ட்ரியால் நகரில் இருப்பதாக அறிந்தேன். இணையத்தில் மீண்டும் தேடியதில் அது போல் ஃபுளோரிடாவில் கூட உண்டு என்பது தெரிய வந்தது. </p>
<p>இரண்டுமே நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மிகத் தொலைவில் இருப்பதும் செலவு அதிகமாகும் என்றும் தயங்கினேன். என்னவோ இவள் தான் பொறுப்பேற்றுக் கொள்வது போல், &quot;செலவு பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க. Spare no expense&quot; என்கிறாள். அந்த விளையாட்டுப் பேச்சும் எனக்குப் பிடித்திருந்தது. சென்ற வேனிற்கால விடுப்பில் மொன்ட்ரியாலுக்கு ஒரு பயணத் திட்டம் போட்டோம். </p>
<p><a href="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image0021.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; margin: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="clip_image002" border="0" alt="clip_image002" src="http://i1.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image002-thumb1.jpg?resize=244%2C185" data-recalc-dims="1" /></a></p>
<p>மகள்களை விட நான் தான் உற்சாகமாக இருந்தேனோ தெரியவில்லை. அல்லது அவர்களது உற்சாகம் தான் என் மீது தொற்றிக் கொண்டதோ தெரியவில்லை. கனடாவின் குடிவரவு வாயிலில் &quot;கனடாவில் என்ன பண்ணப் போறீங்க?&quot; என்றதற்குக் கூட நான் &quot;ஸ்கை-வென்ச்சருக்குப் போறோம்&quot; என்று சொன்னேன். என்னவென்று தெரியாமல் சற்று யோசனையாய் விழியுருட்டிப் பார்த்தவரிடம், பக்கத்தில் இருந்த மனைவி தான், &quot;ஊர் சுற்றிப் பார்க்கப் போறோம்&quot; என்று சொல்லி எங்கள் இருவரையுமே காத்தார். தங்கும் விடுதியில் கூட &quot;ஸ்கை-வென்ச்சர்&quot;க்கு வழி சொல்லுங்க என்று கேட்டபோது, &quot;எந்தப் பகுதியிலங்க இருக்கு?&quot; என்று எங்களிடமே திருப்பிக் கேட்டபோதே எனக்குச் சந்தேகம் வந்திருக்க வேண்டும். உலகப்புகழ் வாய்ந்த இடமென்று நான் நினைத்தால், உள்ளூரிலேயே யாருக்கும் தெரியவில்லையே. </p>
<p><a href="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/01/stviateurbagel.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="stviateurbagel" border="0" alt="stviateurbagel" align="left" src="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/01/stviateurbagel-thumb.jpg?resize=204%2C144" data-recalc-dims="1" /></a></p>
<p>ஒருவழியாகக் காலையில் நேரமே கிளம்பிச் சாப்பிடாமல் கூட, மொன்ட்ரியாலின் புகழ்பெற்ற செயிண்ட் வியட்டர் பேகல் (<a href="http://www.stviateurbagel.com/main/">St.Viateur Bagel</a>) வாங்கிக் கொண்டு வழியிலேயே சாப்பிட்டுக்கொண்டு போய்ச் சேர்ந்தால், </p>
<p>&quot;இன்னிக்கு நீங்க தான் முதல்ல வந்திருக்கீங்க. உங்களத் தவிர இன்னும் ஒரு குழு தான் இருக்கு. ஆனா, இன்னொரு அரை மணி கழிச்சு வாங்க, இன்னும் திறக்கவே இல்லை&quot;, என்று எம் ஆர்வத்திற்கு அணைபோட்டுத் தடுத்தார்கள். </p>
