<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="wordpress/2.3" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>இரா. செல்வராசு</title>
	<link>http://blog.selvaraj.us</link>
	<description>விரிவெளித் தடங்கள்</description>
	<pubDate>Wed, 09 May 2012 05:21:02 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.3</generator>
	<language>en</language>
			<item>
		<title>கற்ற தமிழும் கையளவும்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/382</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/382#comments</comments>
		<pubDate>Wed, 09 May 2012 05:18:22 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[தமிழ்]]></category>

		<category><![CDATA[கற்றது கையளவு]]></category>

		<category><![CDATA[களவும் கற்று மற]]></category>

		<category><![CDATA[கவரிமா]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/382</guid>
		<description><![CDATA[கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தும் முன்தோன்றிய தொன்மை வாய்ந்த ஒரு மொழியும், அம்மொழியின் ஒலிகளும் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் தொடர்ந்து வருவதே தனிச்சிறப்பான ஒன்று தான்.&#160; 
தன் இலக்கணக் கட்டமைப்போடும் இலக்கியச் செல்வங்களோடும் தமிழ் செம்மொழி என்று போற்றத் தக்கது தான். அப்பேர்ப்பட்ட ஒரு மொழிக்குச் சொந்தக்காரராய் இருந்து கொண்டு இன்னும் அச்சொத்துக்களில் ஏராளம் அறியாமல் இருக்கின்றோமே என்னும் ஒரு உள்ளக்கிடக்கை அண்மையில் மிகுதியாக உண்டாக ஆரம்பித்திருக்கிறது. 
அதோடு, தமிழின் மேன்மை தொன்மையில் மட்டுமன்று; அதன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தும் முன்தோன்றிய தொன்மை வாய்ந்த ஒரு மொழியும், அம்மொழியின் ஒலிகளும் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் தொடர்ந்து வருவதே தனிச்சிறப்பான ஒன்று தான்.&#160; </p>
<p>தன் இலக்கணக் கட்டமைப்போடும் இலக்கியச் செல்வங்களோடும் தமிழ் செம்மொழி என்று போற்றத் தக்கது தான். அப்பேர்ப்பட்ட ஒரு மொழிக்குச் சொந்தக்காரராய் இருந்து கொண்டு இன்னும் அச்சொத்துக்களில் ஏராளம் அறியாமல் இருக்கின்றோமே என்னும் ஒரு உள்ளக்கிடக்கை அண்மையில் மிகுதியாக உண்டாக ஆரம்பித்திருக்கிறது. </p>
<p>அதோடு, தமிழின் மேன்மை தொன்மையில் மட்டுமன்று; அதன் தொடர்ச்சியிலும் அடங்கி இருக்கிறது என்னும் வழக்கிற்கேற்ப நமக்குப் பின்னான புலம்பெயர் சந்ததியினருக்கும் நம் மொழியையும் அடையாளத்தையும் கொண்டு செல்ல வேண்டுமே என்னும் கருக்கடையும் ஏற்படுகிறது. </p>
<p>இவ்விரு எண்ணங்களுக்கும் தூபம் போடுவதாகவும் அதே நேரத்தில் அவற்றை நடைமுறைப்படுத்த உதவுவதாகவும் <a href="https://www.valluvantamil.org/">வார இறுதித் தமிழ்ப்பள்ளிகள்</a> அமைந்திருக்கின்றன. </p>
<p>நாடெங்கும் தன்னார்வலர்கள் தமிழ்ச் சங்கங்களும், பள்ளிகளும், விழாக்களும் அமைத்து முயன்று வருவதைப் போன்றே எங்கள் பகுதியிலும் இப்போது ஒன்றிற்கு இரண்டாகப் பலபத்து மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் உருவாகி இருக்கின்றன. </p>
<p>இவையிருக்க, எங்கள் வீட்டிலும் சில வாதங்கள். எந்த மாற்றத்திற்கும் ஆரம்பநிலை எதிர்ப்புகள் இருப்பது இயல்பு தானே. எங்கள் மக்களும், இவ்வருடம் தமிழ்ப்பள்ளிக்குச் செல்வோம் என்று சொன்ன போது, “எதுக்குப் போகணும்”, “வீட்டிலேயே கத்துக்கலாம்”, “எதுக்காகக் கத்துக்கணும்”, என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர். </p>
<p> <a href="http://blog.selvaraj.us/archives/382#more-382" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/382/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>ஆழ்கடலில் வெடித்த பாறைநெய்க் கிணறு</title>
		<link>http://blog.selvaraj.us/archives/378</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/378#comments</comments>
		<pubDate>Sat, 21 Apr 2012 02:58:52 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[வேதிப்பொறியியல்]]></category>

