<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="wordpress/2.3" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>இரா. செல்வராசு</title>
	<link>http://blog.selvaraj.us</link>
	<description>விரிவெளித் தடங்கள்</description>
	<pubDate>Thu, 19 Aug 2010 15:38:53 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.3</generator>
	<language>en</language>
			<item>
		<title>மெல்லச் சுழலுது காலம் - புத்தக வெளியீட்டு விழா</title>
		<link>http://blog.selvaraj.us/archives/328</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/328#comments</comments>
		<pubDate>Thu, 19 Aug 2010 15:38:53 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[இணையம்]]></category>

		<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<category><![CDATA[Book Release]]></category>

		<category><![CDATA[புத்தக வெளியீட்டு விழா]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/328</guid>
		<description><![CDATA[இணையவெளி நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் நான் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் &#8220;மெல்லச் சுழலுது காலம்&#8221; என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆக 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே. தொடர்ந்து இந்த எழுத்து அனுபவத்திற்கு ஊக்கம் அளித்து வரும் நண்பர்களுக்கு இச்சமயத்தில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

நாள்: 26 ஆகஸ்டு 2010 (வியாழன்)
நேரம்: மாலை 4 [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இணையவெளி நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் நான் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் &#8220;மெல்லச் சுழலுது காலம்&#8221; என்று ஒரு புத்தகமாக <a href="http://vadaly.com/">வடலி பதிப்பகம்</a> (<a href="http://vadaly.com/shop/">ஆக 26க்குப் பின் இணையத்தில் வாங்க</a>) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே. தொடர்ந்து இந்த எழுத்து அனுபவத்திற்கு ஊக்கம் அளித்து வரும் நண்பர்களுக்கு இச்சமயத்தில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். </p>
<hr />
<p>நாள்: 26 ஆகஸ்டு 2010 (வியாழன்)<br />
நேரம்: மாலை 4 மணி<br />
இடம்: சக்தி மசாலா அறை, கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு.</p>
<p>வெளியிடுபவர்:<br />
திரு. காசி ஆறுமுகம், கோவை, நிறுவனர், தமிழ்மணம் திரட்டி</p>
<p>பெறுநர்:<br />
பேராசிரியர் R. சண்முகம், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை. </p>
<p><img src="http://blog.selvaraj.us/images/kaalam-ta.jpg" width="520" height="360" alt="Book Release Invitation - mellach chuzhaluthu kaalam" /></p>
<p>இவ்விழாவில் வெளியாகும் பிற நூல்கள்:<br />
 முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் - முனைவர். கு. பாலசுப்ரமணி<br />
	வெளியீடு: திரு. க. பரமசிவம், மகாராஜா குழுமம்.<br />
	பெறுதல்: திரு. ப. பெரியசாமி, லோட்டஸ் ஏஜென்சி</p>
<p>Financial Markets &#038; Institutions – Dr. K. Balasubramani &#038; Dr. T. Chandra Kala<br />
	வெளியீடு: திரு. கருணாகரன், துணை வேந்தர், அண்ணா பல்கலை. கோவை<br />
	பெறுதல்: திரு. அரங்கண்ணல், ஞானமணி குழுமம், ராசிபுரம்</p>
<p>Futures &#038; Options -  Dr. K. Balasubramani &#038; Dr. T. Chandra Kala<br />
	வெளியீடு: திரு. C. சுவாமிநாதன்,  துணை வேந்தர், பாரதியார் பல்கலை. கோவை<br />
	பெறுதல்: திரு. C. ராஜா, DSP, திருப்பூர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/328/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>வாங்க தமிழ் எழுத்த மாத்தீருவோம்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/327</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/327#comments</comments>
		<pubDate>Wed, 16 Jun 2010 03:38:12 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[தமிழ்]]></category>