<p>மணிக்கு நூறு மைல் வேகத்தில் காற்றூதி (blower) கொண்டு செலுத்தப்படும் காற்றில் பறப்பது போல் மிதப்பது பரவசமாகத் தான் இருந்தது. விண்வீழ் விளையாட்டு வீரர்கள் இது போல் தான் உணர்வராம். மொத்தமாக, பாடங்கேட்டதும், நாலு பேரும் இரண்டு முறை மிதந்ததும், சுமார் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட்டது. </p>
<p>&quot;இந்தச் செலவு செஞ்சு இங்க வந்ததுக்கு, பேசாம, இலண்டன், பரீ (Paris)னு போயிருக்கலாமாட்ட இருக்குதே&quot;, என்றார் மனைவி. </p>
<p>வெளியே வரும்போது பிடித்திருந்ததா என்று கேட்டபோது, &quot;நான் நெனச்ச மாதிரி இல்லப்பா; ஆனா இதுவும் நல்லாத் தான் இருந்துச்சு&quot; என்றாள் மகள். மற்றவளோ தோளை மட்டும் குலுக்கினாள்!</p>
<p>&quot;ஆமாங்க. அவ்வளவு ஒண்ணும் மோசமில்ல&quot; என்றார் மனைவி. எனக்கென்னவோ, &quot;நான் மொதல்லயே சொன்னேன்&quot; என்று தான் கேட்டது <img src='http://i1.wp.com/blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' data-recalc-dims="1" /> </p>
<p>&quot;அடப் போங்கப்பா, புதியன புகுதல் பற்றி எங்காளுங்க அன்னிக்கே சொல்லி இருக்காங்க. புதிய அனுபவங்கள் விலைமதிப்பில்லாதவை&quot;, என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். </p>
<p>உங்களோடும் அதைப் பகிர்ந்து கொள்ள, இங்கே:</p>
<p> <iframe height="315" src="http://www.youtube.com/embed/3Veod5eI9Ns?rel=0" frameborder="0" width="560" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/357/feed</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
		<item>
		<title>கிரந்தம் (இயன்றவரை) தவிர்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/350</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/350#comments</comments>
		<pubDate>Fri, 20 Jan 2012 04:18:57 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[கிரந்தம் தவிர்]]></category>
		<category><![CDATA[தமிழ்மணம்]]></category>
		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/350</guid>
		<description><![CDATA[&#34;ராசாவையன எப்பவும் மனசுல வச்சுக்க&#34;, என்பார் என் ஆத்தா. அம்மாவும் கூட ஊருக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் அப்படித் தான் சொல்லி அனுப்புவார்கள். கண்ணாக வளர்த்த மகன் எங்கோ காணாத இடத்துக்குப் போகிறானே என்று அவரால் முடிந்த அளவுக்குப் என்னைப் பத்திரப்படுத்த எங்கள் சாமியையும் பொட்டலம் கட்டி உடன் அனுப்பி வைப்பார். ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சாமி. பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் முன்பெல்லாம் குலதெய்வம் சாமியின் பெயர் வருமாறு தான் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>&quot;ராசாவையன எப்பவும் மனசுல வச்சுக்க&quot;, என்பார் என் ஆத்தா. அம்மாவும் கூட ஊருக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் அப்படித் தான் சொல்லி அனுப்புவார்கள். கண்ணாக வளர்த்த மகன் எங்கோ காணாத இடத்துக்குப் போகிறானே என்று அவரால் முடிந்த அளவுக்குப் என்னைப் பத்திரப்படுத்த எங்கள் சாமியையும் பொட்டலம் கட்டி உடன் அனுப்பி வைப்பார். <a