		<category><![CDATA[BP]]></category>

		<category><![CDATA[Deepwater Horizon]]></category>

		<category><![CDATA[Gulf Oil Spill]]></category>

		<category><![CDATA[ஆழ்கடல் எண்ணெய்க் கிணறு]]></category>

		<category><![CDATA[பாறைநெய்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/378</guid>
		<description><![CDATA[முன்குறிப்பு: 2010 ஏப்ரல்-இல் பிரிட்டிசு பெட்ரோலியம் நிறுவனத்தின் மெக்சிக்கோ வளைகுடா விபத்தும் எண்ணெய்க் கசிவும் ஏற்பட்டு இன்றோடு சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன.&#160; அச்சமயத்தில், இது பற்றிய விரிவான ஒரு கட்டுரையைப் புதிய இணைய இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதன் காரணமாக&#160; எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால், அவ்விதழ் வெளிவரவே இல்லை என்பதால் இவ்விடுகை இத்தனை மாதங்களாய் வெளியுலகம் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தது. அதனைச் சற்று இற்றைப் படுத்தி இங்கே இடுகிறேன்.
* * * * 
அமெரிக்க [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><u>முன்குறிப்பு:</u> 2010 ஏப்ரல்-இல் பிரிட்டிசு பெட்ரோலியம் நிறுவனத்தின் மெக்சிக்கோ வளைகுடா விபத்தும் எண்ணெய்க் கசிவும் ஏற்பட்டு இன்றோடு சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன.&#160; அச்சமயத்தில், இது பற்றிய விரிவான ஒரு கட்டுரையைப் புதிய இணைய இதழ் ஒன்று கேட்டுக் கொண்டதன் காரணமாக&#160; எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால், அவ்விதழ் வெளிவரவே இல்லை என்பதால் இவ்விடுகை இத்தனை மாதங்களாய் வெளியுலகம் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தது. அதனைச் சற்று இற்றைப் படுத்தி இங்கே இடுகிறேன்.</p>
<p>* * * * </p>
<p>அமெரிக்க மெக்சிக்கோ வளைகுடாவின் ஆழ்கடலில் 2010ல் ஏப்ரல் மாதம் பிரிட்டிசுப் பெட்ரோலியம் (பீ.பி) நிறுவனத்தின் பாறைநெய்க் கிணறு ஒன்று வெடித்துத் தொடர்ந்து ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குக் கச்சா எண்ணெய்யைக் (கரட்டு நெய்யைக்)&#160; கடலில் கலக்க விட்டுக் கொண்டிருந்தது. கசிந்த கரிய பாறைநெய்யின் அணுமானித்த அளவு நாளுக்கு நாள் மாறி, உயர்ந்து ஆரம்பத்தில் நாளொன்றுக்கு ஆயிரம் பீப்பாய் அளவு (1000 BPD) என்று சொல்லப்பட்டதில் இருந்து அதிகபட்சம் அறுபத்தைந்து ஆயிரம் பீப்பாய் (65000 BPD) அளவுக்கு இருக்கலாமெனச் சொல்லப்பட்டது.&#160; (ஒரு பீப்பாய் என்பது சுமார் 160 லிட்டர்). அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாக இது கருதப் படுகிறது. </p>
<p><a href="http://blog.selvaraj.us/images/2012/04/image.png"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="image" border="0" alt="image" src="http://blog.selvaraj.us/images/2012/04/image-thumb.png" width="240" height="204" /></a></p>
<p> <a href="http://blog.selvaraj.us/archives/378#more-378" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/378/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>மனதில் உறுதி வேண்டும்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/373</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/373#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 04:21:46 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[இணையம்]]></category>

		<category><![CDATA[கண்மணிகள்]]></category>

		<category><![CDATA[சமூகம்]]></category>

		<category><![CDATA[தமிழ்]]></category>

		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<category><![CDATA[தமிழ்மணம்]]></category>