		<category><![CDATA[எழுத்துச்சீர்திருத்தம்]]></category>

		<category><![CDATA[சீரழிப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/327</guid>
		<description><![CDATA[
அப்பப்பத் தொத்திக்கும் பரபரப்புல எம் புள்ளைங்களுக்குத் தமிழ் சொல்லிக் குடுக்க எறங்கிருவேன். இதத் தொடர்ந்து செய்யணும்னு வருசத்துக்கு ஒருதரம் நெனச்சு அப்புறம் விட்டுப் போயிர்றது ஒரு குறை தான். அத விடுங்க. 
ரெண்டு நாள் முன்னால சில தமிழ் வார்த்தைங்க அச்சடிச்ச தாள் ஒண்ணக் காட்டிப் பெரியவளப் படிக்கச் சொன்னேன்.  &#8216;கேள்&#8217;னு ஒரு வார்த்தை இருந்துச்சு. அதக் &#8216;கேன்&#8217;னு படிச்சுது பொண்ணு. 
என்னடான்னு எட்டிப் பாத்தப்போ அந்தச் சின்ன அச்சுல ளகர மெய்யும் னகர மெய்யும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://blog.selvaraj.us/images/nilatamil.jpg" alt="Nila Tamil" align='left' hspace='10' border='1' /></p>
<p>அப்பப்பத் தொத்திக்கும் பரபரப்புல எம் புள்ளைங்களுக்குத் தமிழ் சொல்லிக் குடுக்க எறங்கிருவேன். இதத் தொடர்ந்து செய்யணும்னு வருசத்துக்கு ஒருதரம் நெனச்சு அப்புறம் விட்டுப் போயிர்றது ஒரு குறை தான். அத விடுங்க. </p>
<p>ரெண்டு நாள் முன்னால சில தமிழ் வார்த்தைங்க அச்சடிச்ச தாள் ஒண்ணக் காட்டிப் பெரியவளப் படிக்கச் சொன்னேன்.  &#8216;கேள்&#8217;னு ஒரு வார்த்தை இருந்துச்சு. அதக் &#8216;கேன்&#8217;னு படிச்சுது பொண்ணு. </p>
<p>என்னடான்னு எட்டிப் பாத்தப்போ அந்தச் சின்ன அச்சுல ளகர மெய்யும் னகர மெய்யும் அவளக் குழப்பி விட்டுருச்சுன்னு தெரிஞ்சுது. அசப்புல பாத்தா ளகர மெய்யும் னகர மெய்யும் கொஞ்சம் ஒரே மாதிரியாத் தான இருக்கு. இதெல்லாம் பயபுள்ளைங்க படிக்கறதுக்குக் கஷ்டம் இல்லியா? </p>
<p>தனி ஒருத்தனுக்குச் சோறில்லைன்னா உலகத்தையே அழியுங்கன்னு பாரதி சொன்னானேங்கறதுக்காக அவனுக்குச் சோறு கெடைக்க வழி பண்ணாம, உலகத்த அழிக்க எது வசதி, என்ன பண்ணலாம்னு யோசிக்கற வம்சம் இல்லியா தமிழன்? </p>
<p>அயல்நாட்டுல பகுதிநேரமாத் தமிழ் படிக்கிற கொழந்தைக்குக் கஷ்டம்னு ஆயிரம் ஆண்டா இருக்கற எழுத்த மாத்தி உகர ஊகாரத்த ஒடச்சிச் சீர்திருத்தம் பண்ணிடலாம்னு ஒரு கூட்டம் துடிச்சுக்கிட்டு இருக்கு. அவங்க கிட்ட எம்புள்ள ஒரு நாள் காலைல பள்ளிக்கூடத்துக்குப் போற அவசரத்துல ளகரத்தையும் னகரத்தையும் போட்டுக் கொழப்பிப் பட்ட கஷ்டத்த யாராவது பாத்தா எடுத்துச் சொல்லுங்க. கையோட இதையும் மாத்திச் சீர்சீர்திருத்தம் செஞ்சுரட்டும். Lன்னு ளகரத்துக்கு வச்சுக்கிட்டா ஆங்கில எழுத்துப் படிக்கிற அவளுக்கு சுலபமா இருக்கும். அடடா&#8230; டகரத்தோடு கொழம்பீருமா? சரி டகரத்த Tன்னு மாத்தீரலாமே. &#8216;உகர ஊகார டகர னகர ளகரச் சீர்திருத்தம்&#8217; ன்னு சொன்னாக் கேக்கறதுக்குக் கூட நல்லா ஒரு கவிதையாட்ட இருக்குல்ல!</p>
<p>ஓரத்துல இருக்கறவன் சும்மா இருங்கப்பா. ஒழுங்காச் சொல்லிக் கொடுத்தா ரெண்டு நாள்ல எல்லா எழுத்தையும் சரியாப் படிச்சுக்கும்னு உங்கள யாரு நூணாயம் பேசச் சொன்னது?</p>
<p>என்னது? இத்தன காலமா அச்சடிச்சு வச்சுருக்குற புத்தகமெல்லாம் வீணாப் போகுமா? யாருக்கும் புரியாமப் போயிருமா? இப்போ இதுக்கெல்லாம் தேவை இல்லியா? எழுத்த மாத்தறதுனால எந்தப் பயனும் இல்லைனு அறிஞர்கள் அனுபவத்துல சொல்லி இருக்காங்களா? சைனா, சப்பான்காரனெல்லாம், படம் படமாப் போட்டு ஆயிரக்கணக்குல எழுதிக்கிட்டு இருக்கானே அவனுக்கு இல்லாத கஷ்டமான்னு கேக்கறீங்களா? </p>
<p>சும்மா இருங்கப்பா. உங்கள எல்லாம் யாரு கேட்டா? கேள்வி கேக்க வந்துட்டீங்க? எங்கைய்யா பெரியாரே சொல்லீட்டுப் போயிட்டாரு. என்னது? நான் சொன்னேங்கறதுக்காகச் செய்யாதீங்க. அது சரின்னு உங்களுக்குப் பட்டாச் செய்யுங்கன்னும் அவரே சொல்லியிருக்காரா?</p>
<p>அடப் போங்கப்பா. கை துருதுருங்குது. எதையாச்சும் செஞ்சே ஆகணும். பெரியாரு பேரச் சொன்னாவாச்சியும் கேள்வி கேட்காமப் போயிருவீங்கன்னு பாத்தா, உடமாட்டேன்னு நிக்கறீங்களே? </p>
<p>தமிழ் என்ன உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா?</p>
<p>* * * *<br />
சிறிது தொடர்புடைய இடுகை: <a href="http://blog.selvaraj.us/archives/104">கையெழுத்துத் தமிழ்</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/327/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>வால்வே மாயம்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/325</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/325#comments</comments>
		<pubDate>Tue, 15 Jun 2010 04:11:47 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[பொது]]></category>