href="http://blog.selvaraj.us/archives/88">ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சாமி</a>. பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் முன்பெல்லாம் குலதெய்வம் சாமியின் பெயர் வருமாறு தான் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் வைப்பார்கள். முழுதாக அதே பெயர் இல்லை என்றாலும் அதில் ஏதேனும் ஒரு பகுதியோ, எழுத்தோ இருக்கும். அப்படித் தான் என் பெயரிலும் ஒரு ராசு ஒட்டிக் கொண்டிருக்கிறது. </p>
<p><a href="http://i0.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image001.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; margin: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="clip_image001" border="0" alt="clip_image001" src="http://i1.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image001-thumb.jpg?resize=244%2C184" data-recalc-dims="1" /></a></p>
<p>அப்பேர்ப்பட்ட எங்கள் சாமி ராசாவையனைக் கூட இப்போது யாரோ ராஜலிங்கமூர்த்தி என்று பெயரை மாற்றி விட்டார்கள். பத்தாததுக்கு முன்னாலே ஒரு ஶ்ரீயையும் போட்டு வைத்து விட்டார்கள். யார் இப்படி மாற்றியது எனத் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அம்மா, அப்பா, ஊர்ச்சனம் எல்லாம் சொல்லித்தந்த ராசாவையன் தான். </p>
<p> <span id="more-350"></span>
<p>தாத்தாவின் பெயரைப் பேரனுக்கு வைக்கும் பழக்கத்தில் நான் பார்த்திராத என் தாத்தாவின் பெயரான &#8216;ராசா&#8217; வை ஒட்டித் தான் எனக்கும் பெயர் வைத்திருப்பார்கள். ஆனால், முப்பது நாற்பது வருசத்திற்கும் முன்பே நவீனமாகிப் போன நாட்டில் என் பெயரிலும் ராஜ் என்று தான் அந்த ஒட்டு சேர்ந்து கொண்டது. உண்மையில், எனக்குப் பெயரை வைக்கும்போது ராசு என்று சொன்னார்களா ராஜு என்று சொன்னார்களா எனத் தெரியவில்லை. </p>
<p>எனது ஆத்தா, அம்மாயி, தாத்தா எல்லோரும் என்னைச் &#8216;செல்வராசு&#8217; என்று தான் அழைப்பார்கள். தம் காலத்தின் கடைசி நாட்கள் வரைக்கும் &quot;செல்வராசு, எப்பாயா வருவ?&quot; என்று கேட்டுக்கொண்டே இருந்த அந்தக் குரல்களில் ஒரு வாஞ்சை இருக்கும். மிக நெருக்கம் தரும். எனது வீட்டில் மட்டுமல்ல. என் நண்பர்களின் வீட்டிலும் ஆத்தாக்கள் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்கள். பள்ளி விடுப்பு நாட்களில் நண்பன் செந்தில் வீட்டுக்குப் போனால், அவனது ஆத்தாவும் அம்மாயியும் கூட என்னைச் &#8216;செல்வராசு&#8217; என்று தான் சொல்வார்கள். </p>
<p>&quot;டேய் செந்திலு, செல்வராசு வந்துருக்கான். சீக்கிரமா வாடா&quot; என்று சத்தமிட்டு அவனை அழைப்பார்கள். இன்னொருவன் என் வீட்டுக்கு வரும்போது, &quot;டேய் ஷிவா&quot; என்று யாரும் இதுவரையும் அழைத்ததில்லை. &quot;என்ன சங்கரு? அம்மா நல்லாருக்காங்களா?&quot; என்று தான் பேசுவார்கள். </p>
<p>இப்போதும் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் ராசாவையன் கோயிலுக்கு ஒரு முறையேனும் சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். அருகில் தான் சொந்த ஊர், சனம், அப்பா வாழ்ந்து இப்போது குட்டிச் சுவராய் இருக்கும் வீடு எல்லாம் இருக்கும். </p>