		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<category><![CDATA[நன்றி]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/373</guid>
		<description><![CDATA[2012இன் தை முதல் வாரத்தின் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், அன்புடன் வரவேற்று, படித்து, பின்னூட்டமிட்டும், உரையாடலில் கலந்து கொண்டும், உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. இவ்வாரம் எழுத எண்ணிய இன்னும் பல இருக்கின்றன. அவற்றை வரும் நாட்களில் தொடர்வேன் என்னும் நம்பிக்கை உண்டு. 
அன்றாட வாழ்வின் இழுபறிகளுக்குள் ஆர்வப் பணிகளுக்கும் ஆர்வலப் பணிகளுக்கும் நேரச்சிக்கல்கள் எல்லோருக்கும் இருப்பது தான். ஒன்றைக் கவனிக்க மற்றொன்று கவனமற்றுப் போகும் என்றாலும் இயன்றவரை இவற்றில் ஈடுபட்டிருக்க முயலப் போகிறேன். 
வலைப்பதிவு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>2012இன் தை முதல் வாரத்தின் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், அன்புடன் வரவேற்று, படித்து, பின்னூட்டமிட்டும், உரையாடலில் கலந்து கொண்டும், உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. இவ்வாரம் எழுத எண்ணிய இன்னும் பல இருக்கின்றன. அவற்றை வரும் நாட்களில் தொடர்வேன் என்னும் நம்பிக்கை உண்டு. </p>
<p>அன்றாட வாழ்வின் இழுபறிகளுக்குள் ஆர்வப் பணிகளுக்கும் ஆர்வலப் பணிகளுக்கும் நேரச்சிக்கல்கள் எல்லோருக்கும் இருப்பது தான். ஒன்றைக் கவனிக்க மற்றொன்று கவனமற்றுப் போகும் என்றாலும் இயன்றவரை இவற்றில் ஈடுபட்டிருக்க முயலப் போகிறேன். </p>
<p>வலைப்பதிவு மற்றும் இதர இணையத் தளங்களுக்கும் இவனைத் தொலைத்து விடுவோமோ என்னும் கவலைக்கும், நன்றாகவும் நிறையவும் எழுத ஊக்குவிக்க வேண்டுமென்னும் ஆர்வத்திற்கும் இடையில் ஊசலாடும் மனைவியின் நிலை பற்றியும் அறிவேன். வளர்ந்து வரும் மக்களின் நல்வாழ்விற்கும் இனிய அனுபவங்களுக்கும் அவர்களோடு கழியும் நேரங்களும் தவிர்க்கக் கூடாதவை. </p>
<p>நாம் வாழ்ந்த காலத்தின் நினைவுகளும் எண்ணங்களும் கூட நமது காலத்திலேயே வெறும் புகையாய்க் கலைந்து போகும் முன்னே அவற்றுள் சிலவற்றையேனும் எழுத்தில் ஆவணப் படுத்தி வைக்க முடியுமா என்னும் ஆதங்கமும் ஒருபுறம். என்னுடைய துறைசார் விவரங்களை எளிமையாகவும் சுவையாகவும் (அல்லது இவ்விரண்டும் இல்லாவிட்டாலும் சரி) கொஞ்சம் எழுத முயலலாம் என்றும் எண்ணம்.</p>
<p>இவற்றினிடையே தமிழ்மணம், தமிழ் விக்கிப்பீடியா, வள்ளுவன் தமிழ் மையம், போன்ற தன்னார்வப் பணிகளுக்கு என்னுடைய நேரத்தில் சிறு பங்கை அளித்து வருகிறேன். அவற்றையும் திறனோடு தொடர விருப்பம் உண்டு. (இதில் அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகமும் சேர்ந்து கொள்ள வாய்ப்புண்டு). தமிழா கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவிலும் பணியாற்ற விருப்புடன் சேர்ந்து இன்னும் மறைவாய் இருக்கிறேன் :-).&#160; இவையன்றி மேலும் வரும் சில வேண்டுகோள்களை மறுத்து வருகிறேன். </p>
<p>இவை அனைத்தும் ஒரு சமன்பட்ட ஈடுபாட்டில் இயன்றவரை செய்ய முடியுமா என்று இவ்வாண்டும் தொடர்ந்து முயல்வேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பொங்கல் வாழ்த்துகளும் புதிய ஆரம்பங்களுக்கான வாழ்த்துகளும். </p>
<p>புதிய ஆரம்பங்கள் புத்தாண்டின் போது மட்டும் தான் ஆரம்பிக்க வேண்டுமென்பதில்லை. </p>
<p>&#160;</p>
<blockquote><p>நினைவு நல்லது வேண்டும்</p>
<p>நெருங்கின பொருள் கைப்படவேண்டும். </p>
<p>ஓம் ஓம் ஓம்!</p>
</blockquote>
<p> <iframe height="274" src="http://www.youtube.com/embed/8LZWb23utMg?rel=0" frameborder="0" width="480" allowfullscreen="allowfullscreen"></iframe>
<p>குறிப்பு: <a href="http://www.valluvantamil.org/">வள்ளுவன் தமிழ் மையம்</a> தமிழ்ப்பள்ளியின் சார்பாகச் சென்ற வாரம்&#160; நடந்த தமிழர் திருநாள் விழாவில், <a href="http://salangaiarts.com/">சலங்கை ஆர்ட்சு</a> அகிலா சுப்ரமணியம் அவர்களின் வழிப்படுத்தலில் என் மகள்கள் இருவரும் பங்கு கொண்ட குழு நடனம். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/373/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>குத்துப்புள்ளி</title>
		<link>http://blog.selvaraj.us/archives/372</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/372#comments</comments>
		<pubDate>Sun, 22 Jan 2012 18:11:05 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<category><![CDATA[Bullet]]></category>