		<category><![CDATA[வேதிப்பொறியியல்]]></category>

		<category><![CDATA[Valve]]></category>

		<category><![CDATA[தடுக்கு]]></category>

		<category><![CDATA[வால்வு]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/325</guid>
		<description><![CDATA[அதரி, மூடிதழ், ஓரதர், தடுக்கிதழ், வாவி, ஊடிதழ், அடைப்பிதழ், மடிப்பிதழ் என்று நான் அடுக்குவதைப் பார்த்து ஏதோ திட்டுகிறேன் என நினைத்துவிடாதீர்கள். அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகள் எழுதப் போன நான், valve என்பதற்கான கட்டுரை ஒன்றை எழுத எண்ணித் தேடியபோது வந்து விழுந்த சொற்கள் தாம் இவை. 

தஞ்சைப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலி அதரி என்பதை முன்வைக்கிறது. முதலில் இது எனக்குப் புரியவில்லை என்றாலும், கனடாவில் உள்ள பேரா.செல்வா &#8216;அதர்&#8217; என்றால் வழி  [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அதரி, மூடிதழ், ஓரதர், தடுக்கிதழ், வாவி, ஊடிதழ், அடைப்பிதழ், மடிப்பிதழ் என்று நான் அடுக்குவதைப் பார்த்து ஏதோ திட்டுகிறேன் என நினைத்துவிடாதீர்கள். அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகள் எழுதப் போன நான், valve என்பதற்கான கட்டுரை ஒன்றை எழுத எண்ணித் தேடியபோது வந்து விழுந்த சொற்கள் தாம் இவை. </p>
<p><img src='http://blog.selvaraj.us/images/2010/06/gatevalve.jpg' alt='Gate Valve' title='Gate Valve: Fair Use http://en.wikipedia.org/wiki/File:Valve.jpg' align='left' hspace='10' border='1' /></p>
<p>தஞ்சைப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலி அதரி என்பதை முன்வைக்கிறது. முதலில் இது எனக்குப் புரியவில்லை என்றாலும், கனடாவில் உள்ள <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_3#.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.B5.E0.AF.81_.E0.AE.95.E0.AF.81.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81">பேரா.செல்வா &#8216;அதர்&#8217; என்றால் வழி </a> என்பதை வைத்து அதரி என்று வழிப்படுத்தும் கருவியைச் சொல்லலாம் என்று ஓரிடத்தில் விளக்கியிருந்ததை வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது. </p>
<p>Valve என்னும் கருவியின் வேலை அது தானே. புழம்பு (பைப்புன்னும் சிலர் சொல்லுவாங்க:-))  ஒன்றின் இணைப்பாக இருந்து அதில் பாயும் பாய்மத்தை தடுத்து நிறுத்தவோ, வேகம்/அழுத்தம் குறைக்கவோ, ஒருவழிப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ பயன்படுத்தப் படும் கருவியே வால்வு. </p>
<p> <a href="http://blog.selvaraj.us/archives/325#more-325" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/325/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>வசந்தம் 2010</title>
		<link>http://blog.selvaraj.us/archives/324</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/324#comments</comments>
		<pubDate>Fri, 09 Apr 2010 04:06:34 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[பொது]]></category>