<p><a href="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image002.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="clip_image002" border="0" alt="clip_image002" src="http://i2.wp.com/blog.selvaraj.us/images/2012/01/clip-image002-thumb.jpg?resize=387%2C291" data-recalc-dims="1" /></a></p>
<p>அங்கும் நேரில் பார்த்தவுடன் ஊர்ச்சனம், &quot;வாங்காயா, வாப்பா&quot; என்று வரவேற்பார்கள். &quot;செல்வராசு, எப்பாயா வந்த?&quot; என்று விசாரிப்பார்கள்.</p>
<p>இருந்தும் பழகிப் போனதால் செல்வராஜ் என்றே நான் எழுதி வந்தேன். </p>
<p>நான் பள்ளியில் படித்த போது &#8216;சுதந்திரம்&#8217; என்றொரு தமிழ் ஆசிரியர் இருந்தார். இந்தியா சுதந்திரம் வாங்கிய அன்று பிறந்தார் என அவர் வீட்டில் அப்படிப் பெயர் வைத்தார்களாம். சுதந்திரமாக வளர்ந்த தமிழய்யா நன்கு நெடுநெடுவென்று வளர்ந்து நெட்டையாக இருப்பார். அவரின் பேச்சும், சிரிப்பும், கிண்டலும், கலகலப்பும் அவருடைய வகுப்பைச் சுவாரசியமாக வைத்திருக்கும். இப்போது அவர் பற்றி நிறைய மறந்து விட்டது. எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. சுதந்திரம் ஐயா ஒரு முறை எனக்குப் பேச்சுப் போட்டிக்குப் படிக்க எழுதிக் கொடுத்தவர், அந்தத் தாளில் என் பெயரைச் செல்வராசு என்றோ செல்வராசன் என்றோ எழுதியிருந்த ஞாபகம். அப்போது தான் முதலில் வடமொழி நீக்கி எழுதுதல் என்னும் கருத்தைப் பற்றித் தெரிந்தது. </p>
<p>அப்புறமும் என் பெயரில் ராஜ் என்றே தான் இருந்தது. எதையும் அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்கிற ஆள் அல்லனே நான். அதோடு, அது பற்றியெல்லாம் நான் அதிகம் யோசித்துப் பார்க்கவில்லை. கல்லூரி முடித்து அமெரிக்க வந்தபிறகு ஒருநாள் நான் &#8216;சந்தோஷம்&#8217; என்று எழுதியிருந்த ஒரு கட்டுரை/கடிதம் பார்த்துவிட்டு நானறிந்த அக்கா ஒருவர்:</p>
<p>&quot;ஏப்பா? நல்லா எழுதற ஆனா ஏன் வடமொழியில எல்லாம் இன்னும் எழுதிக்கிட்டு இருக்கே?&quot; என்று கேட்டார்கள். எனக்குச் சற்றுக் குழப்பம் தான். அவரிடமே கேட்டேன்:</p>
<p>&quot;மொத்தமா வடமொழி எழுத்துன்னு எப்படிங்க்கா ஒதுக்கறது. எம் பேர எழுதறதுக்கே வேணுமே&quot;. பரணியக்காவுக்கும் அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் விட்டுவிட்டார்கள். </p>
<p>பிறகும் பெரிதாக நான் இது பற்றி ஆராய்ந்தோ எண்ணியோ பார்க்காமல் இருந்தேன். இருப்பினும், இணையம் வழியாகப் படித்ததிலும் கவனித்ததிலும், மணிப்பிரவாள நடை பற்றியும், சில மக்கள் தேவையில்லா இடத்திலும் இக் கிரந்த எழுத்துக்களத் தூவி விடுவதையும் பார்த்தேன். சிலர் அறிந்தேயும் பலர் அறியாமலும் அப்பழக்கத்தை அடைந்திருக்கலாம். </p>
<p>பிறமொழியில் இருந்து புதியனவற்றை ஏற்றுக் கொள்வதையும், கடன் வாங்கிக் கொள்வதையும் நான் எதிர்க்கவில்லை. ஆனால், முதலில் தமிழிலேயே அதற்கு இணையான சொல் இருக்கிறதா? அதனையே ஆள முடியுமா? இல்லை ஆக்க முடியுமா? என்று பார்த்துவிட்டுப் ஏற்றுக் கொள்ளலாம். தொல்காப்பியனே வடசொல், திசைச்சொல் என்று அவற்றை ஏற்றுக் கொள்ளும் வழிமுறையைக் காட்டி இருப்பது போல், தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுதுவதும் <del datetime="2012-01-22T03:14:33+00:00">புளங்குவதும்</del> புழங்குவதும் போதுமே? </p>