		<category><![CDATA[List]]></category>

		<category><![CDATA[ToDo]]></category>

		<category><![CDATA[தமிழ்மணம்]]></category>

		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/372</guid>
		<description><![CDATA[செய்யவேண்டிய செயல்கள் எனப் பட்டியல் போடும் பழக்கம் ஏதோ ஒரு வகையில் எனக்குப் பல காலமாக, பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அவ்வேலைகள் திறம்படச் செய்யப்படுகின்றனவா என்பது வேறு விசயம். மேலும் அது பற்றிப் பேசும் முன் ஒரு சிறு கிளைக்கதைக்குள் நுழைந்து வருவோம். 
ஈரோட்டில் முக்கியமான ஒரு சந்திப்பான பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து கச்சேரி வீதி வழியாகப் போனால், அருகில் காரை பெயர்ந்த சுற்றுச்சுவரோடு தாசில்தார்வட்டாட்சியர் அலுவலகம் வரும். அதன் எதிரே வரிசையாகச் சில நகலெடுக்கும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>செய்யவேண்டிய செயல்கள் எனப் பட்டியல் போடும் பழக்கம் ஏதோ ஒரு வகையில் எனக்குப் பல காலமாக, பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அவ்வேலைகள் திறம்படச் செய்யப்படுகின்றனவா என்பது வேறு விசயம். மேலும் அது பற்றிப் பேசும் முன் ஒரு சிறு கிளைக்கதைக்குள் நுழைந்து வருவோம். </p>
<p>ஈரோட்டில் முக்கியமான ஒரு சந்திப்பான பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து கச்சேரி வீதி வழியாகப் போனால், அருகில் காரை பெயர்ந்த சுற்றுச்சுவரோடு <del datetime="2012-01-23T01:24:51+00:00">தாசில்தார்</del>வட்டாட்சியர் அலுவலகம் வரும். அதன் எதிரே வரிசையாகச் சில நகலெடுக்கும் கடைகள் (xerox) இருக்கும். நகலாக்கும் கடைகள் என்றாலும் அவை இன்னும் பல சேவைகளை அளித்து வரும். அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டிய படிவங்கள் விற்பனைக்குக் கிடைக்கும். மற்றும் ஆவணங்கள், கடன்பத்திரங்கள், அவற்றிற்கு ஒட்டவேண்டிய வருவாய்த்தலைகள் (revenue stamps) முதலியனவும் கிடைக்கும். அவற்றை எழுதிக் கொடுப்போர், ஆலோசனைகள் சொல்வோர் என்று பலரும் அங்கு இருப்பர். வரிசையாகப் பல தட்டச்சும் தாவணிப் பெண்கள் அக்காலத் தட்டச்சிகளில் தட்டச்சிக் கொண்டு சில வினாடிகளுக்கு ஒருமுறை அதன் நெம்புகோலை (lever) ஒரு முனையில் இருந்து மறு முனைக்குத் தள்ளிக் கொண்டிருப்பர். </p>
<p>அக்கடைகளில் தட்டச்சவும் பிற ஆவணங்கள் எழுதவும் தேவையான தாள்களை மொத்தமாகப் பெரிய அளவில் வாங்கி, சரியான அளவில் (A4 முதலியன) தேவைப்படும் அளவில் வெட்டி வைத்துக் கொள்வர். வெட்டியது போக எஞ்சி இருக்கும் துண்டுத் தாள்கள் நிறையக் கிடைக்கும். சுமார் இரண்டு அல்லது மூன்று அங்குல அகலமும், எட்டு/ஒன்பது அங்குல நீளமும் உள்ள அத்துண்டுகளைக் குத்துப்புள்ளித் தாள்கள் என்பர். ஒரு குடும்ப நண்பர் வைத்திருந்த கடையில் சொல்லி வைத்திருந்தால் அந்தத் துண்டுத் தாள்களை எறிந்துவிடாமல் எடுத்து வைத்துத் தருவார்கள். அதை எனது வீட்டிலும், தாத்தா/மாமாவின் கடையிலும், ஏதேனும் பட்டியல் போட, குறிப்புகள் எழுத, சிறு கணக்குகள் எழுத என்று பயன்படுத்துவார்கள். </p>
<p>&quot;நடராசு, அப்புறமா நீங்க இங்க வர்றப்பக் கொஞ்சம் குத்துப் புள்ளித் தாள் இருந்தா எடுத்துட்டு வாங்க&quot;</p>
<p>&quot;சரிங்கையா&quot;</p>
<p> <a href="http://blog.selvaraj.us/archives/372#more-372" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/372/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>புதியன புகுதலும்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/357</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/357#comments</comments>
		<pubDate>Sat, 21 Jan 2012 16:47:47 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[கண்மணிகள்]]></category>

		<category><![CDATA[பயணங்கள்]]></category>

		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<category><![CDATA[SkyVenture]]></category>

		<category><![CDATA[தமிழ்மணம்]]></category>

		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/357</guid>
		<description><![CDATA[புவியீர்ப்பு விசையின்றி மிதக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தன் விருப்பமொன்றை முன்பொரு நாள் வெளிப்படுத்தினாள் நிவேதிதா. &#34;It will be so cool! &#34;
பள்ளியில் ஏதேனும் விண்வெளி வீரர் விண்கலத்தினுள் மிதக்கும் அசைபடங்கள் காட்டப் பட்டிருக்கலாம். இல்லை அவளாகவே எங்காவது படித்திருக்கலாம். அப்போலா-13 படத்தை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்த அன்று கூடக் குப்புறப் படுத்துத் தூங்கினார்களே இருவரும்? ஒருவேளை வான்வெளியில், விண்கலத்தினுள் ஆள்களும் பொருள்களும் மிதக்கும் அக்காட்சி வரும்போது விழித்துத் தான் இருந்தார்களோ?