		<category><![CDATA[வசந்தம்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/324</guid>
		<description><![CDATA[வருந்துவதற்கும் புலம்புவதற்கும் காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன வாழ்வில். செய்யாத காரியங்கள், செல்லாத பயணங்கள், கிட்டாத வெற்றிகள், பிடிக்காத மனிதர்கள், ஒவ்வாத கருத்துக்கள் என்று துவளவும் உண்டு வழிகள் பல.
அவையெல்லாம் ஒரு பொருட்டா என்று நீலத்தில் தெளிந்து நிற்கிறது வானம். திட்டுப்படலமாய் மேகங்கள். அவற்றிற்கு வெளிச்சச் சாந்து பூசி வீசும் கதிரொளி. நறுமணம் வீசும் தென்றல். அதன் சிறுகுளிர்ச் சிலிர்ப்பைப் போக்கும் இளஞ்சூட்டுக் கதிர். 
புதிய இலைகளும் பூக்களுமாய்க் குலுங்கி நிற்கும் மரங்கள். இவை எல்லாமுமாய், எல்லாச் சலிப்புக்களையும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வருந்துவதற்கும் புலம்புவதற்கும் காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன வாழ்வில். செய்யாத காரியங்கள், செல்லாத பயணங்கள், கிட்டாத வெற்றிகள், பிடிக்காத மனிதர்கள், ஒவ்வாத கருத்துக்கள் என்று துவளவும் உண்டு வழிகள் பல.</p>
<p><img src='http://blog.selvaraj.us/images/2010/04/spring2010.jpg' alt='Spring 2010' hspace='10' align='left' />அவையெல்லாம் ஒரு பொருட்டா என்று நீலத்தில் தெளிந்து நிற்கிறது வானம். திட்டுப்படலமாய் மேகங்கள். அவற்றிற்கு வெளிச்சச் சாந்து பூசி வீசும் கதிரொளி. நறுமணம் வீசும் தென்றல். அதன் சிறுகுளிர்ச் சிலிர்ப்பைப் போக்கும் இளஞ்சூட்டுக் கதிர். </p>
<p>புதிய இலைகளும் பூக்களுமாய்க் குலுங்கி நிற்கும் மரங்கள். இவை எல்லாமுமாய், எல்லாச் சலிப்புக்களையும் கலைத்தெறிந்து வாழ்க்கையைக் கொண்டாடப் பல்லாயிரம் காரணங்களைச் சொல்லி அமைகிறது வசந்தம். </p>
<p>கடுங்குளிரில் வீட்டினுள் சிறு தொட்டியினுள் வாடியிருந்த சின்னஞ்சிறு செடி ஒன்றும் கூட அழகானதொரு பூவினைப் பூத்துக் கொண்டாடுகிறது. ஓக் மரங்களின் மகரந்தப் பெருவெடிப்பில் ஒவ்வாமை வந்து சேரும் ஒரு நாள் என்றாலும், இன்று இக்கணம் தன்னைக் கொண்டாடும் வசந்தத்தைக் கொண்டாடுகிறேன். </p>
<p>இக்கணம் ஒவ்வொன்றும் மந்திரத் தன்மை வாய்ந்தது. இந்தக் கணத்தின் சிறு துளியில் உயிருடன் இருப்பதற்கு மகிழ்கிறேன். நன்றியுடையவனாக இருக்கிறேன். நிறைவடைகிறேன். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/324/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>உறவுகள் தொடர்கதை</title>
		<link>http://blog.selvaraj.us/archives/321</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/321#comments</comments>
		<pubDate>Wed, 30 Sep 2009 15:56:14 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[சிறுகதை]]></category>

		<category><![CDATA[புனைவு]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/321</guid>
		<description><![CDATA[இத்தனை நாள் இல்லாமல் இப்போ மட்டும் எதுக்கு இந்த உறவு என்று ‘வாழத்தோட்டத்து’ப் பெரியப்பாவைப் பார்க்கத் தான் வருவதாயில்லை என்று அடம் பிடித்தான் சிவக்குமார். பெரியப்பா என்று கூடச் சொல்ல அவனுக்குப் பிடிப்பதில்லை. ‘வாழத்தோட்டத்தார்’ என்று தான் குறிப்பிடுவான். 
வருடம் ஒருமுறையேனும் அவர்கள் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அருகே இருந்த சொந்த ஊருக்குச் சென்று பங்காளி சொந்தமெல்லாம் பார்த்து வருவது இப்போது வழக்கமாகி இருந்தது. ஈரோட்டில் இருந்தவரை சிவக்குமாரும் தவறாமல் எல்லா வருடமும் ஊருக்கு வந்து போயிருக்கிறான். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src='http://blog.selvaraj.us/images/2009/10/thodarkathai.jpg' alt='' align='left' hspace='10' />இத்தனை நாள் இல்லாமல் இப்போ மட்டும் எதுக்கு இந்த உறவு என்று ‘வாழத்தோட்டத்து’ப் பெரியப்பாவைப் பார்க்கத் தான் வருவதாயில்லை என்று அடம் பிடித்தான் சிவக்குமார். பெரியப்பா என்று கூடச் சொல்ல அவனுக்குப் பிடிப்பதில்லை. ‘வாழத்தோட்டத்தார்’ என்று தான் குறிப்பிடுவான். </p>
<p>வருடம் ஒருமுறையேனும் அவர்கள் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அருகே இருந்த சொந்த ஊருக்குச் சென்று பங்காளி சொந்தமெல்லாம் பார்த்து வருவது இப்போது வழக்கமாகி இருந்தது. ஈரோட்டில் இருந்தவரை சிவக்குமாரும் தவறாமல் எல்லா வருடமும் ஊருக்கு வந்து போயிருக்கிறான். பள்ளி முடிந்து கல்லூரியில் பொறியியல் படிக்கக் கோவைக்குப் போன காலத்தில் இருந்து அவன் ஊருக்கும் கோயிலுக்கும் போவது கொஞ்சம் குறைந்து தான் போனது. </p>
<p>“இந்தத் தடவ உன் பெரியப்பா வீட்டுக்கும் போயிட்டு வரோணும்ப்பா” என்று அப்பா தான் ஆரம்பித்தார்.  “நாலு மாசம் முன்னாடி உங்க அண்ணன் தோட்டத்துல பாம்பு கடிச்சுச் செத்துப்போயிட்டான்”.</p>
<p>“ஆமாப்பா. என்ன தான் சண்டையினாலும், இதுக்கு நீயும் வந்து ஒரு வார்த்த கேட்டுட்டுத் தான் வரணும்” என்று அம்மாவும் கூடச் சேர்ந்து கொண்டார்கள். </p>
<p>“ஏம்மா… உங்களை அத்தனை அவமானப் படுத்துனவங்க வீட்டுக்கு எப்படிங்கம்மா போகணும்னு சொல்றீங்க?” என்று கேட்டாலும், ஒரு மரணம் மன உறுதியைச் சற்று வலுவிழக்கத் தான் செய்கிறது. ஒரு சாவினால் பிறவற்றை மறந்துவிடவேண்டுமா என்று கேள்வி எழும்பினாலும், அது பக்குவமான கேள்வியில்லை என்று தயங்க வைத்து, ஒரு கணம் நின்று மறுபக்கத்தின் நிலையையும் யோசிக்கவே வைக்கிறது. </p>
<p>“சரி விடுங்க. போய்ட்டுத் தான் வரலாம்”.<br />
 <a href="http://blog.selvaraj.us/archives/321#more-321" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/321/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>மீசை மொளச்சு முன்னுக்கு வந்தவன்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/319</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/319#comments</comments>
		<pubDate>Mon, 31 Aug 2009 15:58:42 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[சிறுகதை]]></category>