<p>இல்லையெனில், இன்னும் செயலாளர் போன்ற நல்ல சொற்களுக்குக் காரியஸ்தன் என்று எழுதுவதைத் தான் பார்க்க வேண்டியிருக்கும். அவஸ்யம் ஸ்வாமி என்பது போல், என்னுடைய பதிவுக்கு அடிக்கடி பின்னூட்டம் இடும் நண்பர் கூட எழுதுவதைக் கண்டிருக்கிறேன். அவசியம் அப்படித்தான் எழுத வேண்டுமா சாமி? என்று எனக்குத் தோன்றும். ஆனால், ஒன்றும் சொல்வதில்லை. </p>
<p>ஆக, கிரந்தம் என்பது தேவையற்ற ஒன்று என்னும் கருத்துச் சரியே என்று எனக்கும் பட்டதால் அதை ஏற்றுக் கொண்டு இயன்றவரை அதனைத் தவிர்த்து எழுத ஆரம்பித்தேன். குறைந்தபட்சம் தமிழை எழுதக் கிரந்தம் தேவையில்லை. இப்படி ஒரு எழுத்து முறையும், அந்த ஐந்தாறு எழுத்துக்களும் இல்லாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்? எப்படியேனும் தமிழ் எழுத்துக்களை வைத்தே Jefferson&#8211;ஐச் செஃபர்சன் என்று எழுதியிருக்க மாட்டோமா?</p>
<p>இருப்பினும் அயலகப் பெயர்கள், அறிவியல் சொற்கள் இவற்றை எழுதப் பல இடங்களில் கிரந்தப் பயன்பாட்டிற்குப் பழகிவிட்டோம் என்பதால் ஐதரசன் என்று எழுதினால் குழப்பமாகத் தான் இருக்கும். ஒரு கட்டுரையில் ஏரி பாட்டர் என்று எழுதிப் பார்த்தபோது குழப்பம் தரும் என்று ஹேரி பாட்டர் என்று மாற்றிக் கொண்டேன். கொஞ்சம் சமரசம் செய்து கொண்டு ஹைட்ரசன் என்று எழுதலாம், ஹைட்ரஜன் என எழுதத் தேவையில்லை. இதுபோன்ற சுவாரசியமான உரையாடல்களையும் கருத்துக்களையும் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அவ்வப்போது பார்க்க முடியும். கிரந்தம் தவிர்த்து எழுத நினைப்பவர்கள் அங்கு எழுதும்போது அவர்கள் தமிழ்த்தாலிபான்கள் என்பன போன்று எதிர்கொள்ளும் தாக்குதல்களும் அதிகம். அவற்றையும் மீறித் தமிழ்ச்சூழலில் கிரந்தம் தவிர்த்து எழுதுவோர் இன்று அதிகரித்திருப்பதைப் பார்க்கிறேன். <a href="http://pulveli.com/">பார்க்க: புல்வெளி.காம்</a></p>
<p>முடிந்தவரை கிரந்தம் கலக்காத தமிழில் எழுத எல்லோரும் முயலலாமே. அட! ஒரு நிமிடம் பொறுங்கள். அதெல்லாம் முடியாது என்பீர்களானால் நான் உங்களை ஒன்றும் சொல்லப் போவதில்லை. இயன்ற வரை நான் அப்படி இருக்கப் போகிறேன். அது பற்றி நீங்கள் பெரிது பண்ண வேண்டாம் எனவும் கேட்கிறேன். இதனால் எல்லாம் தான் எனது பெயரையும் தமிழில் எழுதுவதைச் செல்வராசு என்று அண்மையில் மாற்றிக் கொண்டேன். உண்மையைச் சொன்னால், பழகிப் போன ஒன்றில் இருந்து மாறுவது முதலில் எளிதாய் இல்லை. ஆனால், இப்போதெல்லாம் எந்த வித்தியாசமும் தெரியாமல் மிகவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.&#160; நீங்கள் என்னைச் செல்வராஜ் என்றோ செல்வராசு என்றோ உங்கள் விருப்பம் போல் விளித்துக் கொள்ளலாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/350/feed</wfw:commentRss>
		<slash:comments>37</slash:comments>
		</item>
	</channel>
</rss>