&#34;அந்த மாதிரி எடம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>புவியீர்ப்பு விசையின்றி மிதக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தன் விருப்பமொன்றை முன்பொரு நாள் வெளிப்படுத்தினாள் நிவேதிதா. &quot;It will be so cool! &quot;</p>
<p>பள்ளியில் ஏதேனும் விண்வெளி வீரர் விண்கலத்தினுள் மிதக்கும் அசைபடங்கள் காட்டப் பட்டிருக்கலாம். இல்லை அவளாகவே எங்காவது படித்திருக்கலாம். அப்போலா-13 படத்தை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்த அன்று கூடக் குப்புறப் படுத்துத் தூங்கினார்களே இருவரும்? ஒருவேளை வான்வெளியில், விண்கலத்தினுள் ஆள்களும் பொருள்களும் மிதக்கும் அக்காட்சி வரும்போது விழித்துத் தான் இருந்தார்களோ?</p>
<p><a href="http://blog.selvaraj.us/images/2012/01/clip-image001.png"><img style="background-image: none; border-right-width: 0px; margin: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="clip_image001" border="0" alt="clip_image001" src="http://blog.selvaraj.us/images/2012/01/clip-image001-thumb.png" width="229" height="126" /></a></p>
<p>&quot;அந்த மாதிரி எடம் அமெரிக்கால எங்கயோ இருக்குடா. போய்க் கொஞ்சம் நேரம் அப்படி ஈர்ப்புச்சக்தி இல்லாம மெதக்க முடியும்னு நினைக்கறேன்&quot;</p>
</p>
<p> <a href="http://blog.selvaraj.us/archives/357#more-357" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/357/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>கிரந்தம் (இயன்றவரை) தவிர்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/350</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/350#comments</comments>
		<pubDate>Fri, 20 Jan 2012 04:18:57 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[சமூகம்]]></category>

		<category><![CDATA[தமிழ்]]></category>

		<category><![CDATA[கிரந்தம் தவிர்]]></category>

		<category><![CDATA[தமிழ்மணம்]]></category>

		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/350</guid>
		<description><![CDATA[&#34;ராசாவையன எப்பவும் மனசுல வச்சுக்க&#34;, என்பார் என் ஆத்தா. அம்மாவும் கூட ஊருக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் அப்படித் தான் சொல்லி அனுப்புவார்கள். கண்ணாக வளர்த்த மகன் எங்கோ காணாத இடத்துக்குப் போகிறானே என்று அவரால் முடிந்த அளவுக்குப் என்னைப் பத்திரப்படுத்த எங்கள் சாமியையும் பொட்டலம் கட்டி உடன் அனுப்பி வைப்பார். ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சாமி. பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் முன்பெல்லாம் குலதெய்வம் சாமியின் பெயர் வருமாறு தான் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>&quot;ராசாவையன எப்பவும் மனசுல வச்சுக்க&quot;, என்பார் என் ஆத்தா. அம்மாவும் கூட ஊருக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் அப்படித் தான் சொல்லி அனுப்புவார்கள். கண்ணாக வளர்த்த மகன் எங்கோ காணாத இடத்துக்குப் போகிறானே என்று அவரால் முடிந்த அளவுக்குப் என்னைப் பத்திரப்படுத்த எங்கள் சாமியையும் பொட்டலம் கட்டி உடன் அனுப்பி வைப்பார். <a href="http://blog.selvaraj.us/archives/88">ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சாமி</a>. பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் முன்பெல்லாம் குலதெய்வம் சாமியின் பெயர் வருமாறு தான் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் வைப்பார்கள். முழுதாக அதே பெயர் இல்லை என்றாலும் அதில் ஏதேனும் ஒரு பகுதியோ, எழுத்தோ இருக்கும். அப்படித் தான் என் பெயரிலும் ஒரு ராசு ஒட்டிக் கொண்டிருக்கிறது. </p>
<p><a href="http://blog.selvaraj.us/images/2012/01/clip-image001.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; margin: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="clip_image001" border="0" alt="clip_image001" src="http://blog.selvaraj.us/images/2012/01/clip-image001-thumb.jpg" width="244" height="184" /></a></p>
<p>அப்பேர்ப்பட்ட எங்கள் சாமி ராசாவையனைக் கூட இப்போது யாரோ ராஜலிங்கமூர்த்தி என்று பெயரை மாற்றி விட்டார்கள். பத்தாததுக்கு முன்னாலே ஒரு ஶ்ரீயையும் போட்டு வைத்து விட்டார்கள். யார் இப்படி மாற்றியது எனத் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அம்மா, அப்பா, ஊர்ச்சனம் எல்லாம் சொல்லித்தந்த ராசாவையன் தான். </p>
<p>  <a href="http://blog.selvaraj.us/archives/350#more-350" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/350/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>நுரை மட்டும் போதும்:  கதையின் கதை</title>
		<link>http://blog.selvaraj.us/archives/345</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/345#comments</comments>
		<pubDate>Thu, 19 Jan 2012 05:29:10 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<category><![CDATA[சிறுகதை]]></category>

		<category><![CDATA[தமிழ்]]></category>

		<category><![CDATA[Just Lather]]></category>

		<category><![CDATA[கொலம்பியா]]></category>

		<category><![CDATA[மொழிக்கல்வி]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/345</guid>
		<description><![CDATA[எங்கிருந்து எப்படிப் போய் ஒரு இசுப்பானியக் கதையைப் பிடித்து, அதன் ஆங்கில வடிவத்தில் இருந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன் என்பது பற்றிய கதையின் கதையாகக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது எனக்கு.