		<category><![CDATA[புனைவு]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/319</guid>
		<description><![CDATA[&#8220;அதெல்லாம் நீ கேக்கக்கூடாது. பொம்பளைங்க சமாச்சாரம் பேசிக்கிட்டிருக்கிற எடத்துல ஆம்பிளப்பையனுக்கு என்னடா வேலை? போடா அந்தட்டம்&#8221;னு குமார அவங்க அம்மாவே தொரத்தி உட்டாங்க. 
குமாருக்குக் கோவம் கோவமா வந்துச்சு. ஊற வச்ச கொட்டமுத்த உறிச்சுக் குடுறான்னு அவங்களே கூப்பிட்டுட்டு இப்பத் தொரத்தராங்க. &#8216;அப்படி என்ன நான் கேட்டுட்டேன், இல்லாததையும் பொல்லாததையுமா? இவங்க பேசிக்கிட்டிருந்ததப் பத்தித் தானே கேட்டேன்&#8217;னு நெனச்சுக்கிட்டு மொறச்சுப் பாத்தான். 
கீழ துணி சுத்தியிருந்த மொளக்குச்சிய ஆட்டாங்கல்லுக் குழிக்குள்ள ஒரு வட்டக்கல்லு வச்சு அடிச்சு தெரமாக்கீட்டு, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src='http://blog.selvaraj.us/images/2009/09/pb.jpg' alt='Growth' align='left' hspace='10' />&#8220;அதெல்லாம் நீ கேக்கக்கூடாது. பொம்பளைங்க சமாச்சாரம் பேசிக்கிட்டிருக்கிற எடத்துல ஆம்பிளப்பையனுக்கு என்னடா வேலை? போடா அந்தட்டம்&#8221;னு குமார அவங்க அம்மாவே தொரத்தி உட்டாங்க. </p>
<p>குமாருக்குக் கோவம் கோவமா வந்துச்சு. ஊற வச்ச கொட்டமுத்த உறிச்சுக் குடுறான்னு அவங்களே கூப்பிட்டுட்டு இப்பத் தொரத்தராங்க. &#8216;அப்படி என்ன நான் கேட்டுட்டேன், இல்லாததையும் பொல்லாததையுமா? இவங்க பேசிக்கிட்டிருந்ததப் பத்தித் தானே கேட்டேன்&#8217;னு நெனச்சுக்கிட்டு மொறச்சுப் பாத்தான். </p>
<p>கீழ துணி சுத்தியிருந்த மொளக்குச்சிய ஆட்டாங்கல்லுக் குழிக்குள்ள ஒரு வட்டக்கல்லு வச்சு அடிச்சு தெரமாக்கீட்டு, நெத்தில வடிஞ்ச வேர்வையப் பொறங்கையால தொடச்சிக்கிட்டே பக்கத்து ஊட்டு அன்னபூரணியக்காவும் அவனப் பாத்தாங்க. அவ‌ங்க‌ லேசாச் சிரிக்கிற‌ மாதிரியும் குமாருக்குச் ச‌ந்தேக‌மா இருந்துச்சு. அதுவும் கோவ‌த்த‌ அதிக‌மாக்குச்சு. </p>
<p>ஆனா, அன்ன‌பூர‌ணிய‌க்காவ‌ அவ‌னுக்குப் புடிக்கும்.  குச்சி ஐஸ் வண்டிக்காரன் வந்தா &#8216;போனாப் போகுது வாங்கிக்கட்டும் உடுங்க&#8217;ன்னு அம்மா கிட்ட அவனுக்குப் பரிஞ்சு பேசுவாங்க. புரட்டாசிச் சனிக்கிழம பெருமாள் மலைக்கு அவங்களோட போனா, வரும்போது நன்னாரி வேர் போட்ட எலுமிச்சம்பழச் சர்பத் வாங்கிக் குடுப்பாங்க. அதனால கோவத்தக் கொஞ்ச‌ம் அட‌க்கிக் கிட்டான். ஆனா, இன்னிக்குத்த பிரச்சினைக்கு இந்த அக்காவும் ஒரு காரணம். </p>
<p> <a href="http://blog.selvaraj.us/archives/319#more-319" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/319/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>தமிழ்மணம் ஐந்தாண்டுகள் - காசியின் கேள்விகளும் என் பதில்களும்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/318</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/318#comments</comments>
		<pubDate>Wed, 26 Aug 2009 02:54:28 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[இணையம்]]></category>

		<category><![CDATA[ஐந்தாண்டு]]></category>

		<category><![CDATA[காசி]]></category>

		<category><![CDATA[தமிழ்மணம்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/318</guid>
		<description><![CDATA[தமிழ்மணத்தின் ஐந்தாண்டுகள் நிறைவினை ஒட்டி இவ்வாரம் மீண்டும் நட்சத்திரமாகியிருக்கும் காசி எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கான எனது பதில்களைச் சுருக்கமாகவே எழுதி அனுப்பி இருந்தேன்.  ஆனால் முப்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுருக்கமாகப் பதில் வந்தாலும் அதனை அவர் எப்படிக் கையாளப் போகிறார் என்றும் ஐயத்தைத் தெரிவித்திருந்தேன். அவரவர் பதிவில் வெளியிடுவதே சிறப்பாக இருக்கும் என அவரும் உணர்ந்து தெரிவிக்கவே, கிழே எனது கருத்துக்கள். 
1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://blog.thamizmanam.com/archives/185">தமிழ்மணத்தின் ஐந்தாண்டுகள்</a> நிறைவினை ஒட்டி இவ்வாரம் மீண்டும் நட்சத்திரமாகியிருக்கும் காசி எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கான எனது பதில்களைச் சுருக்கமாகவே எழுதி அனுப்பி இருந்தேன்.  ஆனால் முப்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுருக்கமாகப் பதில் வந்தாலும் அதனை அவர் எப்படிக் கையாளப் போகிறார் என்றும் ஐயத்தைத் தெரிவித்திருந்தேன். <a href="http://kasiblogs.blogspot.com/2009/08/blog-post_25.html">அவரவர் பதிவில் வெளியிடுவதே</a> சிறப்பாக இருக்கும் என அவரும் உணர்ந்து தெரிவிக்கவே, கிழே எனது கருத்துக்கள். </p>
<p><em>1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?</em></p>
<blockquote><p>இணையத்தில் தமிழின் வளர்ச்சி அபரிதமானது. குறிப்பிடத்தக்கது. உள்ளடக்கங்கள் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றாலும், மேற்சொன்ன வளர்ச்சியும் கவனம் பெறவேண்டும். எழுத்துரு, குறியேற்றப் பலக்கிய தன்மைகளால் ஆரம்ப கட்ட வளர்ச்சி சற்று வேகம் குன்றியதாகவே இருந்தது என்றாலும், யுனிக்கோடு/ஒருங்குறியின் பரவலால் கடந்த சில ஆண்டுகளில் இந்த வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதற்கு வலைப்பதிவுகளும் ஒரு முக்கியமான மறுக்கவியலாத பங்களிப்பை அளித்திருக்கின்றன. வணிகநோக்கு ஊடகங்களும் தங்களது தனிப்பட்ட குறியேற்றங்களையும், எழுத்துருக்களையும் விடுத்து, இப்போது ஒருங்குறியின் பக்கம் திரும்பி இருப்பதும் இதற்கு ஒரு சான்றே. </p></blockquote>
<p> <a href="http://blog.selvaraj.us/archives/318#more-318" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/318/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>நூறு வயது</title>
		<link>http://blog.selvaraj.us/archives/316</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/316#comments</comments>
		<pubDate>Thu, 20 Aug 2009 03:58:39 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<category><![CDATA[நூறு]]></category>