Espuma y nada más கதையின் மூல வடிவத்தை எழுதிய எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) தென்னமெரிக்காவில் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். இலக்கியத்திற்கு நோபல் பரிசு வாங்கிய காப்ரியல் கார்சியா மார்க்குவேசும், இடைகள் பொய் சொல்லாப் பாப்பிசைப் புகழ் சக்கீராவும் கூட இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம் என்பது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எங்கிருந்து எப்படிப் போய் ஒரு இசுப்பானியக் கதையைப் பிடித்து, அதன் ஆங்கில வடிவத்தில் இருந்து <a href="http://blog.selvaraj.us/archives/341">தமிழாக்கம் செய்திருக்கிறேன்</a> என்பது பற்றிய கதையின் கதையாகக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது எனக்கு.</p>
<p><a href="http://blog.selvaraj.us/images/2012/01/image1.png"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="image" border="0" alt="image" src="http://blog.selvaraj.us/images/2012/01/image-thumb1.png" width="134" height="130" /></a></p>
<p>Espuma y nada más கதையின் மூல வடிவத்தை எழுதிய எர்ணான்டோ டேய்யசு (<a href="http://biography4u.com/tellez.html">Hernando Tellez</a>) தென்னமெரிக்காவில் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். இலக்கியத்திற்கு நோபல் பரிசு வாங்கிய <a href="http://en.wikipedia.org/wiki/Gabriel_Garc%C3%ADa_M%C3%A1rquez">காப்ரியல் கார்சியா மார்க்குவேசும்</a>, <a href="http://www.youtube.com/watch?v=FLQgjEhH400">இடைகள் பொய் சொல்லாப் பாப்பிசைப் புகழ் சக்கீராவும்</a> கூட இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம் என்பது முழுதும் தொடர்பில்லா எச்சுத் தகவல்கள். </p>
<p>கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் பிறந்து வளர்ந்த எர்ணான்டொ டேய்யசு இளம் வயதிலேயே பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் எழுதி வந்தாலும், தனது நாற்பதுகளில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்ட பிறகே மிகவும் அறியப்பட்டிருக்கிறார். பின்னர், கொலம்பிய அரசிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணி புரிந்திருக்கிறார். இவர் வாழ்ந்த காலத்தில் கொலம்பியா பல உள்நாட்டுப் போர்களும், இராணுவக் கெடுபிடிகள், வன்முறை, போன்றவற்றைச் சந்தித்திருக்கிறது. தனது பிறந்த மண்ணின் சோகங்களையும் சோதனைகளையும், நடைமுறை வாழ்வின் சிக்கல்களையும் ஊன்றிக் கவனித்து அதையொட்டிய கதைகளைத் தனது எழுத்தின் மூலம் அலங்கரித்திருக்கிறார் - என்னும் இவ்விவரங்கள் எல்லாம் பொதுவில் ஒரு கூகுள் தேடலிலோ விக்கிப்பீடியாவின் மூலமோ எளிதில் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றின் மாணவராக இருந்து இவர் முந்தைய நூற்றாண்டுகளில் நடந்த மூன்று புரட்சிப்போர்களால் வெனிசுவேலா, எக்குவடோர் நாடுகள் கொலம்பியாவில் இருந்து பிரிந்து போனதைப் பற்றியும் நன்கு புரிந்து வைத்திருந்தார் என்கிறது விக்கி. </p>
<p>  <a href="http://blog.selvaraj.us/archives/345#more-345" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/345/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>நுரை மட்டும் போதும் - எர்ணான்டோ டேய்யசு</title>
		<link>http://blog.selvaraj.us/archives/341</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/341#comments</comments>
		<pubDate>Wed, 18 Jan 2012 07:00:20 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[இலக்கியம்]]></category>

		<category><![CDATA[சிறுகதை]]></category>

		<category><![CDATA[Hernando_Tellez]]></category>

		<category><![CDATA[Translation]]></category>

		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/341</guid>
		<description><![CDATA[



 மூலம்:
Espuma y nada más&#160; -எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) 




ஆங்கிலத்தில்: 
Just Lather, That&#8217;s All&#160; -டானல்டு யேட்சு (Donald A. Yates) 




தமிழில்: 
நுரை மட்டும் போதும் -இரா. செல்வராசு (R. Selvaraj)




&#160;
&#160;

&#160;
உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், அவன் அதனைக் கவனிக்கவில்லை. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>
<table border="0" cellspacing="0" cellpadding="2" width="525">
<tbody>
<tr>
<td valign="top" width="523"> மூலம்:
<p><em><strong><a href="http://en.wikipedia.org/wiki/Hernando_T%C3%A9llez">Espuma y nada más&#160; -எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez)</a></strong></em><em> </em></p>
</td>
</tr>
<tr>
<td valign="top" width="523">
<p>ஆங்கிலத்தில்: </p>
<p><strong><a href="http://www2.ups.edu/faculty/velez/LAS100/tellez.htm">Just Lather, That&#8217;s All&#160; -டானல்டு யேட்சு (Donald A. Yates)</a></strong><em> </em></p>
</td>
</tr>
<tr>
<td valign="top" width="523">
<p>தமிழில்: </p>
<p><strong>நுரை மட்டும் போதும் </strong><em>-இரா. செல்வராசு (R. Selvaraj)</em></p>
</td>
</tr>
</tbody>
</table>
<p>&#160;</p>
<p>&#160;</p>
<p><a href="http://blog.selvaraj.us/images/2012/01/image.png"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="image" border="0" alt="image" src="http://blog.selvaraj.us/images/2012/01/image-thumb.png" width="333" height="224" /></a></p>
<p>&#160;</p>
<p>உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், அவன் அதனைக் கவனிக்கவில்லை. என்னுடைய உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளும் நோக்கில் சவரக் கத்தியைத் தீட்டுவதை நான் தொடர்ந்து கொண்டிருந்தேன். என் பெருவிரல் சதையில் வைத்து அதனைச் சோதித்துப் பார்த்துவிட்டு வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் கணத்தில் அவன் தனது துப்பாக்கி தொங்கிக் கொண்டிருந்த குண்டுகள் நிறைந்த கச்சையைக் கழட்டினான். சுவற்றில் இருந்த கொக்கியில் அதனை மாட்டிவிட்டு, அதன் மேலே தனது இராணுவத் தொப்பியையும் வைத்தான். பிறகு தன் கழுத்துப் பட்டியின் முடிச்சினைத் தளர்த்திக் கொண்டே என்னை நோக்கித் திரும்பி, &quot;வெய்யல் நரகமாக் கொளுத்துது; எனக்குச் சவரம் செஞ்சு விடு&quot; என்று நாற்காலியில் அமர்ந்தான். </p>
<p>அவனுக்கு நாலு நாள்த் தாடி இருக்கும் என்று அனுமானித்தேன். எங்களது படைகளைத் தேடிச் சென்ற அவனது பயணத்தின் நான்கு நாட்கள்! வெய்யல் காய்ச்சிய அவனது முகம் சிவந்து போய்க் கிடந்தது. கவனமாக, சோப்பினைத் தயார் செய்ய ஆரம்பித்தேன். சில வில்லைகளை வெட்டி எடுத்துக் கோப்பைக்குள் போட்டு, சிறிது வெந்நீர் கலந்து, பூச்சுமட்டையால் கலக்க ஆரம்பித்தேன். உடனடியாக நுரை மேலெழ ஆரம்பித்தது. </p>
<p>&quot;குழுவில் மத்த பசங்களுக்கும் இவ்வளவு தாடி இருக்கும்&quot; என்றான். நான் நுரையைக் கலக்குவதைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். </p>
<p>&quot;ஆனா, நாங்க ஓரளவுக்குச் சரியாச் செஞ்சுட்டோம், தெரியுமா. முக்கியமானவங்களப் பிடிச்சுட்டோம். கொஞ்ச பேரப் பொணமாக் கொண்டாந்தோம். இன்னும் கொஞ்சம் பேர உசுரோட பிடிச்சிருக்கோம். ஆனா, கூடிய சீக்கரம் அவங்களும் செத்துப் போயிருவாங்க&quot;.</p>
<p>&quot;எத்தன பேரப் பிடிச்சீங்க?&quot;</p>
<p>&quot;பதினாலு பேர். அவங்களக் கண்டுபிடிக்கக் காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போக வேண்டியிருந்துச்சு. ஆனா, பழி வாங்கீருவோம். ஒருத்தன் கூட இதிலிருந்து உசுரோட வெளிவர மாட்டான். ஒருத்தன் கூட&quot;.</p>
<p>   <a href="http://blog.selvaraj.us/archives/341#more-341" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/341/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>பழையன கழிதலும்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/338</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/338#comments</comments>
		<pubDate>Tue, 17 Jan 2012 05:16:22 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[பொது]]></category>

		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<category><![CDATA[தமிழ்மணம்]]></category>