		<category><![CDATA[வயது]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/316</guid>
		<description><![CDATA[சிறு குழந்தைகள் எப்போதேனும் தும்மினால் எங்களூர்ப் பக்கத்துப் பெரியோர்கள் &#8216;நூறு&#8230; நூறு&#8230;&#8217; என்பார்கள்.  &#8216;நூறு வயது வாய்க்கட்டும்&#8217; என்னும் வாழ்த்து அதனில் அடங்கி இருக்கும். 
&#8220;வாப்பா, உனக்கு நூறாயுசு! இப்பத்தான் உன்னப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தோம்; (அல்லது) இப்பத்தான் உன்னப் பத்தி நெனச்சேன்&#8221;,  என்பதிலும் நூறு வயதின் சிறப்பு வெளிப்படும். 
நூறு வயது வரை வாழ்தல் என்பதில் எனக்கும் சின்ன வயதில் இருந்தே ஒரு பிடிப்பு ஏற்பட்டுப் போய்விட்டது. ஒருவேளை குழந்தையாய் இருக்கையில் நான் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src='http://blog.selvaraj.us/images/2009/08/100.gif' alt='100 years' align='left' hspace='10' />சிறு குழந்தைகள் எப்போதேனும் தும்மினால் எங்களூர்ப் பக்கத்துப் பெரியோர்கள் &#8216;நூறு&#8230; நூறு&#8230;&#8217; என்பார்கள்.  &#8216;நூறு வயது வாய்க்கட்டும்&#8217; என்னும் வாழ்த்து அதனில் அடங்கி இருக்கும். </p>
<p>&#8220;வாப்பா, உனக்கு நூறாயுசு! இப்பத்தான் உன்னப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தோம்; (அல்லது) இப்பத்தான் உன்னப் பத்தி நெனச்சேன்&#8221;,  என்பதிலும் நூறு வயதின் சிறப்பு வெளிப்படும். </p>
<p>நூறு வயது வரை வாழ்தல் என்பதில் எனக்கும் சின்ன வயதில் இருந்தே ஒரு பிடிப்பு ஏற்பட்டுப் போய்விட்டது. ஒருவேளை குழந்தையாய் இருக்கையில் நான் நிறையத் தும்மி இருக்கலாம். அல்லது நிறையப் பேர் என்னைப் பற்றி நினைத்தவாறு இருந்திருக்கலாம்; பேசி இருந்திருக்கலாம் <img src='http://blog.selvaraj.us/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> .</p>
<p>&#8220;அம்பது அறுபதுன்னு ஆனாலே பொட்டுனு போயிடனும்&#8221;, என்று சிலர் தமது ஆயுட்கால விருப்பத்தைக் குறுக்கிக் கேட்டிருந்தாலும், நான் மட்டும் யார் என்னை எப்போது கேட்கினும், &#8220;எனக்கு நூறு வயசைத் தாண்டியும் வாழணும்&#8221; என்னும் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். இரண்டு, நான்கு, ஐந்து வருடங்கள் கழித்தும் மாறாத என் பதிலைக் கேட்டு, &#8220;இன்னுமா உங்களுக்கு அந்த ஆசை தீரலை?&#8221; என்று மலைத்துப் போகிறார்கள்.  &#8216;இலக்கு மட்டுமல்ல; பயணமும் முக்கியமானது&#8217; என்னும் சிந்தனையின்பால் சார்ந்ததினாலான விளைவாகவும் கூட இருக்கலாம். </p>
<p> <a href="http://blog.selvaraj.us/archives/316#more-316" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/316/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>வாடாத மல்லி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/313</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/313#comments</comments>
		<pubDate>Sat, 25 Jul 2009 05:21:31 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[சிறுகதை]]></category>

		<category><![CDATA[புனைவு]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/313</guid>
		<description><![CDATA[வாசிங்டனைச் சுற்றும் ஐ-495 என்னும் &#8216;பெல்ட்வே&#8217;யிற்குச் சற்று வெளியே, &#8216;ரவுட் 50&#8242;ஐ ஒட்டிய சிறு குன்றொன்றின் உச்சியிலே அமைந்திருந்தது &#8216;சன்ரைஸ் அசிஸ்டடு லிவிங்&#8217; என்னும் அந்த முதியோர் இல்லம்.  புதிதாக வெட்டப்பட்ட புல்தரையைப் பார்த்துக்கொண்டு ஒரு சனிக்கிழமைக் காலையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்த போது அவருக்குச் செம்மண்காட்டுவலசு ஆத்தாவைப் பற்றிய ஞாபகம் வந்தது.  
வெளிர் நீலச் சீருடை அணிந்த பணிப்பெண்களில் ஒருத்தி அன்றலர்ந்த வண்ணமலர்கள் சிலவற்றைக் கொய்து வந்து மேசைக் குடுவையினுள் வைத்துவிட்டுத் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வாசிங்டனைச் சுற்றும் ஐ-495 என்னும் &#8216;பெல்ட்வே&#8217;யிற்குச் சற்று வெளியே, &#8216;ரவுட் 50&#8242;ஐ ஒட்டிய சிறு குன்றொன்றின் உச்சியிலே அமைந்திருந்தது &#8216;சன்ரைஸ் அசிஸ்டடு லிவிங்&#8217; என்னும் அந்த முதியோர் இல்லம்.  புதிதாக வெட்டப்பட்ட புல்தரையைப் பார்த்துக்கொண்டு ஒரு சனிக்கிழமைக் காலையில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்த போது அவருக்குச் செம்மண்காட்டுவலசு ஆத்தாவைப் பற்றிய ஞாபகம் வந்தது.  </p>
<p>வெளிர் நீலச் சீருடை அணிந்த பணிப்பெண்களில் ஒருத்தி அன்றலர்ந்த வண்ணமலர்கள் சிலவற்றைக் கொய்து வந்து மேசைக் குடுவையினுள் வைத்துவிட்டுத் தினமும் போலவே அன்றும் &#8220;குட் டே மிஸ்டர் சின்னூ&#8221; என்று<br />
புன்னகைத்துச் சென்றாள். </p>
<p><img src='http://blog.selvaraj.us/images/2009/07/vandi.jpg' alt='' hspace='30' /></p>
<p>செம்மண்காட்டுவலசு ஆத்தாவைப் பற்றிச் சின்னூ என்று அழைக்கப்பட்ட சின்னசாமி முருகையனுக்கு நினைவில் வருவதற்கு இரண்டே இரண்டு விசயங்கள் தான் இருந்தன.  இரண்டுமே கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முந்தைய கதை.  அப்போது அவருக்கு என்ன ஒரு பத்து வயது இருந்திருக்கலாம். </p>
<p>தன் பேரனுக்கும் இப்போது சுமார் பத்து வயது தானிருக்கும் என்பது நினைவுக்கு வந்தது. அவருடைய ஒரே மகளின் ஒரே பையன். அசப்பில் பார்த்தால் தன் சாயல் இருக்கிறதோ என்று தோன்றினாலும் அதைத் தானாக வெளியே சொல்லிக் கொள்ள மாட்டார். </p>
<p>பணிப்பெண் வாழ்த்தியதைப் போல, உண்மையிலேயே அவருக்கு இன்றைக்கு நல்ல நாள் தான். பல மாதங்களுக்குப் பிறகு மகளும் பேரனும் இன்று அவரைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தார்கள்.<br />
 <a href="http://blog.selvaraj.us/archives/313#more-313" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/313/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>அயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/310</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/310#comments</comments>
		<pubDate>Fri, 24 Jul 2009 06:20:48 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[கண்மணிகள்]]></category>