		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<category><![CDATA[பழையன]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/338</guid>
		<description><![CDATA[&#34;பழச விட்டுடு; புதுசா புடிச்சுக்கோ&#34; என்று போகித்தருமர் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார்; அவர் நினைவாகத் தான் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம் என்று போகிற போக்கில் கதை விடலாமா என நினைத்தேன். ஆனால், அதுதான் அன்றே தமிழன் &#34;பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல கால வகையினானே&#34; என்று நன்னூலில் எழுதி வைத்திருக்கிறானே! மிகவும் பரவலாய் அறியப்பட்ட நன்னூல் வாசகம் இதுவாகத் தான் இருக்கும். இணையத் தேடலில் இதற்குப் பற்பல ஆயிரம் தேடல் முடிவுகள்! அதனால் எனது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>&quot;பழச விட்டுடு; புதுசா புடிச்சுக்கோ&quot; என்று போகித்தருமர் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார்; அவர் நினைவாகத் தான் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம் என்று போகிற போக்கில் கதை விடலாமா என நினைத்தேன். ஆனால், அதுதான் அன்றே தமிழன் &quot;பழையன கழிதலும் புதியன புகுதலும் வலுவல கால வகையினானே&quot; என்று நன்னூலில் எழுதி வைத்திருக்கிறானே! மிகவும் பரவலாய் அறியப்பட்ட நன்னூல் வாசகம் இதுவாகத் தான் இருக்கும். இணையத் தேடலில் இதற்குப் பற்பல ஆயிரம் தேடல் முடிவுகள்! அதனால் எனது கதை இங்கு செல்லவும் செல்லாது. தேவையும் இல்லை. </p>
<p><a href="http://blog.selvaraj.us/images/2012/01/old-2.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="old (2)" border="0" alt="old-new" src="http://blog.selvaraj.us/images/2012/01/old-2-thumb.jpg" width="241" height="244" /></a></p>
<p>நன்னூல்க்காரர் இதை எனக்கென்றே எழுதி வைத்திருக்கவும் ஒரு சாத்தியம் இருக்கிறது. எதையும் எளிதில் விட்டுவிட முடியாமல் சேர்த்து வைக்க முயலும் நான், அண்மையில் இந்தப் பழையன விட்டுவிடுதலில் கொஞ்சம் நுழைந்து பார்த்தேன். ஆகா! என்ன ஒரு சுதந்திர உணர்வு. பழந்தமிழன் சொல்லி வைத்துப் போன ஒன்றை இப்படியாகச் செய்ய வைத்த பழி பாவத்தை எனது அலுவத்தார் மீது தான் போட வேண்டும். </p>
<p>  <a href="http://blog.selvaraj.us/archives/338#more-338" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/338/feed</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>தமிழ்மணம் நட்சத்திர வாரப் பொங்கல்</title>
		<link>http://blog.selvaraj.us/archives/334</link>
		<comments>http://blog.selvaraj.us/archives/334#comments</comments>
		<pubDate>Mon, 16 Jan 2012 05:02:45 +0000</pubDate>
		<dc:creator>இரா. செல்வராசு</dc:creator>
		
		<category><![CDATA[பொது]]></category>

		<category><![CDATA[சுயம்]]></category>

		<category><![CDATA[தமிழ்மணம்]]></category>

		<category><![CDATA[நட்சத்திரம்]]></category>

		<category><![CDATA[பொங்கல்]]></category>

		<guid isPermaLink="false">http://blog.selvaraj.us/archives/334</guid>
		<description><![CDATA[தமிழ் இணைய நண்பர்களுக்கு வணக்கம்.  இது ஏதடா, எங்கேயோ கேட்ட குரல் போல் இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம்.  இவனிங்கு நட்சத்திரமாகவா என்று தோன்றினாலும் அதுவும் மிகவும் நியாயமான ஒன்றே.  வாருங்கள்… வருடத்திற்கு ஒன்று இரண்டு என்னும் கணக்கில் இடுகை(கள்) எழுதிக் கொண்டிருந்தவனைத் தமிழ்மணத்தின் நட்சத்திரமாக்கி இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று எனக்கும் கேட்க வேண்டும். 
இருப்பினும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நன்னம்பிக்கையின் வழி வந்த தமிழர் நாமெல்லோரும். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழ் இணைய நண்பர்களுக்கு வணக்கம்.  இது ஏதடா, எங்கேயோ கேட்ட குரல் போல் இருக்கிறதே என்று உங்களுக்குத் தோன்றலாம்.  இவனிங்கு நட்சத்திரமாகவா என்று தோன்றினாலும் அதுவும் மிகவும் நியாயமான ஒன்றே.  வாருங்கள்… வருடத்திற்கு ஒன்று இரண்டு என்னும் கணக்கில் இடுகை(கள்) எழுதிக் கொண்டிருந்தவனைத் தமிழ்மணத்தின் நட்சத்திரமாக்கி இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று எனக்கும் கேட்க வேண்டும். </p>
<p>இருப்பினும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நன்னம்பிக்கையின் வழி வந்த தமிழர் நாமெல்லோரும். அதனால் ஏதோ ஒரு வழியை மனதில் வைத்து என்னை நட்சத்திரமாக்கி அழைத்துவிட்ட தமிழ்மணத்தை மன்னித்து விட்டுவிடுவோம்.  புதிய தை மாதத்தில், பொங்கல் நல்வாரத்தில் மீண்டும் உங்களைத் தமிழ்மணத்தின் வழியாகவும் எனது பதிவின் வழியாகவும் சந்திப்பதில் மகிழ்வு எய்துகிறேன். எல்லோருக்கும் எனது <a href="http://blog.selvaraj.us/archives/267">இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்</a>. </p>
<p><img src='http://blog.selvaraj.us/images/2012/01/pongal2004.JPG' alt='பொங்கல் 2004' /></p>
<p> <a href="http://blog.selvaraj.us/archives/334#more-334" class="more-link">(more&#8230;)</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://blog.selvaraj.us/archives/334/feed</wfw:commentRss>
		</item>
	</channel>
</rss>