		<category><![CDATA[சமூகம்]]></category>

		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<category><![CDATA[ஒழுக்கம்]]></category>

		<category><![CDATA[கடவுள்]]></category>

		<category><![CDATA[கலாச்சாரம்]]></category>

		<category><![CDATA[தொலைக்காட்சி]]></category>

		<category><![CDATA[மொழி]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/310</guid>
		<description><![CDATA[&#8220;எங்கங்க? நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்&#8221; &#8212; என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை&#8221;
என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத் தொடங்கியபோது அயல் சூழலுக்கு அவளுடைய மொழி பலியாவதைப் பார்த்துக் கொண்டு ஆவண செய்ய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p>&#8220;எங்கங்க? நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்&#8221; &#8212; என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை&#8221;</p></blockquote>
<p>என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத் தொடங்கியபோது அயல் சூழலுக்கு அவளுடைய மொழி பலியாவதைப் பார்த்துக் கொண்டு ஆவண செய்ய இயலாது விட்டுவிட்டோமா என எப்போதாவது பதைக்கிறேன். </p>
<p>இது தான் பிரச்சினை. இந்த &#8216;எப்போதாவது&#8217; எப்போதுமே இருந்திருக்க வேண்டும். தொடர்ந்த வலியுறுத்தலும் ஊக்கமும் இருந்திருந்தால் இந்நிலை அமைந்திருக்காது என்பதற்குச் சில காட்டுக்களையும் மகளது நண்பர் வட்டாரத்திலேயேவும் கண்டிருக்கிறேன். </p>
<p>ஒரு கட்டத்தில் அதிக வலியுறுத்தல் எதிர்மறையாகப் போய்விடுமோ என்று அஞ்சியும் சற்றுக் குறைத்துக் கொண்டோம், என்பது சரியான காரணமா, ஒரு சாக்குத் தானா என்றும் கூடக் குழப்பம் தான். அப்படி ஒரு நிலை இருந்தது உண்மை தான். ஆனால் அதனைக் கையாளும் விதம் பற்றி முழுமையாகச் செயல்பட்டுச் சிந்தித்தேனா என்றால் இல்லை என்பதே சரியான பதிலாய் இருக்கும். வேறு பல காரணங்களையும் சாக்குகளையும் ஒன்றாகக் கலந்து இந்தப் பாதையை நாங்களே அடைத்தும் இருக்கலாம். </p>
<p>இன்னும் கூட நம்பிக்கை இழக்காமல் இந்த விசயத்தை அவ்வப்போது கையில் எடுத்து ஆவண செய்ய முனைகிறேன்.  அதனால் குறைந்த பட்சம் எழுத்துக் கூட்டியேனும் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இதனைச் செய்யாமல் விடுவது தான் குறை என்பதை உணர்ந்து முயல வேண்டும். </p>
<p>தமிழோசையாவது வீட்டில் தவழ்வது உதவும் என்று சில நண்பர்கள் சொன்னபடி, தமிழ்த் தொலைக்காட்சிகள் சிலவற்றைப் பார்க்க, காட்ட எண்ணினோம். அதிலும், சதா சர்வ காலமும் ஏதேனும் ஒரு திரை முன் சடநிலையில் அமைந்து கிடப்பது உடலுறுதிக்கு நல்லதில்லை என்று தொலைக்காட்சி, கணினி, வீ போன்றவற்றின் நேரத்தை மட்டுப்படுத்தி வைத்திருப்பதால் அதிகம் பார்க்கச் சொல்ல முடியவில்லை. அப்படியே பார்த்தாலும் ஏதேனும் சினிமாப்பாட்டு, நடன நிகழ்ச்சி, அல்லது அழுமூஞ்சித் தொடர்க்காட்சிகள் தான் தெரிகின்றன. அத்தொடர்களில் வருகிற அதீத பொய்யுலகைத் தான் நம்முடைய கலாச்சாரம், வாழ்வுமுறை என்று அறிமுகப்படுத்தி வைக்க வேண்டுமா என்றும் தயக்கம். </p>
<p><img src='http://blog.selvaraj.us/images/2009/07/thindal_murugan_temple.jpg' alt="Thindal Murugan from ta.wikipedia.org (Thanks Kurumban)" hspace='30' /></p>
<p> <a href="http://blog.selvaraj.us/archives/310#more-310" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/310/feed</wfw:commentRss>
		</item>
	</channel>
</rss>
